ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதை. படம் தொடங்கியவுடனே ஒரு பழங்குடி இனத்துச் சிறுமியை அவர்கள் அனுமதி இல்லாமலே இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அச்சிறுமியை மீட்க வருகிறார் ஜூனியர் என் டி ஆர். அதேநேரம் ஆங்கிலேயர்களிடம் உண்மையாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார்
விமர்சனம்
ஒருநாள் தூங்கிவிழிக்கும்போது நாயகன் கலையரசனுக்குக் குதிரைவால் முளைத்திருக்கிறது. 38 வயது, வைப்பகத்தில் வேலை, நடுத்தர வாழ்க்கை என இருக்கும் அவருக்கு இப்படி ஒரு விநோத சிக்கல்.காட்சிகளில் குதிரைவாலுடன் அவஸ்தைப்பட்டுக்கொண்டேயிருக்கிறார் கலையரசன். ஆனால் கதைப்படி அது உண்மையன்று. அப்படியானால் அது என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் படம். ரொம்பத் திமிர்
சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்றார் பாவேந்தர்.அதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள். அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென்
விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவெங்குமே ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதையும் மற்ற பிரிவினர் அத்துறையில் நுழைந்துவிடாமல் முடிந்தவரை தடுத்துவிடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன சில திரைப்படங்கள். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது க்ளாப். இப்படி ஒரு கதாநாயகனின் அறிமுகக்காட்சி எந்தப்படத்திலும் வந்திருக்காது எனும்படி
அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கண்ணா என்கிற கதறலைக் கேட்டுக் கலங்கிய நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட, அதை ஒரு திரைக்கதையாக்கி அப்படிச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாண்டிராஜ் நமக்கும் ஆறுதல் தந்திருக்கிறார். இரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப்
சென்னையை உலுக்கும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கருவறுக்கத் துடிக்கும் அதிரடி காவல்துறை அதிகாரியை அவரது குடும்பத்தினரை வைத்து வில்லன் கூட்டம் மிரட்ட அதை எப்படி எதிர்கொண்டு வெற்றியடைகிறார் என்கிற பழைய ஒரு வரிக்கதைதான் வலிமை என்கிற மூன்று மணி நேரப் படம். அஜீத் அழகாக இருக்கிறார், ஒயிலாக நடக்கிறார், உடல் வளையாமல் நடனமாடுகிறார், துள்ளுந்தில் துரத்துகிறார், அம்மாவிடம்
தமிழ்நாட்டின் ஓர் அழகிய கிராமம். அங்கு குலதெய்வம் கோயிலுக்குப் பல ஆண்டுகள் விழா கொண்டாடதாததால் சாமி கோபம் கொண்டிருக்கிறது. எனவே விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என ஊர் முடிவு செய்கிறது. அவ்விழாவுக்கு ஒரு மரக்கா நெல் வேண்டும் என்று தேடும்போதுதான் ஊரே விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு வழிகளில் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. ஊரிலுள்ள எண்பது
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்று ஓங்கிக் கேட்டிருக்கும் படம் எஃப் ஐ ஆர். மத ரீதியான வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் இக்கேள்வி உரக்க எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு. இர்ஃபான் அகமது என்கிற வேடத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் விஷ்ணுவிஷால். கட்டுறுதியான உடல், கனிவான மனம் என சாமான்ய இஸ்லாமிய இளைஞனைப் பிரதியெடுத்திருக்கிறார்.
கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான். பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய
தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம். விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில்





















