நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஜினியின் 169 ஆவது படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இதுதான் வெளிவந்துள்ள அறிவிப்பு. இதற்குப் பின்னால் வெளிவராத பல செய்திகள் இருக்கின்றனவாம். அவை
சினிமா
காக்காமுட்டை மனிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாணி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல்ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியான இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் பெரிதும் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுரையில்…. அன்பிற்கினிய தம்பி
2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி. அப்படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை
ஜெயம்ரவி இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பும் முதல்பார்வையும் இன்று (பிப்ரவரி 12,2022) வெளியானது. ஜெயம்ரவியின் 28 ஆவது படமான இதை,ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப்படத்திற்கு அகிலன் (King Of The
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விலையைக் குறைத்து அண்மையில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நுழைவுச்சீட்டு விலையைக் குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர். இந்நிலையில், இந்தச் சிக்கல் தொடர்பாக தொடரப்பட்ட
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 169 ஆவது
சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “எஸ்கே20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘எஸ்கே20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியிருக்கின்றன. இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தெலுங்கு இயக்குநர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகச்
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் பிப்ரவரி 11 அன்று வெளியாகவுள்ளது.பட வெளியீட்டுக்கு முன்பே அப்படம் பார்த்த அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது, விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‛டைகர்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது.






















