சினிமா செய்திகள்

மனைவியைப் பிரிந்தார் இயக்குநர் பாலா – திரையுலகம் அதிர்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முன்னணி நடிகர்களாக உலாவர பாலாவே காரணம்.

இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் பாலா மனைவியைப் பிரிந்துள்ளார். கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், 5.3.2022 அன்று இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று சுமூகமான முறையில் பிரிந்துள்ளார்கள்.

மனைவியைப் பிரிந்தாலும் மகள் பிரார்த்தனாவைத் தன்னுடனே வைத்துக்கொண்டிருக்கிறார் பாலா. சட்டப்பூர்வ அனுமதியுடன் மகளைத் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த விவாகரத்து தகவல் வெளியானதும் திரையுலகில் பலரும் அதிர்ச்சியடைந்து இது உண்மைதானா? என விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts