காதலில் தோல்வியடையும் இளைஞர் ஒருவர் அதனால் சித்தம் கலங்கிப் போகிறார். அதற்கு சிகிச்சை எடுக்கும் நேரத்தில் அவருக்குப் புதிய சிந்தனை தோன்றுகிறது. அதை நண்பர்களுடன் சேர்ந்து செயல்படுத்த எண்ணிக் களமிறங்குகிறார். அந்தப் புதிய சிந்தனை என்ன? அதைச் செயல்படுத்த நினைக்கும்போது என்னவெல்லாம் நடக்கிறது?
விமர்சனம்
இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொல்வடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வதுதான் உடன்பால். இந்தப்பெயரை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால். சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு
நிழலுக தாதாவாக இருக்கும் ஜாஸ்பர், தன் மனைவி கொல்லப்பட்டதும் அந்தத் தொழிலை விட்டு ஒதுங்கி வாழ்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அருகே உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கடத்தப்பட்டதும் மீண்டும் களமிறங்குகிறார். அது எதனால்? என்பதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் ஜாஸ்பர். தற்கால ஜாஸ்பர் வேடத்தில் சி.எம்.பாலாவும் இளவயது ஜாஸ்பராக
ஒரு படத்தை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு அதன் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப்படம் பிராஜெக்ட் சி பாகம் 2. புதுமுக நாயகன் ஸ்ரீ, விஞ்ஞானியாக ராம்ஜி, விஞ்ஞானி வீட்டு வேலைக்காரம்மாவாக வசுதாகிருஷ்ணமூர்த்தி, மருத்துவராக சாம்ஸ் ஆகியவர்களோடு மேலும் ஓரிரு கதாபாத்திரங்கள் மட்டுமே வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோ. நாயகன் ஸ்ரீ
வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட படம் என்ஜாய். வசதியான வீட்டுப் பையன்களாக மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஷ்குமார் ஆகியோர் வருகிறார்கள். கல்லூரி மாணவிகளாக வரும்
கதாநாயகர்கள் காவல்துறை வேடம் ஏற்கிறார்கள் என்றால் உயரதிகாரி வேடமாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் உதவி ஆய்வாளராகவாவது வருவார்கள். ஆனால், காவல்துறையின் மிக அடிநிலையில் இருக்கும் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால். இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக தாடி மீசையுடன் ரொம்ப அப்பாவியாக வருகிறார் விஷால். இடைநீக்கம் இரத்து செய்து மீண்டும் வேலையில் சேரும்போது காட்டும் துடிப்பு
நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினைந்து வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷா. நயன்தாராவின் அப்பா சத்யராஜ். வினய் மருத்துவராக இருக்கிறார். உயர்நடுத்தர வர்க்கக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா வருகிறது. வினய் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் பார்க்கிறார். பல உயிர்களைக் காப்பாற்றிய அவரையும் கொரோனா பலி கொள்கிறது. துடித்துப் போகிறது குடும்பம். மகள்
எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவே இல்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181. ஒரு திரைப்பட இயக்குநர் புதிய திரைக்கதை எழுதுவதற்காக ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பண்ணைவீட்டுக்குப் போகிறார். கூடவே அவர்
எல்லோராலும் எள்ளிநகையாடப்படுகிறவர்கள் அரசியல்கட்சித் தொண்டர்கள்.அவர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம்தான் கட்சிக்காரன்.கட்சித் தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன்,அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் இழப்பீடு கேட்பதும்தான் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜித் சரவணனின் அப்பாவி
கன்னடத்தின் முதல் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த். பதிப்புத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேவரின் வாழ்க்கைக் கதை உண்மைக்கு மிக நெருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளது. அவருடைய வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே





















