இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2. தலைப்பில்
விமர்சனம்
2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’. தொடர்வண்டித்துறையில் டிடிஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண
இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சொல்லாடல் உண்டு. அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது 777 சார்லி. படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி. நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை
வழக்கமான திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலக்கணங்களை உடைத்து திரைக்கலை எனும் காட்சி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குப் பக்குவமாகக் கடத்தியிருக்கும் படம் சேத்துமான். இப்படத்தின் கதை என்ன? என்றால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதைதான். அவற்றில் எதைச் சொல்ல? எதை விட்டுவிட? தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை
மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின் நாயகனுக்கு இன்னொரு காதல். அது கல்யாணத்தில் முடிகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையில் வருகிறார்
1990 களில் கோவை மாவட்டம் போத்தனூர் தபால் நிலையத்தில் நடக்கும் கதை. அதனால் போத்தனூர் தபால் நிலையம் என்றே பெயர் வைத்துவிட்டார்கள். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார் அதன் அதிகாரி. போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது. நேர்மையான அந்த அதிகாரி துடித்துப் போகிறார்.அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச்
இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்லியிருக்கும் படம்தான் வாய்தா. சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க
தமிழ்த்திரைத்துறையில் வெளீப்படையாகச் சாதியச்சிக்கல்களைப் பெசுகிற படங்கள் வெளியாவது மிகவும் குறைவு. சாதியச்சிக்கல்களைப் பேசுகிற படங்களிலும் ஆதிக்கசாதி குறியீடாகத்தான் காட்டப்படும். அந்தப் படங்களிலும் இடைநிலைச் சாதியினர்தான் வில்லன்களாகக் காட்டப்படுவார்கள். ஆனால் முதன்முறையாக மிகவும் துணிச்சலாக, நோய்நாடி நோய்முதல் நாடி எனும் குறளுக்கு ஏற்ப இந்தப்படத்தில் முதன்மை வில்லனை
அரியவகை நோய்களில் ஒன்றான ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்கிற நோய்த் தாக்கம் உள்ள கதாநாயகன் சிபிராஜ். குழம்பவேண்டாம், இந்த நோய் உள்ளவர்கள் கை அவர்கள் நினைப்புக்குக் கட்டுப்படாமல் தன் போக்குக்கு வேலை செய்யும். எடுத்துக்காட்டாக, இங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் இடத்தில் எதிரில் உள்ளவர் முகத்தில் உங்கள் கை குத்துவிடும். நீங்கள் சிக்கலில் மாட்டிக்





















