ஒரு சிறிய கிராமம், அங்குள்ள ஒரு காவல்நிலையம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டு பென்னாம்பெரிய அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாகியிருக்கும் படம் சத்தியசோதனை. நாம் செல்லும் சாலையில் ஒரு பிணம் கிடந்தால் பார்த்தும் பார்க்காததும்போல் ஒதுங்கிப் போவோம். ஆனால்
விமர்சனம்
ஒரு சாமானியன் சாதனையாளனாக மாறும் கதைகள் நிறைய வந்துள்ளன. அவருடைய மாற்றத்திற்கான காரணத்தைப் புதிதாக உருவாக்கி கவனிக்க வைத்திருக்கும் படம் மாவீரன். சென்னையின் பூர்வகுடிகளை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கதை இருக்கிறது. அவ்வாறு செல்லும் குடிசைப்பகுதி மக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன்.
திரைப்படங்கள் வருகையால் கிராமிய நடனக்கலைகள் பாதிப்புக்கு ஆளாகின, அதே சமயம் அக்கிராமிய நடனக்கலைகள் மற்றும் கலைஞர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் காடப்புறா கலைக்குழு. இந்தப் பெயரில் கலைக்குழு நடத்தி வருகிறார் முனீஷ்காந்த். தம் குழுவினரைக் குடும்பம்போல் பாவிக்கிறார். ஒரு கலைக்குழு இருந்தால்
காதலே பிடிக்காத கதாநாயகன், அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் என்கிற ஒருவரியை வைத்துக் கொண்டு நகைச்சுவைப்படமொன்றைக் கொடுக்க முயன்றுள்ளனர். அதுதான் ராயர்பரம்பரை. காதல் பிடிக்காத நாயகனாக கிருஷ்ணா நடித்திருக்கிறார்.துள்ளலும் துடிப்புமாக நடிப்பதில் தேர்ந்த அவருக்கேற்ற கதாபாத்திரம். அதை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார். நாயகிகள் அவரைத்
பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை, அதற்குள் நடக்கும் நல்லது கெட்டதுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியனவற்றைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டியிருக்கும் படம் பம்பர். தூத்துக்குடியில் போக்கிலியாகத் திரியும் நாயகன் காவல்துறைக்குப் பயந்து சபரிமலைக்கு மாலை போடுகிறார். அங்கு போன இடத்தில் அவர் வாங்கும் பரிசுச்சீட்டுக்குப் பெரும்தொகை பரிசு
இனிஃபினிட்டி என்றால் முடிவிலி அதாவது எல்லையற்ற என்று பொருள். நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளும் அது தொடர்பான எதிர்நிகழ்வுகளும் முடிவற்றவை என்பதைச் சொல்லியிருக்கும் படம் இன்ஃபினிட்டி. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த நட்டிக்கு இந்தப்படத்தில் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் அவர் சிபிஐ எனப்படும் நடுவன் புலனாய்வுத்துறை அதிகாரியாக வருகிறார்.
குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன். சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன் உட்காரவியலாத நிலையில் இருக்கிறார். இதை அறிந்து கொதித்துப் போகும் அவருடைய மகன்
சிறுவயதில் அப்பாவை அநியாயமாக இழந்து இருளில் தவிக்கும் சுனைனாவுக்கு வெளிச்சமாக ஒரு கணவர் வருகிறார். அவரும் திடீரென கொல்லப்படுகிறார். அதனால் நிலைகுலையும் சுனைனா, கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அம்முயற்சிகள் வீணாவதால் அவரே களமிறங்குகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். கதையை முழுமையாகத் தாங்கும் கதாபாத்திரம்
ஒரு கதாநாயகன் குடும்பம், தொழில் ஆகியன நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அவருடைய சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ஏன்? என்பனவற்றை அவர் கண்டுபிடிக்கிறார் என்றால் மிகச் சாதாரணமாகப் போய்விடும் என்பதால்,இதே கதையைக் கொண்ட இந்தப்படத்தின் நாயகனுக்குப் பார்வை குறைபாடு உண்டு. நல்ல வெளிச்சத்தில் மட்டுமே நன்றாகக் கண் தெரியும்
சென்னையின் முன்னாள் ரவுடி சுந்தர்.சி திருந்தி, நண்பர் தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி. மத்திய சென்னை விஷால்ராஜனுக்கும் தென்சென்னை பிரபாகருக்கும் இடையிலான























