சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தர்புகாசிவா, கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அவர் இப்போது இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல்படம் முதல் நீ முடிவும் நீ.நேரடியாக ஜீ5 இணையத்தில்
விமர்சனம்
தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும். சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து மருவி மருவி புதுச்சொல் ஆகியிருக்கும். அதன் முழுப்பொருள் புரியாமலேயே நாம் பேசிக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட சொற்களில் ஒன்றுதான் பூச்சாண்டி. பூசாண்டி என்றால் பேய் பூதம் வகையைச் சேர்ந்த ஒருவர்
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே
2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு ஆகியனவற்றுக்கு ஆட்பட்டு சொல்லொணாத் துயரடைந்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய கலைப்படைப்பாகவும் சொல்லியிருக்கிற படம் சினம்கொள். ஈழ ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி,புற்று நோயால்
ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன். நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. ஜாலியாகப் பேசும் காட்சியிலும் சீரியசாகவே முகத்தை வைத்திருக்கிறார்.
பெண்களை உயிராகப் பார்க்காமல் உடலாகப் பார்த்து அவற்றைக் காட்சிப்படுத்தி அதற்கு விலை நிர்ணயிக்கும் ஒரு கூட்டம்.அழகான பெண் என்றால் இலட்சக்கணக்கில் விலை. அழகற்ற பெண் என்றால் 999 ரூபாய் விலை என்பதுதான் பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்கிற படத்தலைப்புக்குக் காரணம். முதலில் பெண் விலை என்றிருந்த தலைப்பு பலருடைய எதிர்ப்பு காரணமாக பென் விலை என்று மாறியிருக்கிறது. அக்கொடூர மனம்
அன்பு அறிவு ஆகிய இருவரும் இரட்டையர்கள். அன்பு மதுரையில் அம்மா மற்றும் தாத்தா அரவணைப்பில் மாவீரராக வலம் வருகிறார். அறிவு கனடாவில் அப்பா மற்றும் அத்தையின் அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறார். இரட்டையர்கள் பிரிந்தது ஏன்? இறுதியில் என்ன நடந்தது? என்பதைச் சொல்லும் படம்தான் அன்பறிவு. அன்பாகவும் அறிவாகவும் வரும் ஆதி, இரண்டு பாத்திரங்களுக்கும் வசன உச்சரிப்பு உடல்மொழி ஆகியனவற்றில்
காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி, காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால் காவல்துறையில் ஒடுக்கப்படுவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார். காவல்
சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர். அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய வேலை அவருக்கு வருகிறது. இந்த வேலைதான் முக்கியம், திருமணம் பிறகுதான் என
2016 நவம்பர் 8 ஆம் நாள் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இந்திய ஒன்றியமே அல்லோல கல்லோலப்பட்டது. வழக்கம்போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக்கொள்ள எளிய மனிதர்கள் ஏராளமாய் வதைபட்டார்கள். அக்கொடிய காலகட்டத்தை மீண்டும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது ரூ2000 படம். புதிய























