கான்சிட்டி பாருங்கள் மகிழ்ச்சி நிச்சயம் – அர்ஜுன்தாஸ் உறுதி
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கான்சிட்டி.
கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு H
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்,படத்தொகுப்பு: அருள் மோசஸ்,இசை: ஷான் ரோல்டன்,கலை இயக்கம்: ராஜ் கமல்,உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்,சண்டைப்பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூ்ன் 20 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் நடிகர் மதன் பேசியதாவது..,
வணக்கம் நண்பர்களே.ஒரு சிலவார்த்தைகள் பேச விரும்புகிறேன்.மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது.ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப்படத்திற்குத் தகுதியானதுதான்.ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம்.
இந்தப்படத்தின் கதையிலும்,அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன.டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் இரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும்,இரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்.சுமாரான படங்களுக்குக்கூட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் நல்லஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்.இது மிகவும் சிறப்பான திரைப்படம். இந்தப்படத்தையும் மக்களிடம் இன்னும் பிரமாண்டமாக கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
நடிகர் லல்லு பேசியதாவது..,…
இதுபோன்ற தருணங்கள் எப்போதும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.இயக்குநர் ஹரிஷை இன்று இந்தமேடையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ஒரு புதியஇயக்குநராக சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கியவர்.அந்தக் கனவை நனவாக்குவதற்காக அவர் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளார்.இன்று அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.அர்ஜூன் தாஸ் ஏற்கனவே ‘கைதி’,‘மாஸ்டர்’ போன்ற முக்கியமான படங்கள் மூலம் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அவருடன் இணைந்து பயணித்த அனுபவமும் சிறப்பானது.இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய திரையரங்கு வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தபோது மிகவும் பாஸிடிவான உணர்வு ஏற்பட்டது. குறிப்பாக இது ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.இயக்குநர் ஹரிஷ் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் இரசிக்கக்கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறார்.பாடல்களும் ஒவ்வொன்றும் தனித்துவமான பாணியில் அமைந்து மனதில் நிற்கின்றன.குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து இரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக ‘கான் சிட்டி’ இருக்கும்.எனவே இரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தை ஆதரித்து, மிகப்பெரிய தொடக்கத்தையும் வெற்றியையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கலைஇயக்குநர் ராஜ்கமல் பேசியதாவது…..
வணக்கம்.முதலில் இந்தப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘கான் சிட்டி’ திரைப்படத்தின் உலகத்தை உருவாக்குவதற்காக நாங்களும் எங்கள் குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளோம்.குறிப்பாக இந்தப்படத்தில் செட் அமைப்புகள் அதிகமாக இருந்ததால்,அதற்காக பெரியஅளவில் திட்டமிட்டு வேலை செய்யவேண்டியிருந்தது.என்னுடைய குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடனும் கடினஉழைப்புடனும் பணியாற்றினர்.அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.இந்தப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே எனக்கு நண்பர்களைப் போன்றவர்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டனர்.அதனால் வேலை மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது. படப்பிடிப்பு காலம் முழுவதும் நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம்.‘கான் சிட்டி’ படத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்தையும், காட்சியமைப்புகளையும் இரசிகர்கள் திரையரங்குகளில் இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.படத்திற்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
உடை வடிவமைப்பாளர் நவா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.முதலில் இந்தப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளருக்கும்,இயக்குநர் ஹரிஷுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்தமேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.இந்த வாய்ப்பிற்காகவும்,தொடர்ந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
அர்ஜூன் தாஸ் அண்ணாவுடன் மீண்டும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.அதற்காக அவருக்கு எனது சிறப்பு நன்றிகள்.அதேபோல் வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது.அவருடன் பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை.இந்தப்படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைய உடை வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு தோற்றங்களை உருவாக்கியுள்ளோம்.இரசிகர்கள் அதை திரையரங்குகளில் பார்த்து இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னுடைய முழு காஸ்ட்யூம் குழுவும் எனக்கு ஒரு குடும்பம் போன்றது.பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்துவரும் அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது.அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்,கலை இயக்குநர் ராஜ்கமல்,ஒளிப்பதிவாளர் அரவிந்த்,ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோஷ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.படக்குழுவின் சார்பாக இரசிகர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்.திரையரங்குகளுக்கு வந்து ‘கான் சிட்டி’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள்.
இறுதியாக,என்னுடைய உதவியாளர்கள் மற்றும் காஸ்ட்யூம் குழுவினருக்கு சிறப்புநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடன இயக்குநர் சந்தோஷ் பேசியதாவது…..
அனைவருக்கும் வணக்கம்.‘கான் சிட்டி’திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. சமீபத்தில் வெளியான பாடல்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.அந்தப்பாடல்களின் காட்சியமைப்புகள் மற்றும் நடனவடிவமைப்புகள் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குநர் ஹரிஷ் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்துவமான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டார்.அவர் கூறிய அணுகுமுறை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.அதனை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை உருவாக்கிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்தப்படத்தின் பாடல்களில் ஏராளமான நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர்.அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.படப்பிடிப்புதளத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
இயக்குநர் ஹரிஷின் மிகப்பெரிய பலம் அவரது பாஸிடிவான அணுகுமுறை.அவர் எப்போதும் உற்சாகத்துடனும் தெளிவான பார்வையுடனும் செயல்படுவார்.படத்திற்கு என்ன தேவை என்பதை மிகவும் தெளிவாக அறிந்து அதற்கேற்ப குழுவை வழிநடத்தினார். அந்த நம்பிக்கையும் ஆற்றலும் முழுக்குழுவுக்கும் உற்சாகத்தை அளித்தது.
அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகுந்த உழைப்பை தந்தனர்.படப்பிடிப்பின்போது சோர்வு இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கினர்.இயக்குநர் குழு,ஒளிப்பதிவுக்குழு உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டனர்.
வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது.அவருடைய அனுபவமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. குறிப்பாக பாடல்களில் வரும் சிறிய அசைவுகள் மற்றும் லிப்-சிங்க் காட்சிகளைக் கூட மிகவும் துல்லியமாகச் செய்தது அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது.
இந்தப்படத்தின் அனைத்து பாடல்களும் தனித்தனி பாணியில் உருவாகியுள்ளன.ஒவ்வொரு பாடலிலும் ஒரு புதியஅனுபவமும் வித்தியாசமான உணர்வும் இருக்கும். இரசிகர்கள் திரையரங்குகளில் அதை இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் அருள் மோசஸ் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.முதலில் இந்தவாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கான் சிட்டி’ திரைப்படம் அனைவரின் வாழ்க்கையுடனும் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையை பேசுகிறது.அதனால்தான் இந்தப்படம் அனைத்து தரப்பு இரசிகர்களிடமும் நல்லவரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.
இந்தப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.அவருடைய நம்பிக்கையும் ஆதரவும்தான் என்னை இந்தப்பயணத்திற்கு அழைத்து வந்தது.
அதேபோல் என்னுடைய முக்கியமான வழிகாட்டியும், மென்டருமான செல்வா அண்ணாவையும் இந்தநேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.இன்று நான் இந்தமேடையில் நிற்பதற்கும்,இந்தப்படத்தில் பணியாற்றியதற்கும் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.இந்தப்படம் திரையரங்கில் வெளியாகும் என்னுடைய முதல்படைப்பாக இருப்பதால்,இது எனக்கு மிகவும் சிறப்பானதாகும். படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள்.இரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் ஆதரவும் அன்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.இந்தமேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மைப்போன்ற மிடில்கிளாஸ் பின்னணியில் இருந்து வந்து,இன்று ஒரு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஹரிஷ் அண்ணா இந்தநிலையை அடைந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்தவன் என்பதால்,இந்தப்படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கிறது.
இந்தப்படத்தின் மூலம் அர்ஜூன் தாஸ்,யோகி பாபு, அன்னா பென் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.அவர்களுடன் இணைந்து வேலை செய்த அனுபவம் மிகவும் சிறப்பானது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சார் படத்திற்கு அற்புதமான இசையை வழங்கியுள்ளார்.சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகளைப் பார்த்தபோது,படத்தின் உலகம் இன்னும் அழகாக உயிர்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினோம்.கலைஇயக்குநர் ராஜ்கமல்,உடைவடிவமைப்பாளர் நவா,எடிட்டர் அருள் மோசஸ்,நடனஇயக்குநர் சந்தோஷ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
குறிப்பாக உதவிஇயக்குநர்கள்,கேமரா குழுவினர் மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பல மணி நேரங்கள் இடைவிடாமல் உழைத்து இந்தப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.
‘கான் சிட்டி’ திரைப்படம் எங்கள் அனைவரின் உழைப்பின் வெளிப்பாடு.இரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.
பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.இந்தப்படம் எனக்கு மிகவும் முக்கியமானது.இந்தப்படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.அதற்கான முக்கியகாரணம் இயக்குநர் ஹரிஷ்.
ஹரிஷ் முதன்முதலில் இந்தக்கதையை என்னிடம் கூறிய தருணத்திலிருந்தே அந்தக்கதையுடன் நான் பயணிக்கத் தொடங்கிவிட்டேன்.ஒரு தேநீர்கடை பெஞ்சில் அமர்ந்து, இந்தப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள், எப்படி உருவாகப்போகிறது என்று கனவுகளோடு பேசிய நாட்கள் இன்று நினைவுக்கு வருகின்றன.
அர்ஜூன்தாஸ் சார்,நீங்கள் இந்தக்கதையைக் கேட்டவுடன் சொன்ன முதல் ‘ஓகே’தான் இன்று இந்தப்படம் இந்தமேடையில் நிற்பதற்குக் காரணம். அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி.ஹரிஷ் சார்பாகவும் ஒரு பெரியநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக்கதையை எழுதிய நாள்முதல், இந்தக்கதாபாத்திரத்திற்கு அவர் நினைத்த ஒரேநடிகர் நீங்கள் மட்டும்தான்.அந்தஅளவுக்கு உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இந்தப்படம் உங்களுக்கு ஒரு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைத்தரும் என்று நம்புகிறேன். நான் இந்தப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோ ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
யோகிபாபு அண்ணா இந்தப்படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார்.அவருடைய கதாபாத்திரம் இரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும்.ஷான் ரோல்டன் எனக்கு மிகவும் சிறப்பானவர்.அவருடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் ஒரு பாடலாசிரியராக எனது பெயர் பரவலாக கவனிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்.எங்களது கூட்டணியில் உருவான பல பாடல்கள் மற்றும் படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘கான் சிட்டி’ திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன.அவை கதையோடு இயல்பாக இணைந்து பயணிக்கும்.குறிப்பாக சில பாடல்களை பழைய தமிழ் தத்துவப்பாடல்களின் உணர்வில் உருவாக்கியுள்ளோம். அதற்கான ஐடியாவை வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. அவர் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படும் படைப்பாளி. அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து இணைந்து பணியாற்றவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
வடிவுக்கரசி அம்மாவும்,யோகிபாபு அண்ணாவும் இணைந்த காட்சிகள் இரசிகர்களை மிகவும் கவரும்.வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே அவருடைய இரசிகனாக இருந்த நான், இந்தப்படத்திற்குப் பிறகு இன்னும் பெரிய இரசிகனாக மாறிவிட்டேன்.இந்தப்படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளனர். எங்கள் முழு குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப்படம் வெற்றி பெற்று,ஹரிஷின் முகத்தில் அந்த மகிழ்ச்சியைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்.ஒரு அண்ணன் தனது தம்பி வெற்றி பெறுவதைப் பார்ப்பதுபோல அந்த மகிழ்ச்சி இருக்கும்.அனைவருக்கும் எனது நன்றிகள்.இந்தப்படம் வெற்றி பெற்று,வெற்றிவிழாவில் மீண்டும் அனைவரையும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி என்றார்.
நடிகர் விடிவி.கணேஷ் பேசியதாவது…..
அனைவருக்கும் வணக்கம்.குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.‘கான் சிட்டி’ எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்த படம்.இதற்குமுன்பு இதுபோன்ற கதைக்களத்தில் நான் நடித்ததில்லை. இயக்குநர் ஹரிஷ் என்னை அணுகியவிதமே மிகவும் தனித்துவமாக இருந்தது.பொதுவாக புதிய இயக்குநர்களுக்கு நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன்.ஏனெனில் அவர்களிடம் புதிய சிந்தனைகளும் புதியபார்வைகளும் இருக்கும்.
ஹரிஷ் கதையை சொல்ல வந்தபோது,முதலில் நான் கேட்டது‘தயாரிப்பாளர் யார்?’என்பதுதான்.இன்று ஒரு படத்தை ஆரம்பிப்பது எளிது.ஆனால் அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது மிகப் பெரியவிஷயம்.அந்த நம்பிக்கை இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.ஹரிஷ் அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்.
அர்ஜூன்தாஸ்,யோகிபாபு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் படத்தில் இருப்பதாக சொன்னபோது மேலும் நம்பிக்கை ஏற்பட்டது.படத்தின் தயாரிப்பிலும், திட்டமிடலிலும் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட்டார்கள்.அதுவே என்னை இந்தப்படத்தில் இணைத்தது.
இந்தப்படத்தின் மிகப்பெரியபலம் ஹரிஷின் தெளிவான பார்வை.அவருக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரியும்.தேவையில்லாத விஷயங்களைச் செய்யாமல், காட்சிகளைத் துல்லியமாக திட்டமிட்டு எடுத்தார்.ஒருநாள் முன்னதாகவே என் பணிகளை முடித்து அனுப்பிய அளவுக்கு திட்டமிடல் இருந்தது.
படத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கான் சிட்டி’ உலகம் மிகவும் சுவாரஸ்யமானது.அது சாதாரண நகரம் அல்ல. அதன் உள்ளே என்ன நடக்கிறது,அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்பனை மற்றும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் பணியை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன்.அவருடைய அணுகுமுறை,காட்சிகளைப் பார்க்கும்விதம் மற்றும் படத்தின் தோற்றத்தை உருவாக்கியவிதம் மிகவும் சிறப்பாக இருந்தது.இன்றைய தலைமுறையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அவர் வளர்வார் என்று நம்புகிறேன்.
அதேபோல் எடிட்டர் அருள்மோசஸ் முதல்படமென்று சொல்லமுடியாத அளவுக்கு அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்.அவரது படத்தொகுப்பு மிகுந்த தரத்துடன் உள்ளது.படத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அவர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
அர்ஜூன்தாஸ் ஒரு நடிகராக தொடர்ந்து புதியஉயரங்களை அடைந்து வருகிறார்.இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும்.யோகிபாபு, வடிவுக்கரசி அம்மா மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர்.
இன்று ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதை திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.அந்த சவாலை வென்று‘கான் சிட்டி’ இன்று இரசிகர்களை சந்திக்கவருகிறது.அதற்காக ஹரிஷையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன்.
இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும்.இரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.‘கான் சிட்டி’படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது.இந்தக்குழுவில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு கல்லூரி ஆண்டுவிழா குழுவைப்போல தோன்றலாம்.ஆனால் அவர்கள் அனைவரும் அனுபவம்மிக்க,திறமையான தொழில்முறை கலைஞர்கள்.அதுதான் இந்தக்குழுவின் மிகப்பெரிய பலம்.
இயக்குநர் ஹரிஷைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், அவருக்கு என்ன தேவை என்பது மிகவும் தெளிவாகத் தெரியும்.தேவையற்ற காட்சிகளை எடுக்காமல்,கதைக்கு அவசியமானவற்றை மட்டும் துல்லியமாக படமாக்குவார். அதனால் படப்பிடிப்பு மிகவும் சீராகவும்,கலைஞர்களுக்கு சோர்வில்லாமலும் நடைபெற்றது.
இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒரேகாட்சியை பலகோணங்களில் படமாக்குவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஹரிஷ் அப்படியில்லை.கதைக்குத் தேவையானதை மட்டும் எடுத்து,நேரத்தை வீணாக்காமல் பணியாற்றினார்.அதுதான் அவருடைய பலம்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன்,உடை வடிவமைப்பாளர் நவா மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.ஒவ்வொருவரும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.
அர்ஜூன்தாஸுடன் இது எனது முதல்படம் அல்ல. ஏற்கனவே அவருடன் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இந்தப்படத்திலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்.ஹரிஷ் பல நல்ல திரைப்படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.அந்த அனுபவம் இந்தப் படத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.படப்பிடிப்பு மிகவும் ஒழுங்காக நடந்தது.திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்துபணிகளும் முடிக்கப்பட்டன.டப்பிங் உள்ளிட்ட பணிகளும் விரைவாக நிறைவடைந்தன.படத்தைப் பார்த்தபோது எனக்கு முழுமையான திருப்தி கிடைத்தது.நான் எந்தப்படத்தில் நடித்தாலும்,கதாபாத்திரம் பெரியதா,சிறியதா என்பதைப் பார்ப்பதில்லை.அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்கிறேன்.இந்தப் படத்தில் நான் ஒரு மின்வாரிய அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக அமைந்துள்ளது.இந்தக்குழு தமிழ்சினிமாவின் எதிர்காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.புதியபடைப்பாளிகளும்,புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து வருவதால்தான் நம் சினிமா வளர்கிறது.‘கான் சிட்டி’ திரைப்படம் அந்தவகையில் பல திறமைகளை வெளிக்கொண்டுவரும்.ஷான் ரோல்டன் மற்றும் மோகன்ராஜன் ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து சிறந்தபடைப்புகளை வழங்கி வருகிறது.இந்தப்படத்திலும் அவர்கள் மிகச்சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று,இயக்குநர் ஹரிஷுக்கு தமிழ்சினிமாவில் ஒரு சிறந்த இயக்குநராகவும்,தயாரிப்பாளராகவும் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் நன்றி என்றார்.
இமான் அண்ணாச்சி பேசியதாவது…..
அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அந்தக்கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ஹரிஷுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்புதளத்திற்கு முதன்முதலில் வந்தபோது, இளம் தலைமுறையினரின் ஆற்றல் நிறைந்த ஒரு சூழல் அங்கே இருந்தது.கேமராமேன் முதல் உதவிஇயக்குநர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.அந்த சூழலைப் பார்த்தபோது,ஒரு கல்லூரிவளாகத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இயக்குநரிடமே நான் கேட்டேன், ‘இந்தக்கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்தது சரியான முடிவா?’என்று.அதற்கு அவர்,‘இந்தக்கதாபாத்திரத்தை எழுதும்போதே உங்களை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்’என்று சொன்னார்.அந்தவார்த்தை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.
அர்ஜூன்தாஸ் இந்தப்படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்.குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் பொறுமையும் பாராட்டத்தக்கது.எந்தவொரு தோற்றத்தையும்,எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமையாக ஏற்று நடிப்பவர்.இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத்தரும் என்று நம்புகிறேன்.
வடிவுக்கரசி அம்மா,யோகிபாபு மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது.படப்பிடிப்புதளத்தில் எப்போதும் ஒரு குடும்பஉணர்வு இருந்தது.
இந்தப்படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர்.அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும்.குறிப்பாக இயக்குநர் ஹரிஷின் முயற்சியும், இந்தப்படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
‘கான் சிட்டி’ திரைப்படம் ஒரு பவர்ஃபுல் எண்டர்டெயினராக இரசிகர்களை கவரும்.மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று,படக்குழுவினரின் உழைப்புக்கு உரியபலனைப் பெற்றுத்தரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் சதானந்த் பேசியதாவது..,
இந்த வாய்ப்புக்காக நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியவர் இயக்குநர் ஹரிஷ்.கடந்த மூன்றரை ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும்.இந்தக்கதையின் பயணமும் ஆரம்பத்திலிருந்தே அவருடன் இருந்திருக்கிறது.ஒருநாள் திடீரென்று என்னை அழைத்து,‘இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, நீ நடிக்கிறாயா?’என்று கேட்டார்.நான் உடனே சம்மதித்தேன்.அப்படித்தான் இந்தப்படத்தில் என் பயணம் தொடங்கியது.
நடிப்பில் எனக்கு உதவியாக ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார்.படப்பிடிப்புக்கு முன்பு ஒரு வார காலம் வசனங்களைப் பயிற்சி செய்து,மனப்பாடம் செய்து தயாரானேன்.ஆனால் படப்பிடிப்புதளத்தில் சில நேரங்களில் புதிதாக வசனங்கள் கொடுக்கப்பட்டன. சில நிமிடங்களிலேயே அதை மனப்பாடம் செய்து நடிக்க வேண்டிய சூழல் இருந்தது.அது எனக்கு சவாலாக இருந்தாலும்,மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தது.
அர்ஜூன்தாஸ் சார் என்னுடன் நடித்தபோது மிகவும் ஆதரவாக இருந்தார்.ஒரு புதியநடிகராக நான் வசதியாக உணரும்படி சூழலை உருவாக்கிக் கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றிகள்.
இமான் அண்ணாச்சி சார்,யோகிபாபு அண்ணா உள்ளிட்ட மூத்தகலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.யோகிபாபு அண்ணா எப்போதும் அன்பாகவும் ஊக்கமாகவும் பழகினார்.அது எனக்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது.
இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருநாளும் எனக்கு ஒரு புதியபாடமாக இருந்தது.இந்தவாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழுபடக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிரைலருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவைப் போலவே, திரைப்படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர்கள்,ஊடகநண்பர்கள் மற்றும் இரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.
குழந்தை நட்சத்திரம் அகிலன் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம்.என் பெயர் அகிலன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நான் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.அந்தக்கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.அதேபோல் இந்தப்படத்தில் நடித்த அனைத்துநடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
Maali & Manvi Movie Makers தயாரிப்பாளர் சித்துநாயர் பேசியதாவது..,
அனைவருக்கும் இனிய மாலைவணக்கம்.இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பலரும் இந்தப்படம் தங்களுடைய முதல்அனுபவம் என்று கூறினார்கள்.அதுபோல,ஒரு இணைத்தயாரிப்பாளராக இது எனக்கும் முதல்திரைப்பட அனுபவம்.எங்கள் நிறுவனம் திரைப்படத்துறையில் இருந்தாலும்,ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை நேரடியாகக் கேட்டு அதில் முதலீடு செய்வது எனக்கு இதுவே முதல்முறை.
ஒருநாள் எனது குழுவினர் மூலமாக இயக்குநர் ஹரிஷைப் பற்றி கேள்விப்பட்டேன்.அவர் ஒரு திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்,ஒரு இணைத்தயாரிப்பாளரைத் தேடுகிறார் என்று கூறினார்கள்.அதன்பிறகு அவரைச் சந்திக்கச் சென்றேன். வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு திரைக்கதையை முழுமையாகக் கேட்கப்போகிறேன் என்ற அனுபவம் அது.
இரவு நேரத்தில் அவரது அலுவலகத்திற்கு சென்றோம். ஹரிஷ் கதையை விவரிக்கத் தொடங்கினார்.முதல் பாதி கதையைச் சொல்லவே சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.நான் அப்போது அவரிடம், ‘பட்ஜெட் மற்றும் நிதி விஷயங்களைப்பற்றி பேசலாமா?’ என்று கேட்டேன்.ஆனால் அவர்,‘இன்னும் இரண்டாம்பாதி இருக்கிறது.அதையும் கேட்டபிறகு பேசலாம்’என்றார்.
பொதுவாக பேச்சுவார்த்தைகளில் ஒருவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்தக்கதையை கேட்டபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.அது எனது முதல் திரைக்கதை அனுபவமாக இருந்தாலும்,அந்தக்கதையில் இருந்த ஆழத்தை என்னால் உணரமுடிந்தது.ஹரிஷின் சிந்தனையின் தெளிவும்,கதையின் மீதான நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது.
குறிப்பாக,இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் இந்தப்படத்தில் ஈடுபட்டிருந்தது,தனது படைப்பின்மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது.அதுவே எனக்கும் தைரியம் கொடுத்தது.அந்த இரவு நாங்கள் கைகுலுக்கி, இந்தப்பயணத்தை ஒன்றாகத் தொடங்க முடிவு செய்தோம்.
அதன்பிறகு ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. ‘கதையை இவ்வளவு நன்றாகச் சொல்கிறார்.ஆனால் அதையே திரையில் வெற்றிகரமாக கொண்டுவர முடியுமா?’என்பதுதான் அது.ஆனால் படப்பிடிப்புதளத்திற்கு சென்றபோது அந்த சந்தேகம் முற்றிலும் நீங்கிவிட்டது.அங்கே இருந்த ஆற்றல், ஒழுங்கு,அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறை எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.
அந்ததருணத்திலேயே இந்தப்படம் வெற்றிபெறும் என்று உறுதியாக நம்பினேன்.பின்னர் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்தபோது நான் உண்மையிலேயே ஆச்சரியமடைந்தேன்.படம் என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி இருந்தது.
இந்தப்படம் ஒரு சிறந்த உள்ளடக்கத்துடன் உருவாகியிருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீங்கள் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறீர்கள்.எனவே இந்தப்படத்தைப் பார்த்து,அதன்தரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இரசிகர்கள் அனைவரும் இந்தப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி என்றார்.
Klout Studios தயாரிப்பாளர் அருண்பிரஜித் மனோகரன் பேசியதாவது……
அனைவருக்கும் வணக்கம்.பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் பலருக்கும் என்னை ஏற்கனவே தெரியும்.கடந்த பலஆண்டுகளாக திரைப்படங்களில் Executive Producer ஆகவும்,தயாரிப்பு நிர்வாகப் பொறுப்புகளிலும் பணியாற்றி வருகிறேன்.நடிகர்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான பல பணிகளில் இருந்த அனுபவம் எனக்கு உள்ளது.
நீண்டநாட்களாக ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.அப்படியொரு நேரத்தில் ஒருநாள் இரவு ஹரிஷ் என்னை தொடர்புகொண்டு சந்திக்கவேண்டும் என்றார்.முதலில் கதைகேட்கும் மனநிலையில் நான் இல்லை.நான் கதை கேட்கமாட்டேன்,கதையைமட்டும் படிக்ககொடு என்று சொன்னேன்.ஆனால் அந்தசந்திப்பே இந்தப்படத்தின் தொடக்கமாக மாறியது.
ஹரிஷ் கதையை முழுமையாகச் சொன்னபிறகு,நான் திட்டமிட்டு வைத்திருந்த பல விஷயங்களை மறந்துவிட்டு உடனடியாக‘நான் இந்தப்படத்தில் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டேன்.அந்தஅளவுக்கு அந்தக்கதை என்னை ஈர்த்தது.
இந்தக்கதையின் மிகப்பெரிய பலம்,அது அனைவருடைய வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியதாக இருப்பதுதான்.பணம் என்ற விஷயம் மனிதவாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று.அதைப்பற்றியே படம் மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறது.அதனால் இந்தக்கதை அனைவரையும் எளிதில் சென்றடையும் என்று நம்புகிறேன்.
படப்பிடிப்பு காலத்தில் நான் அடிக்கடி செட்டுக்குச் செல்லவே இல்லை.ஹரிஷ் மீது எனக்கு அந்தஅளவுக்கு நம்பிக்கை இருந்தது.படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்தபிறகு அந்த நம்பிக்கை இன்னும் பலமடங்கு அதிகரித்தது.இந்தப்படம் நிச்சயமாக பெரியவெற்றி பெறும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது.
அர்ஜூன்தாஸும் நானும் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நண்பர்கள்.கைதி படத்திற்கு முன்பே நாங்கள் சந்தித்து, நல்லபடங்கள் செய்யவேண்டும் என்று கனவு கண்டவர்கள்.அந்தப்பயணத்தில் இன்று ‘கான் சிட்டி’ போன்ற ஒரு படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தப்படம் அர்ஜூன்தாஸின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.இதுவரை பார்த்திராத ஒரு புதிய அர்ஜூன்தாஸை இரசிகர்கள் இதில் காண்பார்கள். இந்தப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத்தரும் என்று நம்புகிறேன்.
வடிவுக்கரசி அம்மா,அகிலன்,அருள்தாஸ்,சதானந்த் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளனர்.ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன்,கலை இயக்குநர் ராஜ்கமல்,எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக்குழுவினரின் உழைப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டன் மற்றும் பாடலாசிரியர் மோகன்ராஜன் இணைந்து அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு பாடலும் தனித்துவமாகவும் மனதில் நிற்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.
‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்தோடு அமர்ந்து இரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் இரசிக்கக்கூடிய அம்சங்கள் இதில் இருக்கின்றன. மேலும்,இன்றைய சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களோடு இந்தக்கதை மக்களை எளிதில் இணைத்துக்கொள்ளும்.
நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறீர்கள்.அதேபோல் இந்தப்படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி என்றார்.
டெல்டா ஸ்டுடியோஸ் முத்துக்குமார் ஐயப்பன் பேசியதாவது…..
அனைவருக்கும் வணக்கம்.முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.படத்தைப் பார்த்தபிறகு எங்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது.குறிப்பாக பிரிவியூ காட்சி பார்த்த மறுநாள் காலையிலேயே இந்தப்படத்தின் மீது முழுநம்பிக்கை உறுதியானது.
ஹரிஷின் உழைப்பும், “படத்தின் தரமும் எங்களை மிகவும் கவர்ந்தது.இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டன் பேசியதாவது….
அனைவருக்கும் வணக்கம்.பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.‘கான் சிட்டி’பற்றி பேசுவதற்கு முன்,முதலில் இயக்குநர் ஹரிஷைப் பற்றி பேசவேண்டும் என்று நினைக்கிறேன்.
பொதுவாக நான் மிகவும் டென்ஷன் ஆகும் மனிதன். ஒரு படத்தின் வெளியீடு என்றாலே எனக்கு அதிகமான பதற்றம் இருக்கும்.ஆனால்‘கான் சிட்டி’குறித்து ஹரிஷ் முதன்முதலில் என்னிடம் பேசியபோது,எல்லோருக்கும் இருந்த சந்தேகங்களே எனக்கும் இருந்தன.‘இதை உண்மையில் செய்யமுடியுமா? இவ்வளவு பெரிய கனவை நிறைவேற்றமுடியுமா?’என்ற கேள்விகள் இருந்தன.
ஆனால் நான் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு இயக்குநரை சந்தித்தேன்;அவர் கதை சொன்னபோது எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் பேசினாரோ,இறுதியில்படத்தைப் பார்த்தபோது அதே விஷயம் ஒரு அங்குலம் கூட மாறாமல் திரையில் இருந்தது.அவர் சொன்னதை அப்படியே நிறைவேற்றியிருந்தார்.அதற்காக ஹரிஷை நான் மனதார பாராட்டுகிறேன்.
இயக்குநராக மட்டுமல்ல,தனது சொந்தகனவுக்காக தனது சொந்தமுதலீட்டுடன் களம் இறங்கியவர் ஹரிஷ்.ஒரு கனவு காண்பது எளிது.ஆனால் அந்தக்கனவுக்காக தனது பணத்தையும்,வாழ்க்கையையும்,நேரத்தையும் பணயம் வைத்து போராடுவது மிகவும் கடினம்.அந்த தைரியம் எனக்கு மிகவும் ஊக்கமளித்தது.ஹரிஷ் எனக்கு ஒரு நண்பரைத்தாண்டி ஒரு இன்ஸ்பிரேஷன்.
இந்தப்படத்தின் பயணத்தை ஆரம்பம் முதல் பார்த்திருக்கிறேன்.இந்தமேடையில் நிற்கும்போது, டிரைலரைப் பார்க்கும்போது கூட எனக்கு உணர்ச்சிவசப்பட வைத்தது.ஏனெனில் அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை தூக்கமில்லா இரவுகள்,எத்தனை போராட்டங்கள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும்.
இந்தப்படம் இந்தஅளவுக்கு உருவாகியதற்கு அர்ஜூன்தாஸ் மிக முக்கியகாரணம்.இந்தக்கதைக்கு தேவையான பாரமும்,ஆளுமையும் அவரிடம் இயல்பாகவே இருக்கிறது.நான் அவருடன் பணியாற்றியபோது ஒரு விஷயத்தை உணர்ந்தேன்.இந்தத்துறையில் திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள்.ஆனால் சிலருக்கே ஒரு தனிஇடம் கிடைக்கிறது.அதற்கு காரணம் அவர்களுடைய மனசாட்சியும் நேர்மையும்.அர்ஜூனிடம் அந்தத்தூய்மை இருக்கிறது.இந்தப்படம் அவருக்கான அந்த அடுத்தகட்டத்தை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
அன்னாபென் ஒரு அற்புதமான கலைஞர்.வடிவுக்கரசி அம்மா ஒரு லெஜண்ட்.80களின் தமிழ்சினிமாவை நேசிக்கும் ஒருவராக,அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனிஎடை இருக்கிறது.
யோகிபாபு பற்றி சொல்லவேண்டுமென்றால்,அவரிடம் ஒரு தெய்வீகமான வரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை, யார் அவரைப் பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வந்துவிடுகிறது. அது சாதாரண விஷயம் அல்ல.அவர் இந்த இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை அவரிடமிருந்தே கேட்டிருக்கிறேன்.அந்தப்பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது.
இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும்,சிறிய குழந்தை முதல் அருள்தாஸ் சார்,இமான் அண்ணாச்சி,சதானந்த் என அனைவரும் தங்களுடைய முழுஆற்றலையும் கொடுத்திருக்கிறார்கள்.அந்த அர்ப்பணிப்பால்தான் இந்த இசையும்,இந்த உலகமும் உயிர் பெற்றிருக்கிறது.
பாடலாசிரியர் மோகன்ராஜனுடன் சேர்ந்து இந்தப்படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம்.இன்னும் வெளியாகாத இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பழைய தமிழ்சினிமாவின் தத்துவப்பாடல்களின் ஆன்மாவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது.அந்த எண்ணத்தை ஹரிஷ் முன்வைத்தார்.அதன் அடிப்படையில் உருவான அந்த இரண்டு பாடல்கள் எனது இசைப்பயணத்தில் மிகவும் முக்கியமானவை.
பதின்மூன்று ஆண்டுகளாக நான் தமிழ்சினிமாவில் இசையமைத்து வருகிறேன்.ஆனால் இந்த இரண்டு பாடல்கள் குறித்து எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இருக்கிறது.அந்த பெருமையில் பாதி பங்கு மோகன்ராஜனுக்கும்,பாதி பங்கு ஹரிஷுக்கும் சொந்தமானது.
விஜய் பற்றி குறிப்பாக சொல்லவேண்டும்.அவர் ஒரு தனித்துவமான மனிதர்.தனக்காக செய்யக்கூடிய விஷயங்களைத் தாண்டி,இன்று முழுசினிமா துறைக்காகவே பல நல்லவிஷயங்களைச் செய்ய முன்வந்திருக்கிறார்.அவர் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்பக்கூடியவர். மிகவும் தூய்மையான மனம் கொண்டவர். நல்ல நோக்கங்களோடு செயல்படுபவர். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். மீண்டும் அவருடன் பணியாற்றப் போவதிலும் சந்தோஷமாக இருக்கிறேன்.
‘கான் சிட்டி’ இரசிகர்களுக்கு சிரிப்பையும், மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும்.அதேநேரத்தில் நாம் வாழும் சமூகத்தைப் பற்றியும் ஒரு சிந்தனையை ஏற்படுத்தும்.பொழுதுபோக்குடன் ஒரு கருத்தையும் சொல்லக்கூடிய திரைப்படமாக இது இருக்கும். ‘கான் சிட்டி’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல.இது பலருடைய கனவுகள்,உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் விளைவு.ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது.அனைவரும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்.நன்றி என்றார்.
நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.நீங்கள் அனைவரும் இந்தப்படத்திற்காக இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.‘கான் சிட்டி’ என்ற விளக்கை ஏற்றி வைத்திருப்பது படக்குழு என்றால்,அதை மக்களிடம் பிரகாசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கே சொந்தமானது.அந்தப் பொறுப்பை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப்படத்தில் நடிக்க என்னை அணுகியபோது இயக்குநர் ஹரிஷ் மிகவும் நேர்மையாகப் பேசினார். ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை,ஆனால் இப்போது நீங்கள் இதைச்செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’என்று வெளிப்படையாகச் சொன்னார். அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது.
அதன்பிறகு அவரது அலுவலகத்தில் அமர்ந்து முழுக் கதையையும் கேட்டேன்.சுமார் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக அவர் மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வுடனும் கதையை விவரித்தார்.கதையை கேட்டவுடன் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன்.
படப்பிடிப்புதளத்தில் இருந்த அனைவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஒரு அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் இருந்தது.அதனால் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாக நடந்தது.புதிய தலைமுறை திரைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
யோகிபாபு,அர்ஜூன்தாஸ் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம்.குறிப்பாக அர்ஜூன்தாஸின் அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.அவர் இந்தப்படத்தின் மூலம் இன்னும் பெரியஉயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.
இயக்குநர் ஹரிஷ் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் தெளிவாகவும் திட்டமிட்டும் செயல்பட்டார்.அவருடைய நம்பிக்கையும் உறுதியும் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு இனிய அனுபவமாக இருந்தது.முழுக்குழுவும் ஒரு குடும்பம்போல இணைந்து உழைத்தது. அதனால்தான் இந்தப்படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தப் படத்தில் நடித்தேன்.படப்பிடிப்பு முடிந்த மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் அந்தக் காலகட்டத்திலும் படக்குழுவினர் என்மீது காட்டிய அக்கறையை நான் மறக்கமுடியாது.
அர்ஜூன்தாஸ்,யோகிபாபு மற்றும் படக்குழுவில் இருந்த இளம்கலைஞர்கள் அனைவரும் மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள்.குறிப்பாக அர்ஜூன்தாஸ் எப்போதும் எனக்கு தேவையான உதவிகளை செய்து,மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.
இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே எளிதாகத் தோன்றலாம்.ஆனால் திரைக்குப் பின்னால் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. அந்த உழைப்பின் பலனை இரசிகர்கள் திரையில் பார்க்கப்போகிறார்கள்.
இயக்குநர் ஹரிஷ் மற்றும் அவரது சகோதரர் பரத் இருவரும் பலவருட அனுபவத்தை கொண்டவர்கள். பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி கற்றுக்கொண்ட அனுபவத்தை இந்தப்படத்தில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதனால்தான் படம் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாகியுள்ளது.
கதை கேட்ட நாளிலிருந்தே இந்தப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அந்த இரண்டுமணி நேரக் கதை சொல்லும் அனுபவமே என்னை முழுவதுமாக ஈர்த்துவிட்டது.அதேஉணர்வை இரசிகர்களும் திரையரங்குகளில் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
‘கான் சிட்டி’ வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல.மக்களை சிரிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் வைக்கும் அதேநேரத்தில் ஒரு நல்லகருத்தையும், சமூக விழிப்புணர்வையும் சொல்லும் படம்.வாழ்க்கையில் பணம்,ஆசை,முடிவுகள் ஆகியவற்றைப்பற்றி சிந்திக்கவைக்கும் அம்சங்களும் இதில் உள்ளன.
இந்தப்படத்தைப் பார்த்து இரசிகர்கள் இரண்டுமணி நேரம் தங்களுடைய கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.அதேசமயம் ஒரு நல்லசெய்தியையும் எடுத்துச்செல்வார்கள்.இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழுப் படக்குழுவினரின் உழைப்புக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் ஹரிஷ்,தயாரிப்பாளர்கள் மற்றும் முழுப்படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அர்ஜூன்தாஸுடன் எனக்கு நல்லநட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன்.ஒரு ஹீரோவுக்கு நல்லநண்பன் இருந்தாலேபோதும்,ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது.
ஹரிஷை நான் இன்றல்ல,பலவருடங்களாக அறிவேன். பலபடங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும்,சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன்.அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது கூட நான் அவரிடம்,‘நீ கண்டிப்பாக இயக்குநராக வேண்டும்’என்று சொன்னவன்.
இன்று அவர் இயக்குநராக உருவாகி,அவரைப்பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே.இதைத்தொடர்ந்து பெரியநடிகர்களுடன்,பெரியபடங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்லவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
அர்ஜூன்தாஸ் இந்தப்படத்திற்காக மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்.அவரது அர்ப்பணிப்பும், தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் என்னை கவர்கிறது.அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
இந்தப்படத்தின் முழுக்குழுவும் ஒரு குடும்பம்போல இணைந்து பணியாற்றியது.படப்பிடிப்புதளத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து,படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தனர்.அந்த ஒற்றுமை இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர்,கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர்,உதவி இயக்குநர்கள் என அனைவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.அவர்களுடைய உழைப்பின் பலன் திரையில் தெளிவாகத் தெரியும்.
இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் என்று நான் மனதார வேண்டிக்கொள்கிறேன்.‘கான் சிட்டி’திரைப்படம் இரசிகர்களை மகிழ்விக்கும்,குடும்பத்தோடு இரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்கவேண்டும்.
இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்,தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.‘கான் சிட்டி’ மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.நன்றி என்றார்.
நடிகை அன்னாபென் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.நான் தமிழ்பேச முயற்சி செய்கிறேன்.ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.முதலில் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு,‘கான் சிட்டி’திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது.அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில்தான்‘கான் சிட்டி’படத்தில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக்கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது.இதுவரை நான் நடித்திராத ஒரு புதியபரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும்,வெளிப்பாடும்,கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.அதனால் அது எனக்கு ஒரு பெரியசவாலாக இருந்தது.
பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும்,அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது.ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார்.‘நீங்கள் இதைச் செய்யமுடியும்.இது வித்தியாசமாகவும்,யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.அந்த நம்பிக்கையே இந்தக்கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது.
ஹரிஷிடம் நான் மிகவும் இரசித்த விஷயம் அவரது உறுதியான நம்பிக்கை.படப்பிடிப்புதளத்தில் எந்த சவால் வந்தாலும்,எந்த சந்தேகம் எழுந்தாலும்,அவர் எப்போதும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார்.சினிமா மீதான அவரது காதலும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தப்படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பு அளவிட முடியாதது.படம் தொடங்கிய நாளிலிருந்து ஜூன் 26 வெளியீடு வரை,ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்ததை கொடுக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.பாடல்கள்,விளம்பரங்கள்,புரமோஷன்கள், வெளியீடு என அனைத்திலும் அவர் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டார்.அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.
அர்ஜூன்தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன்.இந்தப்படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.ஒரு நடிகராக அவர் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர்.படப்பிடிப்புதளத்தில் அனைவரையும் சமமாக மதித்து,மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்.
வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட்.அவருடன் பணியாற்றியது எனக்கு ஒருகனவு நிறைவேறிய அனுபவம்.மூத்தகலைஞர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் பகிரும் அனுபவங்கள் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பாடமாக இருக்கும்.இந்தப்படப்பிடிப்பின்போது அவர் என்னுடன் நிறையநேரம் செலவிட்டு,தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.தமிழ்வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தை போக்கவும் உதவினார்.
யோகிபாபு சார் பற்றி சொல்லவேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்துவருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன்.ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்கவைத்துக்கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும்,கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்கவைக்கும்.அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
அகிலன் திரையில் எனது மகன்.மிகவும் திறமையான மற்றும் அன்பான சிறுவன்.ஃபாக்ஸி மற்றும் மற்ற கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது.இந்தப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டனின் இசை இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும்,இந்தப்படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன்.அதற்காக சந்தோஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி.சவாலான நடனஅசைவுகளை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்.
‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கும்,தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் அர்ஜூன்தாஸ் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத்தெளிவான திட்டமிடலுடன், முழுநம்பிக்கையுடனும்,உறுதியுடனும் இந்தப்படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார்.ஒரு இயக்குநராக அவர் காட்டிய அர்ப்பணிப்பும்,உழைப்பும்,தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டத்தக்கது.
இந்தப்படத்தை இவ்வளவு பெரியஅளவில் மக்களிடம் கொண்டுசேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது.நகரம் முழுவதும் போஸ்டர்கள்,பேனர்கள், விளம்பரங்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.அதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் வெளியீட்டில் இணைந்துள்ள அபிஹிம்சா பிலிம்ஸ்,டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.படத்தைப் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றிகள்.
‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன்,நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து இரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன,நகைச்சுவையும் இருக்கிறது,அதேநேரத்தில் மனதைத்தொடும் ஒரு அழகானகதையும் இருக்கிறது.
இந்தப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்தநடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.அன்னாபென், வடிவுக்கரசி அம்மா,யோகிபாபு,அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஷான்ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார்.தொழில்நுட்பக்குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.
இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள்.படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து மூத்தகலைஞர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் முழுபடக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள்.அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.முதலில் இந்தமேடையில் நான் நன்றி சொல்லவேண்டிய மிகமுக்கியமான இரண்டு பேர் உள்ளனர்.குணா ப்ரோ போஸ்ட்ஆபீஸ் மற்றும் விஜய் ப்ரோ(சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ்).இவர்கள் இருவரும் இல்லையென்றால்‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’என்ற நிறுவனமும்,‘கான் சிட்டி’ திரைப்படமும் உருவாகியிருக்காது.ஆரம்பம் முதல் இன்றுவரை என்னுடன் நின்று உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
சினிமாவில் நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவது நல்லமனிதர்கள் என்னுடன் இருக்கவேண்டும் என்பதைத்தான்.அந்தவகையில் எனது தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள்,நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப்படத்தின் இணைத்தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்,ஆடியோ உரிமையை பெற்றவர்கள், ஓடிடி உரிமையாளர்கள் என அனைவரும் இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப்பயணம் சாத்தியமாகியிருக்காது.
என்னுடைய தொழில்நுட்பக்குழுவுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவேண்டும்.ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி,எடிட்டர் அருள்மோசஸ்,கலைஇயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான்ரோல்டன்,நடனஇயக்குநர் சந்தோஷ் மற்றும் முழுதொழில்நுட்பக்குழுவும் இந்தப்படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர்.வெறும் 55 நாட்களில் இந்தப்படத்தை முடிக்க அவர்களின் உழைப்பே காரணம்.
பாடலாசிரியர் மோகன்ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஷான்ரோல்டன் ஆகியோரின் கூட்டணி இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.படத்தில் இடம்பெற்றுள்ள ஏழுபாடல்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை.குறிப்பாக இன்னும் வெளியாகாத பாடல்களையும் இரசிகர்கள் இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
நடிகர், நடிகைகள் பற்றி பேசவேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது.இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச்சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.
அன்னாபென் இந்தப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.அவருடைய கதாபாத்திரம் இரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார்.கடந்த ஐந்துஆண்டுகளாக நான் படம் இயக்கவேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான்.இந்தப்படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.
அதேபோல் அர்ஜுன்தாஸ் சார் இந்தப்படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால்‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது.மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார்.இந்தப்படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
இறுதியாக என் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.குறிப்பாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்லவேண்டும்.நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்துகொண்டார்.கடந்த ஐந்துஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார்.இன்று இந்தமேடையில் நான் நிற்பதற்கு அவருடைய ஆதரவும் ஒரு முக்கியகாரணம்.
ஜூன் 26ஆம் தேதி ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகிறது.இந்தப்படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி
இவ்வாறு அவர் பேசினார்.













