கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’ அதாவது பாட்டி.இந்தப் பெயரில் உருவாகியிருக்கும் படம் பாசக்கதையாக இருக்கும் என்று பார்த்தால் பயப்படும் கதையாக இருக்கிறது. பல கிலோமீட்டர்களுக்கு வேரு எந்த வீடும் இல்லாத அடர்ந்த காட்டுக்கு நடுவே மிக அழகான, பசுமையான மரங்கள்
விமர்சனம்
ஃபாரின்சரக்கு என்றால் வெளிநாட்டு மதுவகை என்பதுதான் நேரடி மொழிபெயர்ப்பு. ஆனால் இந்தப்படத்தில் அதற்குப் புதுஅர்த்தம் சொல்லியிருக்கிறார்கள். குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் இரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரைப் பத்து நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு ஒரு ரவுடிக்கூட்டத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே சமயம், குஜராத்
குடும்ப உறவுகள் அவை தொடர்பான உணர்வுகள் ஆகியன அழியாவரம் பெற்றவை. இளைஞர், பெரியவர்,சிறியவர் என எல்லோரையும் தொடக்கூடியவை. அவற்றைத் தன்னுடைய எல்லாப்படங்களிலும் கொண்டுவரும் இயக்குநர் ஹரி, யானை படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா, அம்மா, அப்பாவின் முதல்மனைவிக்குப் பிறந்த மூன்று சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் அவர்களுடைய குழந்தைகள்
நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஸ்தாபகரான விக்ராம் சாராபாயின் நேரடி மாணவர். சதீஷ் தவானுடன் இணைந்து பணியாற்றியவர். 1994 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தனது வீட்டின் அருகேயிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தானுக்கு
பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள். இதுவரை அப்பாவியான நாயகன் வேடத்தில் மட்டுமே பார்த்துவந்த ஜெய்க்கு இந்தப்படத்தில்
ஊட்டியில் ஒரு சைக்கோ கொலைகாரனால் தொடர்கொலைகள் நடக்கின்றன. அவற்றில் நாயகன் அசோக்செல்வன் கண்முன்னேயே நாயகி ஐஸ்வர்யாமேனன் கொலை செய்யப்படுகிறார். அதனால் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன் அசோக்செல்வனுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையைச் செய்தது யார்? என்கிற துப்பு கிடைக்கிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் படம். ஐஸ்வர்யாமேனனின் காதலராக
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம். தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம்
ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் மாயோன். தொல்பொருள் துறையில் பணியாற்றும்
இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின் கஷ்டத்தைப் போக்க மருத்துவசிகிச்சைக்காகக் கேரளா செல்கிறார் நயன்தாரா. ஒரு கடுமையான மழை நாளில் நடக்கும் பேருந்துப் பயணம். அப்பேருந்துக்குல், பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்து தன் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையுடன் பயணிக்கும் நடுத்தரவயதுக்காரர்.
சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?





















