ஜகமே தந்திரம் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே காரை நிறுத்தி, பிறகு ரயிலை நிறுத்தி, ரயில் ஓட்டுநர் எந்தப் பெட்டியென்று சொல்ல… அங்கே போய் நிதானமாக ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறார் தனுஷ். பயங்கர தாதாவாம். (ஒன்றிய அரசின் கவனம் பெற்றால் இயக்குநர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்). தனுஷ் அறிமுகமே
விமர்சனம்
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கொடூரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஒரு நாயகன், அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் பாப்பிலோன். நாயகன் ஆறு.ராஜா தாடியுடன் இருப்பது வசனங்கள் உச்சரிப்பது ஆகியனவற்றால் பழைய டி.ராஜேந்தரை நினைவு படுத்துகிறார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில்
சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? நாடோடி வாழ்க்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கான விடைதான் “முன்னா“ படத்தில் நாயகனாக
பிறப்பின் அடிப்படையில் சாதி, சாதியின் அடிப்படையில் பாகுபாடு என்கிற மாந்த நேயமுள்ளோர் வெட்கித் தலைகுனிகிற இன்றைக்கும் நாட்டில் நடக்கிற கொடுமைகளின் கடந்தகாலச் சாட்சியாக வந்து நிற்கிறான் கர்ணன். 1997 இல் நடக்கும் கதை. பொடியங்குளம் எனும் சிற்றூர் முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அதனாலேயே அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் இல்லை. சனநாயக முறையில் உயரதிகாரிகளிடம்
தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத் திகட்டச் சொல்லியிருக்கும் படம்தான் மண்டேலா. டேய் இளிச்சவாயா? என்றழைப்பதை எவ்வித
பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான். வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து
கால்டாக்ஸி ஓட்டுநரைக் கொலை செய்துவிட்டு வண்டியுடன் கொலைகாரர்கள் தப்பியோட்டம் என்று அவ்வப்போது செய்திகளில் பார்ப்போம். ஏன் அப்படி நடக்கிறது? கடத்தப்படும் வண்டிகள் என்னவாகின்றன்? என்பதையெல்லாம் ஒரு கதையாக்கி அதற்குள் காதல், பாசம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதையாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கால் டாக்ஸி. கால்டாக்ஸி ஓட்டுநராக நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன் வேடம்
வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.காடனாக நடித்திருக்கும் ராணாவும் ஒரு பக்கம் தோள்பட்டையை உயர்த்திக்
நாயகன் அருள் மற்றும் அவரது நண்பர்கள் ஆவணப்படமொன்றின் படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். அப்போது, அவர்கள் செல்லும் மகிழுந்து விபத்துக்குள்ளாகிறது. நடுக்காட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில் இருக்கும் வீடொன்றில் அடைக்கலம் தேடிச்செல்கிறார்கள். அந்த வீட்டில் வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில்
புதுமணத் தம்பதி கெவின் சாரா தேவா தேனிலவுக்குச் செல்கின்றனர். போன இடத்தில், நாம மொதல்ல பழகுவோம், அப்புறம்தான் அதெல்லாம் என்கிறார் நாயகி சாரா தேவா. பேரதிர்ச்சி அடையும் நாயகன் என்ன செய்தார்? அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் பூம்பூம் காளை. நாயகன் கெவின் அப்பாவித் தோற்றம் தருகிறார். நன்றாக நடனமாடுகிறார். நடிப்பில் இன்னும் முன்னேற்றம்





















