தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து் வாழ்வாதாரம் தேடி மும்பைக்குச் செல்கிறார் சிம்பு. அங்குபோய் ஓர் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்கிறார். உணவுவிடுதி வேலையைத் தாண்டி இன்னொரு இருள் உலகம் அங்கு இருக்கிறது. அதற்குள் விருப்பமில்லாமலே நுழையும் சிம்பு அதன்பின் என்னவாகிறார்? என்பதை இரத்தமும் சதையுமாகச்
விமர்சனம்
கணம் அம்மா பாசத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படம். இசைக்கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் ரமேஷ் திலக், திருமணத்துக்குத் தீவிரமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சதீஷ். பள்ளியிலிருந்தே இணைபிரியா நண்ர்களான இவர்கள் மூவருக்கும், தனித்தனியே தேவைகளும் ஆசைகளும் உண்டு. ஆனால், அவற்றை அடைய முடியாத வாழக்கை. இந்தச் சூழலில் காலம் கடக்கும்
பாலியல் தொழில் செய்யும் சாயாசிங்குக்கு அதனால் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதன்பின் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறொரு வேலைக்குப் போய் குழந்தையை வளர்த்து வருகிறார். பெரும் சோதனையாக அந்தக் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நோய் வந்துவிடுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் தந்தையின் எலும்புமஜ்ஜை இருந்தால்தான் முடியும் என்கிற நிலை. அதனால் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்று
அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார். அவர்களைக் கொலை செய்தது யார்? என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம். காவல்துறையில் இந்தக் கொலைவழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வா மற்றும் சுபா ஆகியோர்தாம் படம் நெடுக வருகிறார்கள். விஷ்வா நிதானமாகவும் சுபா கோபமாகவும் அணுகுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை
வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழு மர்மமான முறையில் மரணமடைகிறது. அதன்பின் ஆர்யா தலைமையிலான குழு செல்கிறது. அவர்கள் போகும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான்
வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் கண்டேன். இப்போது வந்த லோகேஷ் கனகராஜ் எல்லாம் loki verse என்று ஆரம்பித்துவிட்டார். கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். டிரெய்லரை உற்று நோக்கும்போது மச்சம் என்பது அடமையடாவின் sequal போலவும் எனை நோக்கித் தோயும் பாட்டாவின் prequel போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா! ‘குதிரை வந்தது.. கன்னி இறங்கினாள்… ஐயோ அம்மா
ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு மர்மமனிதர் இண்டர்போலிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக்
சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்ட இளைஞர்களை சமுதாய விரோதக் கூட்டங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன?ஊடகங்களில் வெளியாகும் பொய்கள் எப்படி சில சமயங்களில் உண்மையாகி விடுகின்றன? ஆகிய ஆழமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் படம்தான் ஜான் ஆகிய நான். ஒரு கிராமத்தில் 44 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாத அந்தக் கொலைகளின் பின்னணி குறித்து
பயிற்சிக் காவலர் அருள்நிதி பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கைக் கையிலெடுக்கிறார். அந்த வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக இருக்கிறது. அதை அவர் எப்படிக் கையாள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் டைரி. காவல்துறை வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. அழுத்தமான
வருடத்திற்கு சுமார் இருநூறு படங்கள் வாரத்திற்கு சுமார் நான்கு படங்கள் என்று வெளியாகும்போது அவற்றில் தங்கள் படம் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இயக்குநரும் மெனக்கெடுவார்கள். அப்படி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் யோசித்ததன் விளைவாகவே, நட்பு, உறவு, காதல், துரோகம் ஆகிய உணர்வுகளோடு முக்கோண விதி என்றும் தொடர்பியல் விதி என்கிற புதிய சொல்லாடல்களையும் அது























