வாழை படத்தில் ஒரு காட்சி. வாழை மரத் தோப்புக்குள் ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்துச் சாப்பிடுவான் ஒரு சிறுவன்.அதைப் பார்த்ததும் தோட்டத்து உரிமையாளர், அச்சிறுவனை அடித்துவிட்டு யார் வீட்டுத் தோட்டத்துல வந்து யார்? சாப்பிடுறது? என்று திட்டுவார். இந்தக் காட்சி இந்தப் பொருளிலேயே
கட்டுரைகள்
அலிஜான்ட்ரோ ஜோடோர்வஸ்கி ஓர் உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்.ராஜாதிராஜா, மன்னர் மன்னன் எனும் பொருளில் இயக்குநர்களுக்கெல்லாம் இயக்குநர் என்கிற பெயர் பெற்றவர். திரைப்படத் தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், நடிகர், எழுத்தாளர், கவிஞர், இசைக்கலைஞர் மற்றும் காமிக்ஸ் எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். பிப்ரவரி 17, 1929 அன்று சிலியின் டோகோபில்லாவில் பிறந்தவர்.
திரையுலகில் புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள
சின்னச்சின்ன இழை பின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலைகளின் மையமாக மட்டும் கொங்குமண்டலம் விளங்கவில்லை. உழைப்போடு கனவையும் சேர்த்துப் பின்னிப்பின்னி மக்களை மகிழ்வித்த மண்ணும் கொங்குமண்தான். இந்த உலகத்திற்கு திரைப்படங்கள் அறிமுகமான பத்தாண்டுகளில் அதை கோவைக்குக் கொண்டுவந்தவர் சாமிக்கண்ணுவின்சென்ட். தொடர்வண்டித்துறையில் அலுவலகஊழியராக இருந்த அவர் திரைப்படங்கள் மீதான
நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 17,2021) அதிகாலை 4.35 மணியளவில் திடுமென மறைந்தார். திரையுலகினரையும் திரைப்பட இரசிகர்களையும் அவரது இறப்பு பேரரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யும்விதமாகப் பல்வேறு பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுத்த கதை தவறானது
தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல காவியங்களைப் படைத்தவர். பின்னாட்களில் விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
கனவுகளையே உணவாகக் கொண்டு உலாவரும் படைப்பு மனதினருக்கு முன்னோடி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி
மாயா, ஜோக்கர்,கஷ்மோரா,மாநகரம், என் ஜி கே, கைதி உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எழுதியுள்ள கட்டுரை…. திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை
திரைப்படத் தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்கிற திட்டமிடலும் இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட