பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல்
விமர்சனம்
நாம் அன்றாடம் தெருக்கூட்டும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம் குப்பை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம், நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையைப் பார்த்து அதை நமக்கும் காட்டி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக். படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் இளைஞன் திடீரென மரித்துப்போகிறான்.அவனுடைய
நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம் டிஎஸ்பி. திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகனாக ஜாலியாகச் சுற்றிக்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை. அதேகாலத்தில் கேரளமாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யாலட்சுமிக்கும் அவர் வீராங்கனை என்பதாலேயே மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஆயிரம் பொய்
ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாதபடி பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது? அதற்கு யார் காரணம்? அதை ராஜ்கிரண் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் பட்டத்து அரசன். மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப்
ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
பொருளீட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காக எத்தகைய அநியாயங்களையும் அலட்சியமாகச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றிற்குத் துணைபோகும் அரசாங்கங்கள் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கொடூர பாதிப்புகள் ஆகியனவற்றை திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் கலகத்தலைவன். நாயகன் உதயநிதி ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்பதைத் தொடக்கக் காட்சியிலேயே காட்டி கதைக்குள்
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பிரதாப்போத்தன், ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் நரேனை அணுகுகிறார். நரேன் அந்த வழக்கைக் கையிலெடுத்து அந்தப் பெண்ணைத் தேடும் அதேநேரம் சிபிஐ அதிகாரி நட்டியும் அந்தப் பெண்ணைத் தேடுகிறார். யார் அந்தப் பெண்? எதற்காகத் தேடுகிறார்கள்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம், யூகி.
ஒரு மாபெரும் புதையலைத் தேடிச் செல்லும் கதை. சாகசப் பயணங்கள், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாராகியிருக்கும் படம் செஞ்சி. பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வரும் நாயகி சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் உள்ளே நுழைகிறார்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள்





















