ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல் டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ். நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக்
விமர்சனம்
எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு. தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர்
காதல் படங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். காலங்களில் அவள் வசந்தம் எவ்விதம்? வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார். அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார்?
சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். ஏன் எதிர்க்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல
இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும்
மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம்
டைம் டிராவல் வகைப் பட வரிசையில் சேரக்கூடிய படமாக வந்திருக்கிறது ஷூ. முழுமையான தலைப்பு ரிபீட் ஷூ. ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்துநிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். அது சந்தர்ப்ப வசத்தால் யோகிபாபுவின் கைகளுக்கு மன்னிக்கவும் கால்களுக்குக் கிடைக்கிறது. அதனால்
அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ்டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எதிர்கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம். புதியகண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவராக இருக்கிறார் நாயகன் விதார்த். ஆள் இல்லாமல் இயங்கும் மகிழுந்தை உருவாக்குவது அவருடைய கனவு. அந்தக்கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும் அப்பா திடீரென மரணமடைகிறார். அவர் எப்படி
ஸ்னூக்கர் என்னும் மேடைக் கோல் பந்து விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு வந்திருக்கும் முதல் திரைப்படம் சஞ்ஜீவன். புதுமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டை இரசித்து விளையாடும் காட்சிகள்,காதல் காட்சிகள், நண்பர்களோடு இருக்கும் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும், சிவ் நிஷாந்த், விமல் ராஜா,
மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடக்கும் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதையே தொழிலாகக் கொண்ட நாயகன் மெட்ரோ சிரிஷுக்கு திருமணம் செய்வதில் ஏகப்பட்ட தடைகள். காதலியும் கைவிட்டுவிட்டுப் போன நிலையில் அவருக்குத் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் பிஸ்தா. மெட்ரோசிரிஷ் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார். காதலி























