Home Archive by category விமர்சனம் (Page 53)

விமர்சனம்

விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் – மலையாளப் பட விமர்சனம்

வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து முன்னேறவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் பொருளீட்டலாம் என்று சொல்லியிருக்கும் மலையாளப் படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இளம் வழக்கறிஞர் வினீத்சீனிவாசன் தன் தாயுடன் வசித்து வருகிறார். வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
Uncategorized விமர்சனம்

பரோல் – திரைப்பட விமர்சனம்

வெறுப்பை விதைப்பதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்று விஜய்சேதுபதி குரலில் தொடங்கும் பரோல் திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையால் கவனம் ஈர்த்திருக்கிறது. கோவலன் கரிகாலன் ஆகியோரது அம்மா ஆராயி ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல அடுக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையால் படம் சுவாரசியமாக நகர்கிறது. கரிகாலனாக நடித்திருக்கும் லிங்கா, கோவலனாக நடித்திருக்கும்
விமர்சனம்

காபி வித் காதல் – திரைப்பட விமர்சனம்

ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். திவ்யதர்ஷினி இவர்களின் சகோதரி. இவர்களில் ஸ்ரீகாந்த்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஜீவாவுக்கும் ஜெய்க்கும் திருமணம் நடத்த அப்பா பிரதாப்போத்தன் முடிவு செய்கிறார்.ஜீவா, ஐஸ்வர்யாதத்தாவுடன் மூன்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்கிறார்.அவரையே அவருக்குத் திருமணம் செய்வது என்றும், ஜெய்க்கு மாளவிகா சர்மாவை மணமுடிப்பது
விமர்சனம்

லவ் டுடே – திரைப்பட விமர்சனம்

காதலில் நம்பிக்கை வேண்டும் என்று சொல்லியிருக்கும் படம் லவ்டுடே. நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார். அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி
விமர்சனம்

பனாரஸ் – திரைப்பட விமர்சனம்

ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல்  டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ். நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார். நாயகி சோனல் மாண்ட்ரியோ அழகும்
விமர்சனம்

கேரளாவின் காந்தாரா – நிவின்பாலியின் படவெட்டு பட விமர்சனம்

எங்கள் மண் எங்களுக்கே எனும் மண்ணுரிமைப்போராட்டத்தை மையப்படுத்தி கன்னடத்தில் வெளியான காந்தாரா மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதற்கு இணையாக மலையாளத்தில் வெளியாகி வரவேற்புப் பெற்றிருக்கும் படம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருக்கும் படவெட்டு. தொப்பையும் தொந்தியுமாய் இருப்பதோடு எப்போதும் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருக்கிறார் நிவின்பாலி. கேரளாவின் கண்ணூர்
விமர்சனம்

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

காதல் படங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். காலங்களில் அவள் வசந்தம் எவ்விதம்? வருடத்துக்கு ஒரு பெண்னைக் காதலித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் கல்யாணம் ஆகிவிடுகிறது. கல்யாணத்துக்குப் பிறகு மனைவியைத் தீவிரமாகக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் உன்னுடையது காதலே இல்லை என்று மனைவி சொல்கிறார். அதிர்ந்து போகும் அவர், அதற்குப் பின் என்ன முடிவெடுக்கிறார்?
விமர்சனம்

பிரின்ஸ் – திரைப்பட விமர்சனம்

சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்.  ஏன் எதிர்க்கிறார்?  கடைசியில் என்ன நடக்கிறது? என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல
விமர்சனம்

சர்தார் – திரைப்பட விமர்சனம்

இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும்
விமர்சனம்

காந்தாரா – திரைப்பட விமர்சனம்

மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் படம்