முழுக்க முழுக்க சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். காவல்நிலையத்தின் பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இது காவல்துறை சார்ந்த படமாக இருக்குமா? என்றால் இல்லை.காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக
விமர்சனம்
குருவிராஜன் என்கிற தாதாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்தப் பெயர். நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார்.காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர். அவரை வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒர் சாமான்யனாக நடித்திருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் தாக்கிவிடுகிறார். காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்? இவ்வளவு பதட்டமான கதையை
விமானப்படை வீரராக இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாகிறார் உபேந்திரா. அவருக்கு ஒருபக்கம் மற்ற தாதாக்களின் தொல்லை இன்னொருபக்கம் காவல்துறை தொல்லை.உபேந்திரா ஏன் தாதா ஆனார்? இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். இந்தியா மிரளும் தாதா என்பதற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார் உபேந்திரா. கட்டுக்கோப்பான உடல் துடிப்பான நடிப்பு ஆகியனவற்றால் நல்ல வரவேற்பைப்
முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கிங்ஸ்லி,ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி,ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் உட்பட ஏராள நடிகர்கள்.இவர்கள்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எம்ஜிஆர் நடித்த நினைத்ததைமுடிப்பவன் படத்துக்காக 1975 ஆம் ஆண்டு மருதகாசி எழுதிய வரி இன்றைக்கு உதயநிதி நடிக்கும் படத்தின் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடுத்தரவர்க்க இளைஞரான உதயநிதி, மதுபோதையில் இருக்கும் பூமிகாவுக்கு உதவுகிறார். அது அவருக்குப் பெரும் சிக்கலாகிறது. அது என்ன சிக்கல்? அது எப்படி உண்டானது? அதற்கான தீர்வு என்ன?
டி 3 என்பது குற்றாலத்தில் உள்ள ஒரு காவல்நிலையம். அங்கு காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் நாயகன் பிரஜின், ஒரு விபத்து அதில் நேர்ந்த இளம்பெண் மரணம் குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்து பல சிக்கல்கள். அதன் உச்சமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில் இறக்கிறார்.விபத்துகளுக்குக் காரணம் என்ன? விசாரணை முடிவு என்னவானது என்பனவற்றிற்கு விடை
ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள். ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை செய்து கொண்டிருந்த ஆடுகளம் முருகதாஸ் இந்தப்படத்தில் நாயகன். கதைக்கேற்றவர். வாடகை
கற்பனைக்கு எல்லை கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விநோதமான நோயை உருவாக்கி அதைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து இரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்து கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும் படம் குடிமகான். குடிமகன் என்பதைத் தவறாக எழுதிவிடவில்லை. படத்தின் பெயரே அதுதான். நாயகன் விஜய்சிவன் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானியன். அவருக்கு ஜங்க்ஃபுட் எனப்படும் நொறுக்குத்தீனிகள்
எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது என்று நினைத்த ஜெயம்ரவிக்கு இந்தப்படத்தில் வில்லன்கள் வேலை செய்யும் கரடுமுரடான வேலை.அதற்கும் நான் சளைத்தவனில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் ஜெயம்ரவி. கடல், கப்பல், கடத்தல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாய அக்கறையுடன் உலக அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர்
அழகு என்றால் ஆபத்து என்று மனதில் ஆழமாகப் பதிந்த ஓர் இளைஞனின் விபரீத சிந்தனையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஓர் உளவியல் மருத்துவரின் அணுகுமுறையோடும் அக்கறையோடும் பேசியிருக்கும் படம் பியூட்டி. அப்பா மகன் என இருவேடங்களில் நடித்திருக்கிறார் நாயகன் ரிஷி. உளச்சிக்கல் உடையவர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.காதல்காட்சிகளிலும் இறுக்கமாகவே இருக்கிறார். நாயகி கரீனஷா,























