கனிமவளக் கொள்ளை அதற்கெதிரான மக்கள் போராட்டம், அவற்றை தந்திரமாகவும் ஆணவமாகவும் ஒடுக்கத் துடிக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் ஆகியனவற்றோடு காவல்துறைக்குள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது விடுதலை. கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப்
விமர்சனம்
இதிகாசத்தில் இராமனை எதிர்ப்பவன இராவணன்.இந்த பத்துதல யில் அரசியல் இராமர்களை எதிர்க்கிறார் இராவணன். பத்துதல என்கிற பெயர் வைக்கக் காரணம் படத்தில் சிம்புவின் பெயர் ஏ.ஜி.இராவணன் என்பதுதான். அதற்கேற்ற கம்பீரத்துடன் வருகிறார் சிம்பு. அன்பும் பாசமும் நிறைந்த அழகான வாழ்க்கையிலிருந்து கரடுமுரடான வாழ்க்கைக்குள் வந்தாலும் அடிமனசின் ஈரம் காயாத வேடம் சிம்புவுக்கு. கவுதம்கார்த்திக்,
இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக்
சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது. அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின்
முழுக்க முழுக்க சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். காவல்நிலையத்தின் பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இது காவல்துறை சார்ந்த படமாக இருக்குமா? என்றால் இல்லை.காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக எவ்வாறு பலி கொடுக்கிறார்கள்? என்பதைச் சொல்வதுதான் படம். மைக்கேல் தங்கதுரை,
குருவிராஜன் என்கிற தாதாவை மையமாகக் கொண்ட கதை என்பதால் இந்தப் பெயர். நடிகர் அர்ஜை குருவிராஜன் என்கிற தாதாவாக நடித்திருக்கிறார்.காவல்துறைக்கு தண்ணிகாட்டும் தாதா அவர். அவரை வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒர் சாமான்யனாக நடித்திருக்கும் ஆஷிக்ஹுஷைன் ஒருகட்டத்தில் தாக்கிவிடுகிறார். காவல்துறையே பயப்படும் ஒருவரை சாதாரண ஒரு ஆள் தாக்கினால் என்னவாகும்? இவ்வளவு பதட்டமான கதையை
விமானப்படை வீரராக இருந்து சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாகிறார் உபேந்திரா. அவருக்கு ஒருபக்கம் மற்ற தாதாக்களின் தொல்லை இன்னொருபக்கம் காவல்துறை தொல்லை.உபேந்திரா ஏன் தாதா ஆனார்? இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். இந்தியா மிரளும் தாதா என்பதற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார் உபேந்திரா. கட்டுக்கோப்பான உடல் துடிப்பான நடிப்பு ஆகியனவற்றால் நல்ல வரவேற்பைப்
முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கிங்ஸ்லி,ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி, சந்தானபாரதி, மனோபாலா, சுப்பு பஞ்சு, சத்யன், சுவாமிநாதன், மதன் பாப், மயில்சாமி,ஆடுகளம் நரேன், தங்கதுரை, ஸ்ரீமன், சுரேஷ் மேனன் உட்பட ஏராள நடிகர்கள்.இவர்கள்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எம்ஜிஆர் நடித்த நினைத்ததைமுடிப்பவன் படத்துக்காக 1975 ஆம் ஆண்டு மருதகாசி எழுதிய வரி இன்றைக்கு உதயநிதி நடிக்கும் படத்தின் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடுத்தரவர்க்க இளைஞரான உதயநிதி, மதுபோதையில் இருக்கும் பூமிகாவுக்கு உதவுகிறார். அது அவருக்குப் பெரும் சிக்கலாகிறது. அது என்ன சிக்கல்? அது எப்படி உண்டானது? அதற்கான தீர்வு என்ன?
டி 3 என்பது குற்றாலத்தில் உள்ள ஒரு காவல்நிலையம். அங்கு காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் நாயகன் பிரஜின், ஒரு விபத்து அதில் நேர்ந்த இளம்பெண் மரணம் குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையைத் தொடங்கியதிலிருந்து பல சிக்கல்கள். அதன் உச்சமாக அவர் மனைவியும் அதேபோன்றதொரு விபத்தில் இறக்கிறார்.விபத்துகளுக்குக் காரணம் என்ன? விசாரணை முடிவு என்னவானது என்பனவற்றிற்கு விடை





















