டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு
சினிமா
நடிகர் அசோக் செல்வன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்படம் அசோக்செல்வனின் 23 ஆவது படமாம்.அதனால் இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கு முன்பாக இப்படத்தை அவர் பெயரிலேயே அதாவது, ஏஎஸ் 23 (AS 23) என்று
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14,2024 அன்று மாலை வெளியானது.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின்
2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நைனார். இவர் இப்போது நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘மனுசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், தமிழ், ஹக்கிம் ஷா,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர்
நடிகர் கவின் இப்போது மாஸ்க்,கிஸ்,மற்றும் விஷ்ணுஎடவன் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில்,மாஸ்க் படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். கவின் நாயகனாக நடிக்கும் மாஸ்க் படத்தில், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பால
1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் இரசிகர்கள் அதிகரித்தனர். ‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’, ‘பூவேலி’, ‘படையப்பா’, ‘சுயம்வரம்’, ‘மலபார்
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்துக்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இந்திப்படம் இயக்கப் போய்விட்டதால் அப்படம் தடைபட்டிருக்கிறது. இவ்விரு படத்துக்கும் இடையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய
நேற்று தை அமாவாசை நாள்.அதனால் பல படங்களின் அறிவிப்பு பெயர் அறிவிப்பு ஆகியன வெளியிடப்பட்டன. அந்த வகையில்,சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படம்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா’ திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதன் தொடர்ச்சியாக 2015 இல் ‘காஞ்சனா 2’ மற்றும் 2019 இல் ‘காஞ்சனா 3’ என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். திகில் – நகைச்சுவை பாணியில் உருவான இப்படங்கள் அனைத்து வயது இரசிகர்களையும் கவர்ந்தது. ‘காஞ்சனா’ படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக ‘காஞ்சனா 4’ படத்தைத்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று, குடியரசு தினத்தினை முன்னிட்டு