காவிரிச் சிக்கல் தொடர்பாகப் பேசியபோது. அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாகப் பேசி தீர்க்க வேண்டும் என்று சொன்னார் நடிகர் சிம்பு. சிம்புவின் இந்தக் கருத்துக்கு கர்நாடகாவில் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து சிம்பு அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது கருத்தை கன்னடர்கள்
செய்திகள்
சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மைச் சம்பவங்களைத் தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள படம் ‘வெல்வெட் நகரம். இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் நடிகர்கள் நடத்திய கண்டனப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. தனக்கு அழைப்பில்லை என்று கூறியிருந்தார். அதோடு காவிரிச் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவான கருத்துகளைச் சொல்லியிருந்தார். இதுகுறித்து பிரபல கன்னட நடிகர் அனந்த்நாக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்,
வீரம்,வேதாளம்,விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்தும்,இயக்குநர் சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி தொடங்க இருந்த நிலையில்,திரையுலகின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு
தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும், ஏவிஎம் சரவணன் அமரர் ஏவி மெய்யப்பன் – இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18 ஆவது வயதில் 9-4-58 ஆம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018 ஆம் நாளோடு 60 ஆண்டுகள் நிறைவடைந்தது.அவர் திரைத்துறையில் மணி விழா காணுகிறார்.
டிஜிட்டல் அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் மார்ச் 1,2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் ‘பெப்சி’ அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் கட்டுக்கோப்பாக-ஒற்றுமையுடன் நடத்தி வரும் இந்த வேலை நிறுத்தப்
தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது,பல கருத்துகளைத் தெரிவித்தார். அவற்றில் ஒன்று மிகவும் சர்ச்சையாகிவிட்டது. அவர், நாம் கர்நாடகாவிடம் தண்ணீர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை: 1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப்
ஏப்ரல் 8 அன்று நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நான்கு மணி நேரப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அந்தப் போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையில் ஆயிரம் பிரச்னை இருக்கும்போது, பிற போராட்டங்களில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி,




















