ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள். ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை
விமர்சனம்
கற்பனைக்கு எல்லை கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விநோதமான நோயை உருவாக்கி அதைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து இரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்து கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும் படம் குடிமகான். குடிமகன் என்பதைத் தவறாக எழுதிவிடவில்லை. படத்தின் பெயரே அதுதான். நாயகன் விஜய்சிவன் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சாமானியன். அவருக்கு ஜங்க்ஃபுட் எனப்படும் நொறுக்குத்தீனிகள்
எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது என்று நினைத்த ஜெயம்ரவிக்கு இந்தப்படத்தில் வில்லன்கள் வேலை செய்யும் கரடுமுரடான வேலை.அதற்கும் நான் சளைத்தவனில்லை என்று சொல்லுமளவுக்கு எல்லாக்காட்சிகளிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் ஜெயம்ரவி. கடல், கப்பல், கடத்தல் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாய அக்கறையுடன் உலக அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர்
அழகு என்றால் ஆபத்து என்று மனதில் ஆழமாகப் பதிந்த ஓர் இளைஞனின் விபரீத சிந்தனையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஓர் உளவியல் மருத்துவரின் அணுகுமுறையோடும் அக்கறையோடும் பேசியிருக்கும் படம் பியூட்டி. அப்பா மகன் என இருவேடங்களில் நடித்திருக்கிறார் நாயகன் ரிஷி. உளச்சிக்கல் உடையவர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.காதல்காட்சிகளிலும் இறுக்கமாகவே இருக்கிறார். நாயகி கரீனஷா,
இங்கிருப்பவர்கள் காசிக்குப் போக ஆசைப்படுவார்கள் காசியில் இருப்பவர்களுக்கோ இராமேஸ்வரம் வர ஆசை. ஒரு தீபாவளி நாளில் இராமேஸ்வரத்துக்கு வரும் வட இந்தியக் குடும்பம் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திப்பதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும்தாம் அயோத்தி படம். வட இந்தியக்குடும்பத் தலைவராக நடித்திருக்கும் யஷ்பால் குடும்பத் தலைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகளாக நடித்திருக்கும் பிரீத்திஅஸ்ராணி
பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் சிக்கல்கள அதன் விளைவுகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் படங்கள் வரிசையில் சேரும் படம் அரியவன். அறிமுக நாயகன் இஷான் கபடி வீரராக இருப்பது அவர் செய்யும் செயல்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. சண்டைக்காட்சிகளை நன்றாகச் செய்வதோடு இல்லாமல் காதல் காட்சிகளிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார் நாயகன் இஷான்.
கல்யாணம் ஆகாமல் காதலியும் இல்லாமல் தனித்ததிருக்கும் இளைஞர்களுக்காக,ஓர அறிவியலாளர் பேசி, பழகும் பெண்ணை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவு கொண்ட நவீன கைபேசி ஒன்றை உருவாக்குகிறார். அதை பல கோடிக்களுக்கு விற்றுப் பணம் பார்க்க வேண்டும் என பகவதி பெருமாள் ஆசையில் மண்ணைப்போட்டு திருட்டுப்போகிறது. சிம்ரன் என்று பெயர் கொண்ட அந்த கைபேசி,உணவு விநியோக வேலை பார்க்கும் நாயகன் சிவாவிடம்
இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது
சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன். முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப் பேசிய இயக்குநர் மோகன்ஜி, இந்தப்படத்தில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமான சிக்கலைப் பேச
இரு கோடுகள், விஸ்வாசம் இந்த இரண்டையும் எடுத்து ஒரு ஜாரில் போட்டு மிக்சியில் அரைத்தால் கிடைக்கும் ஜூஸ்தான் டாடா. ஆனால் இதில் கலக்கப்பட்டுள்ள சுவை வேறு மாதிரியானது. அதைத்தான் டாடா வேறுபடுத்திக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கவினும் அபர்ணா தாசும் காதலிக்கிறார்கள். இதில் அபர்ணா கர்ப்பமாகிறார். இருவரையும் அவரவர் குடும்பங்கள் கைகழுவி விட, நண்பர்கள் உதவியுடன் ஒரு





















