Home Posts tagged bharathiraja
விமர்சனம்

நிறம் மாறும் உலகில் – திரைப்பட விமர்சனம்

நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும்
விமர்சனம்

கள்வன் – திரைப்பட விமர்சனம்

பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.இவானாவோ, நீயே ஒரு திருடன் நீ என்னைக் காதலிப்பதா? என்று ஏளனம் செய்து நிராகரிக்கிறார். இவானாவைக் காதலிப்பதற்காகத் திருட்டை விட்டுவிட்டு வேறு
விமர்சனம்

மார்கழித் திங்கள் – திரைப்பட விமர்சனம்

அப்பா அம்மாவை இழந்து தாத்தாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பள்ளிமாணவியாக நாயகி ரக்‌ஷனா அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வருகிறார் நாயகன் ஷ்யாம்செல்வன். அதுவரை முதல்மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்த நாயகி, நாயகன் வந்தபின்பு இரண்டாமிடத்துக்குப் போகிறார். இதனால் நாயகன் மீது கோபம் கொண்டு அவரிடமே சவால் விட்டு முதலிடம் பிடிக்கப் போராடுகிறார். அதையொட்டி நடக்கும்
விமர்சனம்

கருமேகங்கள் கலைகின்றன – திரைப்பட விமர்சனம்

உறவுகளின் மேன்மைகள் பேசிப்பேசித் தீர்பவை அன்று வளர்ந்து வளர்ந்து நெக்குருக வைப்பவை. அவற்றைக் கையாள்வதில் தேர்ந்தவர் தங்கர்பச்சான். இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி நெகிழ வைக்கிறார். அவருக்குத் தோதாக பாரதிராஜா, கவுதம்மேனன், யோகிபாபு, அதிதிபாலன், சாரல் ஆகியோர் அமைந்திருக்கிறார்கள். பொருளியலில் உச்சாணியில் இருக்கும் பாரதிராஜாவும் அதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்
Uncategorized விமர்சனம்

திருவின்குரல் – திரைப்பட விமர்சனம்

நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜா மகன் பிரகாஷ்ராஜ். பிரகாஷ்ராஜின் மகன் தனுஷ்.  மூன்று ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் பிரகாஷ்ராஜுன் தனுஷும் பேசிக்கொள்ளமாட்டார்கள். பாரதிராஜாதான் அவர்களுடைய இணைப்புப் புள்ளி.  அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன சிக்கல்? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதோடு தனுஷின் வாழ்க்கைத்துணை எப்படி அமைகிறது? என்பதையும் நகைச்சுவை கலந்து
சினிமா செய்திகள்

சசிகுமாருக்கு முட்டுக்கட்டை போடும் பாரதிராஜா – வெடிக்கும் விமர்சனங்கள்

இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தன் உயிரைத் துச்சமென மதித்து,
சினிமா செய்திகள்

புதியபாதையில் சுசீந்திரன் – படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் புதியபடம் ‘வள்ளி மயில்’.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரவேற்பைப் பெற்ற ஃபரியா அப்துல்லா ( Faria Abdullah ) வள்ளி மயிலாக நடிக்கிறார்.  இவர்களோடு ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, மனிஷா யாதவ், அறந்தாங்கி நிஷா
செய்திக் குறிப்புகள்

கருணாசைப் பார்த்துக் கண்ணீர் வந்தது – ஆதார் படவிழாவில் பாரதிராஜா நெகிழ்ச்சி

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து
சினிமா செய்திகள்

பாரதிராஜா தேனாண்டாள் முரளி அதிரடி முடிவு – வலிமை ரிலீஸில் சிக்கல்

தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது. இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்