விதவிதமான பிளேடுகள் வந்துவிட்டாலும் இன்னும் பாட்டன் முப்பாட்டன் காலத்திய சவரக்கத்தியை வத்து முகம் ம்ழிக்கும் வேலை செய்கிற முடிதிருத்துநர் ஒருவருக்கும், விதவிதமாக மனிதர்களைத் துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிற ஒரு மெண்ட்டல் தாதாவுக்கும் போகிற போகில் நடக்கும் சின்ன உரசலை ஒரு முழுநீளப்
விமர்சனம்
காதலுக்குப் பல்வேறு வகையான எதிர்ப்புகளைப் பார்த்திருக்கிறாம், காதலர்களுக்குள்ளான போட்டிக்குப் பல்வேறு காரணங்களைப் பார்த்திருக்கிறோம். காதலர்களுக்குள்ளான பிரிவுக்கு விசிறி படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காரணம் புதிதாக இருக்கிறது. நல்லவேளையாக அதை நியாயப்படுத்தி படத்தை முடிக்காமல், நல்லவிதமாகப் படத்தை முடித்திருப்பதால் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தைப் பாராட்டலாம்.
திருடும் தொழில் செய்பவர் விஜய் சேதுபதி. திருடுவதற்காக ஆந்திர மாநிலம் எமசிங்கபுர’த்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறார். ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவரும் உடன் வருகிறார்கள். திருடவந்த இடத்தில் கல்லூரி மாணவி நிஹாரிக்கா கோனிடெல்லாவை சந்திக்கிறார். பிறகு திருட்டை மறந்து நிஹாரிகா பின்னாலேயே சுற்றுபவர், அவரை எமசிங்கபுரத்துக்கு கடத்திச்செல்ல முயல்கிறார். இதற்கிடையில் அதே
மணிரத்னத்திடம் பணியாற்றிய தனா முதன்முறை எழுதி இயக்கியிருக்கும் படம், படமாக்கும் பாணியை மணிரத்னத்திடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதையாக்கத்தில் பாரதிராஜாவைப் பின்பற்றியிருக்கிறார், தன் பரிவாரங்களுடன் தேனிப்பக்கம் படையெடுத்திருக்கும் இயக்குநர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் படமாக்கியிருக்கிறார், அம்மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் சாதிச்சிக்கல்தாம் படம்,
தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் பல சிறந்த நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான பூபதிபாண்டியனை நம்பி விமல் தயாரித்து நடித்திருக்கும் படம். மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘மன்னர் வகையறா’. முழுநீள நகைச்சுவைப் படத்தில் அங்கங்கே சில பாசக் காட்சிகளையும் சில அதிரடி சண்டைகளையும் வைத்து
பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல்
மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ் மாற்றுதான் தான் நிமிர். நடிப்பு இராட்சசன் என்று சொல்லப்படுகிற ஃபகத் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே உதயநிதியின் தன்னம்பிக்கைக்குச் சான்று. ஒப்புக் கொண்டது மட்டுமின்றி உறுத்தாத நடிப்பில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார். வசன உச்சரிப்புகளில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் இருந்தால்
இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்து சிற்றரசன் ரத்தன் சிங் (ஷாகித்கபூர்) இலங்கைக்குச் சென்று அங்குள்ள சிங்கள இளவரசி பத்மாவதியைக் (தீபிகா படுகோன்) காதலித்துக் கரம் பிடிக்கிறான். திருமணத்துக்குப் பின் நாடு திரும்பி முதலிரவைக் கொண்டாடத் தயாராகும் நேரத்தில் மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு பார்ப்பனர். அதனால் அவரை நாடு கடத்துகிறார் ரத்தன்சிங். தில்லி சுல்தான் அலாவுதீன்
அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம். ரீமேக் தானே என்று அலட்சியமாக விட்டு விட்டாரா விக்னேஷ் சிவன் என்று தெரியவில்லை. விக்னேஷ் சிவன் , அனிருத் எல்லாருமே நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்லனும். சொடக்கு மேல சொடக்கு பாடலை தவிர வேற எதுவும் இருந்த மாதிரி தெரியலை படத்தில். மூச்சுக்கு நூறு முறை






















