September 23, 2023
Home Posts tagged Film Review
Uncategorized

சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் என்றார் திருவள்ளுவர். அதிகாரவர்க்கத்திடம் அணுகிப்போனால் ஆபத்து அதேசமயம் விலகிப் போனாலும் ஆபத்து என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக வந்திருக்கும் படம் சான்றிதழ். எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கும் ஒரு கிராமத்துக்கு
Uncategorized விமர்சனம்

காடப்புறா கலைக்குழு – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்கள் வருகையால் கிராமிய நடனக்கலைகள் பாதிப்புக்கு ஆளாகின, அதே சமயம் அக்கிராமிய நடனக்கலைகள் மற்றும் கலைஞர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் காடப்புறா கலைக்குழு. இந்தப் பெயரில் கலைக்குழு நடத்தி வருகிறார் முனீஷ்காந்த். தம் குழுவினரைக் குடும்பம்போல் பாவிக்கிறார். ஒரு கலைக்குழு இருந்தால்
விமர்சனம்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – திரைப்பட விமர்சனம்

ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொள்ளும் கதை என்று முன்னுரை வாசித்துவிட்டுத் தொடங்குகிறது படம். சொத்துக்காக தன்னை அடையத் துடிக்கும் மாமன்களிடமிருந்து ஒதுங்கி வாழ்கிறார் நாயகி சித்தி இதானி. அதோடு நாயகன் ஆர்யாவைச் சந்திக்க முனைகிறார். அது தெரிந்து ஆர்யாவே அவரைத் தேடி வருகிறார். அப்புறம் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு உள்ளாடை தெரிய அடித்து
விமர்சனம்

பிச்சைக்காரன் 2 – திரைப்பட விமர்சனம்

பெரும் பணக்காரர்களில் ஒருவரான விஜய்ஆண்டனிக்கு நண்பர்களின் சதியால் பிச்சைக்கார விஜய்ஆண்டனியின் மூளை வைக்கப்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பெரும்பணக்காரர் மற்றும் பிச்சைக்காரர் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களும் ஏற்கெனவே பார்த்ததுதான். நேர்த்தியாகச் செய்திருக்கிறார். நாயகி காவ்யாதாப்பருக்கு பாடல்கள் மற்றும் சில காட்சிகளில்
விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் – திரைப்பட விமர்சனம்

ஈழத்தமிழ் ஏதிலிகளின் வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். 2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும். ஈழத்திலிருந்து தப்பி கேரளாவுக்கு வரும் விஜய்சேதுபதி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சூழலில்,
விமர்சனம்

தீர்க்கதரிசி – திரைப்பட விமர்சனம்

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லிவிட்டு பல குற்றங்கள் நடக்கின்றன. தொடக்கத்தில் அந்தத் தகவலை அலட்சியப்படுத்தும் காவல்துறை, ஊடகங்களுக்குச் செய்தி தெரிந்து சிக்கல் பெரிதானதும் தீவிரமாகக் களமிறங்குகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? முன்கூட்டியே தகவல் சொல்லும் மர்மநபர் யார்? என்கிற இரகசியங்களை வெளிப்படுத்தும் படம் தீர்க்கதரிசி. காவல்துறை அதிகாரியாக வரும்
விமர்சனம்

யானை முகத்தான் – திரைப்பட விமர்சனம்

நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்து வந்த ரமேஷ்திலக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் யானை முகத்தான். பெயரைப் பார்த்ததுமே இது விநாயகக் கடவுள் சம்பந்தப்பட்ட படம் என்பது தெரிந்துவிடும். நாயகன் ரமேஷ்திலக் தீவிர விநாயக பக்தர்.ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருக்கும் அவர் அதைச் சரியாகச் செய்யாமல் எல்லோரையும் ஏமாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.அதனால் ஒரு கட்டத்தில் அவர்
Uncategorized விமர்சனம்

திருவின்குரல் – திரைப்பட விமர்சனம்

நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார் அருள்நிதி. கட்டிடப்பொறியாளரான அருள்நிதி அப்பா பாரதிராஜாவுடன் வாழ்ந்துவருகிறார்.
விமர்சனம்

ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பேய் பலரைக் கொல்கிறது. அப்படிக் கொல்லப்படுவர்களிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அந்த ஒற்றுமை என்ன? அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? என்பனவற்றை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் ரிப்பப்பரி. மாஸ்டர் மகேந்திரன் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் பயப்பட்டு நம்மைச் சிரிக்க
விமர்சனம்

பருந்தாகுது ஊர்க்குருவி – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது. அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின்