திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல். வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்) பார்கவியின் (ஐரா) பதின்பருவக்
விமர்சனம்
ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று போகிறார்கள். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம். வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா அதிரடி ஆளாக அருள்நிதி என்று இருவருக்கும் தனித்தனி பாதை போட்டுவிட்டார்கள்.
ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி? இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப். முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை. காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இக்கொடும்
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பூமிநாதன் ( நாயகன் ஜெயம்ரவி) நாசா விஞ்ஞானியாகி செவ்வாய் கிரகம் செல்லும் குழுவுக்கு தலைமையேற்கிறார். இடையில் கிடைக்கும் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை, விவசாய நிலங்களின் நிலை, நிலத்தடி நீரின் நிலை ஆகியன கண்டு பேரரதிர்ச்சியாகிறார். அவற்றைச் சரி செய்ய முயல்கிறார்.
கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம். தமிழ் மாறாவுல… விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே.
கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கொண்டிருக்கும் உறவுகள் மீதான அன்பு, மூத்தோருக்கு மரியாதை உள்ளிட்ட உணர்வுகளை மீட்டெடுக்கும் படைப்பாக வந்திருக்கிறது சியான்கள். நாயகனாக நடித்திருக்கும் கரிகாலன் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமான புதுவரவு. காதல் காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும். நாயகி ரிஷாஹரிதாஸ் அளவான அழகு. கண்களால் காதலைச் சொல்லுமிடம் நன்று. நளினிகாந்த், பசுபதிராஜ்,
சுமார் முன்னூறு பேர் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம். கருப்பங்காட்டு வலசு. அக்கிராமத்தில் திடீரென ஒரே நாளில் நான்கு மர்ம மரணங்கள் நடக்கின்றன. அவை எப்படி நடந்தன? அவற்றைச் செய்தது யார்? என்பதை விசாரித்துத் தெரிவதே படம். பச்சைக்கிளி வாத்தியார், மல்லி,காந்திமதி, நொண்டி கருப்பன், புகைவண்டி வேலன், இரட்டைமலை உள்ளிட்ட சிலரை மையப்படுத்தி கிராம வாழ்வியலைச் சொல்ல வந்திருக்கிறார்
நாயகன் ஜீவா திரைப்படம் இயக்குவதற்காக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.நாயகி திஷா பாண்டே ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இருவரும் சேர்ந்து மர்ம மரணங்கள் நிகழும் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு நடந்தவற்றை ஆய்வு செய்கின்றனர். அப்போது நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையும் பயச்சுவையும் கலந்து கொடுத்திருக்கும் படம்தான் கொம்பு. நிஜத்தில் ரஜினி ரசிகரான நாயகன் ஜீவா, படத்தில் அவர்





















