கதாநாயகர்கள் என்றாலே அதீத சக்தி உள்ளவர்கள்தாம். நூறு பேரை அடித்துத் துவைப்பார்கள், ஆயிரக்கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தாலும் நாயகன் மேல் மட்டும் ஒரு குண்டு படாது. வெறும் நாயகன் என்றாலே அப்படி, இந்தப்படத்தில் நாயகன் ஆதிக்கு இடிவிழுவதால் சிறப்பு சக்திகள் வந்துவிடுகின்றன. அவற்றை வைத்துக்
விமர்சனம்
ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொள்ளும் கதை என்று முன்னுரை வாசித்துவிட்டுத் தொடங்குகிறது படம். சொத்துக்காக தன்னை அடையத் துடிக்கும் மாமன்களிடமிருந்து ஒதுங்கி வாழ்கிறார் நாயகி சித்தி இதானி. அதோடு நாயகன் ஆர்யாவைச் சந்திக்க முனைகிறார். அது தெரிந்து ஆர்யாவே அவரைத் தேடி வருகிறார். அப்புறம் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு உள்ளாடை தெரிய அடித்து
பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு அவ்வப்போது வெளியாகும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது துரிதம். நாயகனுக்கு வாடகைமகிழுந்து ஓட்டுநர் வேடம். நாயகி அவருடைய வாகனத்தில் பயணிப்பவர். நாயகி மீது நாயகனுக்கு ஒருதலைக் காதல். இந்தச் சூழலில் இருவரும் ஒரு நீண்ட துள்ளுந்துப் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது நாயகி கடத்தப்படுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைத் துரிதமாயச்
அந்த ஏழு நாட்கள், அழகி, சில்லுனு ஒரு காதல் என அவ்வப்போது, மலரும் நினைவுகள், அவை தந்த சுகங்கள், சமகாலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றைச் சொல்லி பார்ர்க்கும் அனைவரையும் ஏதோவொரு விதத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் படங்கள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றின் மையம் தீராக் காதலாகத்தான் இருக்கும். எனவே அந்தப் பெயரிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரோகின்
சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி
ஒரு கொலை நடக்கும், அது எப்படி நடந்தது? அதைச் செய்தவர் யார்? அவருடைய நோக்கம் என்ன? என்பதைச் சொல்லும் வரிசையில் வந்திருக்கும் படம் மாருதிநகர் போலிஸ் ஸ்டேசன். இந்தப்படத்தில் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரே கொலை செய்யப்படுகிறார். அவரோடு சேர்ந்து ஒரு ரவுடியும் கொலை செய்யப்படுகிறார். இவர்களைக் கொன்றது யார்? என்று காவல்துறை உயரதிகாரி ஆரவ், துப்பறிகிறார். ஆரவ்வின் உயரத்துக்கும்
பெரும் பணக்காரர்களில் ஒருவரான விஜய்ஆண்டனிக்கு நண்பர்களின் சதியால் பிச்சைக்கார விஜய்ஆண்டனியின் மூளை வைக்கப்படுகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பெரும்பணக்காரர் மற்றும் பிச்சைக்காரர் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களும் ஏற்கெனவே பார்த்ததுதான். நேர்த்தியாகச் செய்திருக்கிறார். நாயகி காவ்யாதாப்பருக்கு பாடல்கள் மற்றும் சில காட்சிகளில்
ஈழத்தமிழ் ஏதிலிகளின் வலியைச் சொல்லும் படமாக வந்திருக்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர். 2000 ஆண்டுகளுக்குப் பின் நம் இனம் இப்படி ஒரு வலியைச் சந்திக்கும் என்று கணித்தாரோ கணியன்பூங்குன்றன்? அவர் அன்றைக்குச் சொன்ன சொல் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது இந்தப்படம் பார்க்கும்போது புரியும். ஈழத்திலிருந்து தப்பி கேரளாவுக்கு வரும் விஜய்சேதுபதி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சூழலில்,
காவல்துறையில் கான்ஸ்டபிள் என்றழைக்கப்படும் கடைநிலைக்காவலர், மாநில முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளியை எதேச்சையாக கைது செய்கிறார். அந்தக் குற்றவாளியைக் கொலை செய்ய காவல்துறை உயரதிகாரி ஒருவர் அலைகிறார்.அவரை மீறி குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த காவலர் முனைகிறார். அந்த ஓட்டத்துக்கு நடுவே காவலரின் காதலியும் வீட்டைவிட்டு ஓடிவந்து காவலருடன்
வறுமை நிலை என்கிற புறமும் அன்பைத் தேடும் அகமும் மதம் தாண்டிய மனிதம் சார்ந்தது என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஃபர்ஹானா பெண்களின் மடியில் பெருமைகளைச் சுமத்தியிருக்கும் மதங்கள், அவர்கள் வீட்டைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது என்று சொல்லியே வளர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காக்க வேலைக்குப் போகும் பெண் சந்திக்கும் சிக்கல்களைக்























