Home Archive by category விமர்சனம் (Page 68)

விமர்சனம்

விமர்சனம்

தலைவி – திரைப்பட விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என்று எல்லோரும் எதிர்பார்க்க, இப்படத்தில் இடம்பெறும் அனைத்தும் கற்பனையே என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடங்குகிறார்கள்.  அதற்கேற்ப திமுகவை தமிழக மக்கள் கழகம் என்றும் செயலலிதாவை செயா என்றும் கலைஞரை கருணா என்றும்
விமர்சனம்

லாபம் – திரைப்பட விமர்சனம்

படம் தொடங்கும்போதே ஒரு சுமையுந்தில் வந்திறங்குகிறார் விஜய்சேதுபதி. அவரை இறக்கிவிட்ட பின் ஓட்டுநர், முடிஞ்சா பார்க்கலாம் என்று சொல்ல அதற்கு, முடியும் பார்க்கலாம் என்று அதீத தன்னம்பிக்கையோடு சொல்கிறார் விஜய்சேதுபதி. படம் முழுக்க இது தொடர்கிறது. மிக ஆழமான விசயங்களை அழுத்தந்திருத்தமாகச் சொல்லிச் செல்கிறார்கள். பக்கிரி என்கிற பெயருக்கேற்ப தாடி மீசையோடு அறிமுகமாகும் விஜய்சேதுபதி
விமர்சனம்

கசடதபற – திரைப்பட விமர்சனம்

கவசம், சதியாடல், தப்பாட்டம்,பந்தயம், அறம் பற்ற, அக்கற ஆகிய ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கதைகள் அவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ஒரே கதை. அதுதான் கசடதபற. கவசம் கதையில் பிரேம்ஜிதான் கதாநாயகன், அவருக்கு இணை ரெஜினா. இவர்களோடு யூகிசேதுவும் இருக்கிறார். இவர்கள் மூவரை மட்டும் வைத்துக் கொண்டு சுவையாகக் கதை சொல்லியிருக்கிறார் சிம்புதேவன். ரெஜினாவுக்கு பிரேம்ஜி மீது காதல் வரக்
விமர்சனம்

பூமிகா – திரைப்பட விமர்சனம்

“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டேஇருப்பது எம் கடமை”. என்று களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். சொல்லவந்ததைச் சும்மா சொன்னால் செவியில் ஏறாது என்பதால் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார். படம் தொடங்கியவுடன் கர்ப்பிணி மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டே (காரில்) மகிழுந்தில் வருபவரின் கொடும் மரணம் அடிவயிறு
Uncategorized விமர்சனம்

திட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கும், அதைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடக்கும், அதில் பல பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டு கடைசியில் புதிதாக ஒருவரைச் சொல்லி இவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று முடிக்கும் படங்களின் வரிசையில் சேரக்கூடிய படம்தான் திட்டம் இரண்டு என்றாலும் இப்படத்தில் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம் யாரும் எதிர்பாராதது, இதுவரை திரைப்படங்களில் வராதது. காவல்துறை ஆய்வாளர்
விமர்சனம்

ஜெகமே தந்திரம் – விமர்சனம்

மதுரையில் ரவுடியாகச் சுற்றித் திரியும் நாயகன் இலண்டன் சென்று செய்யும் அலப்பறைகளே ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் ஓடிடியில் நேரடியாகப் படம் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் டிக்கெட் விலைக்கு ஒர்த்தா? என்று கேட்கலாம். சரி, நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஸனுக்கு
விமர்சனம்

தனுஷை கவிழ்த்த கார்த்திக்சுப்புராஜ் – ஜெகமே தந்திரம் சோதனை

ஜகமே தந்திரம் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே காரை நிறுத்தி, பிறகு ரயிலை நிறுத்தி, ரயில் ஓட்டுநர் எந்தப் பெட்டியென்று சொல்ல… அங்கே போய் நிதானமாக ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறார் தனுஷ். பயங்கர தாதாவாம். (ஒன்றிய அரசின் கவனம் பெற்றால் இயக்குநர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்). தனுஷ் அறிமுகமே நகைச்சுவைக் காட்சியாகத்தான் தொடங்குகிறது. பின்னர், படம் முழுவதிலும் இப்படியான காட்சிகளை
விமர்சனம்

பாப்பிலோன் – திரைப்பட விமர்சனம்

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கொடூரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஒரு நாயகன், அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் பாப்பிலோன். நாயகன் ஆறு.ராஜா தாடியுடன் இருப்பது வசனங்கள் உச்சரிப்பது ஆகியனவற்றால் பழைய டி.ராஜேந்தரை நினைவு படுத்துகிறார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில்
விமர்சனம்

முன்னா – திரைப்பட விமர்சனம்

சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? நாடோடி வாழ்க்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கான விடைதான் “முன்னா“ படத்தில் நாயகனாக
விமர்சனம்

கர்ணன் – திரைப்பட விமர்சனம்

பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்