இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கும் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில்
செய்திகள்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படமும் அப்படித்தான். இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் இயக்குகிறார். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு நின்று போன வேட்டை மன்னன் படத்தை இயக்கியது இவர்தான். அந்தப்படம் வராததால் இன்னும் புதுமுகமாகவே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர்
மார்ச் 1,2018 முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் ஒரு மாதமாகத் தொடர்கிறது. ஆனால் இன்னும் முடிவை நோக்கி ஒருபடி முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என்கிறார்கள். இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக கமல், ரஜினி போன்ற முன்னனி நடிகர்கள் நிறைவாக இல்லை. வேலைநிறுத்தத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரஜினி வெளிப்படையாக அறிவித்தார். அவர் நடித்த காலா பட
புதிய திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, மார்ச் 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் இரத்து செய்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கிக்கிடக்கிறது. இதுதொடர்பாக, டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் நடந்த
பிரிட்டன் நான்காவது தேசிய திரைப்பட விழாவில் ‘மெர்சல்’ படத்துக்கு, சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய்
கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது.
துருவங்கள் 16 படமெடுத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவர், சிலநேரங்களில் ஒருவர்மீது நாம் வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலை செய்வதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நாம் செய்யாத தவறுக்காக நம் கனவு சிதைக்கப்படுவதுதான் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பாத தருணமாக இருக்கும் என்று ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிய நட்டம் என்றும் அதனால் அப்படத்தைத் தயாரித்த நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை 130 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு பெரிய
சிம்பு எதைச் செய்தாலும் அதை சமூகவலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் செக்கச்சிவந்தவானம் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கொண்டாடித் தீர்த்தார்கள். அதன்பின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள், நடனமாடிய காணொலி ஆகியன இணையதளமெங்கும் நிறைந்திருந்தன. இன்றைக்கு சிம்புவின்
இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை மேற்கொள் காட்டினார். மேலும், உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு





















