தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத்
விமர்சனம்
பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான். வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து
கால்டாக்ஸி ஓட்டுநரைக் கொலை செய்துவிட்டு வண்டியுடன் கொலைகாரர்கள் தப்பியோட்டம் என்று அவ்வப்போது செய்திகளில் பார்ப்போம். ஏன் அப்படி நடக்கிறது? கடத்தப்படும் வண்டிகள் என்னவாகின்றன்? என்பதையெல்லாம் ஒரு கதையாக்கி அதற்குள் காதல், பாசம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதையாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கால் டாக்ஸி. கால்டாக்ஸி ஓட்டுநராக நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன் வேடம்
வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.காடனாக நடித்திருக்கும் ராணாவும் ஒரு பக்கம் தோள்பட்டையை உயர்த்திக்
நாயகன் அருள் மற்றும் அவரது நண்பர்கள் ஆவணப்படமொன்றின் படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். அப்போது, அவர்கள் செல்லும் மகிழுந்து விபத்துக்குள்ளாகிறது. நடுக்காட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில் இருக்கும் வீடொன்றில் அடைக்கலம் தேடிச்செல்கிறார்கள். அந்த வீட்டில் வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில்
புதுமணத் தம்பதி கெவின் சாரா தேவா தேனிலவுக்குச் செல்கின்றனர். போன இடத்தில், நாம மொதல்ல பழகுவோம், அப்புறம்தான் அதெல்லாம் என்கிறார் நாயகி சாரா தேவா. பேரதிர்ச்சி அடையும் நாயகன் என்ன செய்தார்? அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் பூம்பூம் காளை. நாயகன் கெவின் அப்பாவித் தோற்றம் தருகிறார். நன்றாக நடனமாடுகிறார். நடிப்பில் இன்னும் முன்னேற்றம்
மதுரை மண் வாசத்தோடு வீரம், காதல், நட்பு ஆகியனவற்றைப் பேசும் படம்தான் கணேசாபுரம். அக்கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். திருட்டையே தொழிலாகச்செய்யும் பசுபதிராஜிடம் திருடர் வேலை செய்கிறார்கள். அதனால் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதேநேரம் நாயகன் சின்னாவுக்குக் காதல் வருகிறது. ஒரு பக்கம் பகை இன்னொரு பக்கம் காதல் இவற்றிற்கிடையே
நட்புக்குள் துரோகம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் இன்னொரு படம். ராசுரஞ்சித்,ஈசன்,சந்தீப்ராஜ் ஆகியோர் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். ஒரு திருட்டின்போது ராசுரஞ்சித்தும் ஈசனும் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப்ராஜ் தப்புகிறார். சிறையில் இருந்து இருவரும் வெளிவந்தபின்பும் சந்தீப்ராஜின் துரோகத்தால் நண்பர்கள் வாழ்க்கையே
இயல்பான மனித சக்தியைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தவராக இருக்கிறார் ஆர்யா. அதாவது மூன்று வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை அதன் தன்மை மாறாமல் தரம் குறையாமல் இரண்டே மாதங்களில் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் ஒரு கரடிபொம்மை வருகிறது. வரும்போதே ஒரு பெரும் சிக்கலோடு வருகிறது. அதைச் சரிசெய்யக் களமிறங்குகிறார் ஆர்யா. கரடிபொம்மைக்கு என்ன சிக்கல்? அது
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் முற்றுமுழுக்கக் கெட்டவனாக நடித்திருக்கும் படம் மிருகா. மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் முதல்காட்சியிலேயே அவர் எவ்வளவு கொடூரமானவர் என்பதைக் காட்டியே படம் தொடங்குகிறது. கொடூரக் கொலைகாரர் வேடத்துக்கு ஏற்ப நடிக்க முயன்றிருக்கிறார் ஸ்ரீகாந்த்.ராய்லட்சுமி, நைரா,வைஷ்ணவிசந்திரன்,த்விதா ஆகிய அழகிய பெண்களுடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பைச்























