Home Archive by category விமர்சனம் (Page 62)

விமர்சனம்

விமர்சனம்

சேத்துமான் விமர்சனம் – ஏ.ஆர்.ரகுமானுக்கொரு வேண்டுகோள்

வழக்கமான திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலக்கணங்களை உடைத்து திரைக்கலை எனும் காட்சி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குப் பக்குவமாகக் கடத்தியிருக்கும் படம் சேத்துமான். இப்படத்தின் கதை என்ன? என்றால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதைதான். அவற்றில் எதைச் சொல்ல? எதை
Uncategorized விமர்சனம்

விஷமக்காரன் – திரைப்பட விமர்சனம்

மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின் நாயகனுக்கு இன்னொரு காதல். அது கல்யாணத்தில் முடிகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையில் வருகிறார்
விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் – திரைப்பட விமர்சனம்

1990 களில் கோவை மாவட்டம் போத்தனூர் தபால் நிலையத்தில் நடக்கும் கதை. அதனால் போத்தனூர் தபால் நிலையம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச்
விமர்சனம்

வாய்தா – திரைப்பட விமர்சனம்

இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க
விமர்சனம்

எம்ஜிஆர் ஆன உதயநிதி – நெஞ்சுக்கு நீதி திரைப்பட விமர்சனம்

தமிழ்த்திரைத்துறையில் வெளீப்படையாகச் சாதியச்சிக்கல்களைப் பெசுகிற படங்கள் வெளியாவது மிகவும் குறைவு. சாதியச்சிக்கல்களைப் பேசுகிற படங்களிலும் ஆதிக்கசாதி குறியீடாகத்தான் காட்டப்படும். அந்தப் படங்களிலும் இடைநிலைச் சாதியினர்தான் வில்லன்களாகக் காட்டப்படுவார்கள். ஆனால் முதன்முறையாக மிகவும் துணிச்சலாக, நோய்நாடி நோய்முதல் நாடி எனும் குறளுக்கு ஏற்ப இந்தப்படத்தில் முதன்மை வில்லனை
விமர்சனம்

ரங்கா – திரைப்பட விமர்சனம்

அரியவகை நோய்களில் ஒன்றான ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள கதாநாயகன் சிபிராஜ். குழம்பவேண்டாம், இந்த நோய் உள்ளவர்கள் கை அவர்கள் நினைப்புக்குக் கட்டுப்படாமல் தன் போக்குக்கு வேலை செய்யும். எடுத்துக்காட்டாக, இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் இடத்தில் எதிரில் உள்ளவர் முகத்தில் உங்கள் கை குத்துவிடும். நீங்கள் சிக்கலில் மாட்டிக்
விமர்சனம்

டான் – திரைப்பட விமர்சனம்

எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.  அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் படம். டான் என்றால் ரவுடிகளின் தலைவன் என்பார்கள். இந்த டான்
விமர்சனம்

ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு அதன் சக்தியை வீணடிக்காமல் மிதிவண்டியின் பின்பக்கத்தை மாவு அரைக்கும் எந்திரமாகவும் வடிவமைத்து ஒரே கல்லில் இரண்டு மங்காய் அடிக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ‘ஐங்கரன்’ படத்தில் இப்படியொரு அறிமுகக் காட்சி. இந்த வியப்பைப் படம் முழுவதும் தருகிறார் இயக்குநர் ரவிஅரசு. பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எத்தகைய அங்கீகாரம்
விமர்சனம்

விசித்திரன் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் தனித்துவம் காட்டும் படமாக வந்திருக்கிறது விசித்திரன். படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வேடத்தின் பொறுப்புணர்ந்து அதற்கு ஆயிரம்விழுக்காடு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார். இளமை மிடுக்கு, காதல் பொறுப்பு, நடுத்தர கனிவு ஆகிய மூன்று வெவ்வேறு வயது மற்றும் காலகட்டங்களை காட்சிகளில் சொன்னால்
விமர்சனம்

ஹாஸ்டல் – திரைப்பட விமர்சனம்

கல்லூரி விடுதியில் நடக்கும் மாணவர்களின் காமெடி கலாட்டாதான் இந்த ‘ஹாஸ்டல்’. கல்லூரி மாணவனான அசோக் செல்வன் விடுதியில் தங்கிப்படிக்கிறார். அந்த விடுதியின் பொறுப்பாளர் நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். மாணவர்கள் மட்டுமே தங்கும் அந்த விடுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு உதவி செய்தால் பணம் தருகிறேன் என்று சொல்லி அசோக் செல்வனிடம் உதவி