Home Archive by category விமர்சனம்

விமர்சனம்

விமர்சனம்

வதந்தி 2 – இணையத்தொடர் விமர்சனம்

2022 டிசம்பரில் வெளியான இணையத் தொடர் வதந்தி.ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர். மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை
விமர்சனம்

போட்டோகிராபர் – திரைப்பட விமர்சனம்

பயணக்கதைகள் சுவையானவை.அதுவும் அடர்ந்த வனத்துக்குள் அரியமரம் ஒன்றைத்தேடிப் பயணிக்கும் ஒரு புகைப்படக்காரரின் திகில் பயணம் மேலும் சுவாரசியமானது.அப்படி ஒரு கதைகளத்தைக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் போட்டோகிராபர். அரியமரத்தைப் படமெடுக்கச் செல்லும் புகைப்படக்காரர்,வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார்.யாரும் திரும்பி வரமுடியாத,ஆபத்தான அந்த வனப்பகுதியில்
விமர்சனம்

ஜி.டி.என் – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம், கலங்கல் என்னும் சிற்றூரில் 23.03.1893 அன்று பிறந்தவர் ஜி.டி.நாயுடு.துரைசாமி என்பது இவரின் இயற்பெயர். கோபாலசாமி இவரின் தந்தையார்.கோபாலசாமி துரைசாமி என்பதன் சுருக்கமே ஜி.டி. தொழில்துறைவித்தகர்,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் அறிவியல் கண்டுபிடிப்பாளர்,திறன்மிகு நிர்வாகி,சித்த மருத்துவர்,உயிரியல் விஞ்ஞானி,வேளாண் ஆராய்ச்சியாளர்,நிழற்படக் கலைஞர்,கட்டடக்கலை
விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

வளர்ப்புமகள் மமிதாபைஜுவை இராணுவ அதிகாரியாக்க முயல்கிறார் நாயகன் விஜய்.அந்தப் பயணத்தில் எதிர்பாராமல் ஓர் எதிரையைச் சந்திக்க நேருகிறது.அதனால் பல சிக்கல்கள்.அவற்றை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். நாயகனாக நடித்திருக்கும் விஜய்,வழக்கம்போல் நடித்திருக்கிறார்.சண்டை செய்திருக்கிறார்.நடனம் ஆடியிருக்கிறார்.அவ்வப்போது குத்து வசனங்கள் பேசியிருக்கிறார். நாயகனின்
விமர்சனம்

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

இந்தக்காலத்திலும்,கல்வி சுகாதாரம் ஆகிய அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லியிருக்கும் படம் அருள்வான். ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால்,அங்குள்ள வாழ்க்கைச் சூழல், கல்வி கற்கத் தடையாக இருக்கிறது.மாவட்ட ஆட்சியருக்கு அந்தச் சூழல்
விமர்சனம்

அன்பே டயானா – திரைப்பட விமர்சனம்

திரைப்படம் என்பது கதை சொல்லும் ஊடகமன்று உணர்வுகளைக் காட்சிகளாக்கி உலுக்கக்கூடிய ஊடகம் என்பது பலருக்குத் தெரிவதேயில்லை.ஜமா படம் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இதை உணர்ந்து உருவாக்கியிருக்கும் படம் அன்பே டயானா. சென்னை பெரம்பூரில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு அதேபகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதன் மீது காதல்.(ஆடுகளம் நினைவுக்கு வந்தால்
விமர்சனம்

ஐ நோபடி – திரைப்பட விமர்சனம்

ஒரு வங்கியில் கொள்ளை நடக்கும் நேரத்தில் அங்கே இருக்கிறார் நாயகன் பிருத்விராஜ்.அவர் அங்கு போன காரணத்தை வெளியில் சொல்லமுடியாத நிலை.அதனால் கொள்ளை போன பணம் மொத்தமும் அவரிடம்தான் இருக்கிறது என காவல்துறை உட்பட எல்லோருக்கும் சந்தேகம்.அதனால் நாயகன் பிருதிவிராஜ் மற்றும் அவருடைய குடும்பத்துக்குப் பெரும் சிக்கல்கள்.அவற்றிலிருந்து மீண்டார்களா? அந்தப்பணம் எங்கே? அவர் ஏன் வங்கிக்குப்
விமர்சனம்

லவ் ஓ லவ் – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்ப இளைஞர் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர் சரியாக வேலைக்குப் போய் ஒழுங்காக சம்பளம் வாங்கி அதை அப்படியே வீட்டில் கொடுப்பவர் ஆகிய நற்குணங்களைக் கொண்ட இளைஞர் வாழ்வில் காதல் வருகிறது.காதலியால் எல்லாம் உருமாறுகிறது.இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டிய சூழல்.இதனால் காதலே வேண்டாமென ஒதுங்கும் அவரை விடாமல் துரத்துகிறார் காதலி.அதனால்,ஒரு
Uncategorized விமர்சனம்

இதயம் முரளி – திரைப்பட விமர்சனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் தோல்விகளில் சிக்கும் கதாநாயகனின் கதைதான் இதயம் முரளி.நாயகனாக நடித்திருக்கும் அதர்வா,பள்ளிப் பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் தோல்வி அடைகிறது.கல்லூரிப் பருவத்தில் கயாடு லோஹர் மீது காதல் கொள்கிறார்.அந்தக் காதல் என்னவானது? அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை கலகலப்பாகச் சொல்ல விழைந்திருக்கும் படம் இதயம்
விமர்சனம்

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு – விமர்சனம்

மரணதண்டனை கோரும் குற்றவாளி,கொடுக்க மறுக்கும் நீதிபதி என்று மாறுபட்ட முறையில் தொடங்குகிறது படம்.அந்த குற்றவாளி யார்? அவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அதைச் செய்தார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். நாயகனாக நடித்திருக்கும் வெற்றி,சின்னச் சின்ன திருட்டுகள் செய்கிறவராகவும் பின்பு பெரிய காரியம் செய்யும் திடமானவராகவும் வேடமேற்றிருக்கிறார்.அந்த