சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். படத்தில் அவர் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்
செய்திகள்
மார்ச் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு, சென்னையிலுள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இதனால், ‘விஜய்
தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று
தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் தொடர்வதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் விஷால். வேலைநிறுத்தம் தொடங்கியபின் முதன்
விண்ணைத் தாண்டி வருவாயா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கொடி உட்பட பல படங்களைத் தயாரித்திருப்பவர் மதன். இப்போது கவுதம்மேனன் இயக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர் கவுதம்மேனனும் இவரும் திரைத்துறைக்கு வருமுன்பே நண்பர்கள். திரைத்துறைக்கு வந்த பின்பும் இணைந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது. அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது அப்பாடலின் காணொலி. இந்தத் தகவல்களால் மகிழ்ச்சியடைந்த சிம்பு, யுவன் ஷ்ங்கர்
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும்
மார்ச் 1,2018 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில்லை என்று முடிவெடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம், மார்ச் 16ம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டது. வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளையும் மார்ச் 23 ஆம் தேதியோடு முடித்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லியிருந்தது. இதனிடையே, இன்று சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்
ஆன்மிகப் பயணமாக மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 20) சென்னை திரும்பினார். சென்னை திரும்பியதும், அவர் வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது… புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார்
தனுஷ் இப்போது வடசென்னை, என்னைநோக்கிப் பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றனவாம். இப்போது நடைபெறுகிற வேலை நிறுத்தம் முடிந்தவுடன் மாரி 2, என்னைநோக்கிப்பாயும்தோட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிடுவாராம். அதன்பின் ஜூன் முதல் அவரே இயக்கி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பைத்





















