அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கண்ணா என்கிற கதறலைக் கேட்டுக் கலங்கிய நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட, அதை ஒரு திரைக்கதையாக்கி அப்படிச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாண்டிராஜ் நமக்கும் ஆறுதல் தந்திருக்கிறார். இரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொலை செய்யலம்மா களை
விமர்சனம்
சென்னையை உலுக்கும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கருவறுக்கத் துடிக்கும் அதிரடி காவல்துறை அதிகாரியை அவரது குடும்பத்தினரை வைத்து வில்லன் கூட்டம் மிரட்ட அதை எப்படி எதிர்கொண்டு வெற்றியடைகிறார் என்கிற பழைய ஒரு வரிக்கதைதான் வலிமை என்கிற மூன்று மணி நேரப் படம். அஜீத் அழகாக இருக்கிறார், ஒயிலாக நடக்கிறார், உடல் வளையாமல் நடனமாடுகிறார், துள்ளுந்தில் துரத்துகிறார், அம்மாவிடம்
தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது. அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான் ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. ஊரிலுள்ள எண்பது
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்று ஓங்கிக் கேட்டிருக்கும் படம் எஃப் ஐ ஆர். மத ரீதியான வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் இக்கேள்வி உரக்க எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு. இர்ஃபான் அகமது என்கிற வேடத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் விஷ்ணுவிஷால். கட்டுறுதியான உடல், கனிவான மனம் என சாமான்ய இஸ்லாமிய இளைஞனைப் பிரதியெடுத்திருக்கிறார்.
கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான். பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய
தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம். விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில்
ஒரு பெரியவீட்டில் தனியாக வசிக்கிறார் நாயகன் வெங்கட்ரெட்டி. கட்டிடப்பொறியாளரான அவர் உயர்நடுத்தர வாழக்கையில் இருக்கிறார்.அடிக்கடி கொடும்கனவுகள் அவருக்கு வருகிறது. கனவைத் தாண்டி திடீரென அவர் வீட்டுக்குள் மர்மநபர்களின் நடமாட்டம் அதைத் தொடர்ந்து சில கொலைகள் என பரபரப்பு ஏற்படூகிறது. யார் அந்த மர்ம நபர்கள்? எப்படி கொலைகள் நடக்கின்றன? அவற்றைச் செயவது யார்? என்கிற கேள்விகளுக்கு
நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சாதியப்பாகுபாடு தலைவிரித்தாடும் அக்கல்லூரி சாதி கடந்து விஜய்விஷ்வாவும் அவரது நண்பர்களும் நட்பாக இருக்கின்றனர். புற உலகின் சூழ்ச்சி அவர்களை எப்படி மாற்றுகிறது? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிற படம்தான் சாயம். விஜய்விஷ்வா கல்லூரி மாணவர் பாத்திரத்துக்குத் தேவையான அளவு
வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட். நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது. இடையில்,
ஆண்களின்(அண்ணன்) அவசர முடிவால் பெண்களுக்கு (தங்கை) ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்சமல்ல. கெளரவத்துக்காக அவரசத்தில் ஆண் எடுக்கும் சில முடிவுகள் அந்தப்பொழுதில் சரியானதாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் காலம் முழுவதும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் இருக்கும். அந்த மாதிரி ஒரு குடும்பக் கதையின் ஆராத ரணம்தான் ‘மருத’. பாரதிராஜாவின் சீடரான ஜி.ஆர்.எஸ். கதைக்காக பெரிதாக























