விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு. நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.
விமர்சனம்
முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு இயங்கிவந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய. கர்ப்பிணிப்பெண்ணோடு வரும் மகிழுந்தை மறித்து அதைச் செல்லவாடாமல் தடுக்கிறார் நாயகன் கதிரேசகுமார். எதிர்நாயகன் செய்கிற வேலையை இவர் செய்கிறாரே? அனைவரையும் கோபப்பட வைக்கிறார். உடல் பலம் இல்லையெனினும் மனதிடத்தோடு போராடும் கதாபாத்திரத்தில்
ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனித்து வாழவியலாதா? என்கிற கேள்வி எப்போதோ எழுப்பப்பட்டுவிட்டது. இப்போது ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கும் படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா.முதிர்ச்சியான வேடம், அதற்குப் பொருத்தமான பாவங்களை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார்.திருமணம், காதல்
இந்தி முன்னணி நடிகர் ஷாருக்கான் கதாநாயகன் என்றாலும் நாயகியாக நயன்தாரா,எதிர்நாயகனாக விஜய்சேதுபதி,முக்கிய வேடத்தில் பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்களும் ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, இசை அனிருத், படத்தொகுப்பு ரூபன், கலை இயக்கம் முத்துராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இருப்பதால் இதை நேரடித்தமிழ்ப்படம் என்றாலும் தவறில்லை. ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு
சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்றார். அடுத்தநாளே, 16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா’’ (PM Viswakarma’)
திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா. திகட்டத் திகட்டக் காதலுக்கு மிகப்பொருத்தமான இணையராக விஜய்தேவரகொண்டாவும்
உறவுகளின் மேன்மைகள் பேசிப்பேசித் தீர்பவை அன்று வளர்ந்து வளர்ந்து நெக்குருக வைப்பவை. அவற்றைக் கையாள்வதில் தேர்ந்தவர் தங்கர்பச்சான். இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி நெகிழ வைக்கிறார். அவருக்குத் தோதாக பாரதிராஜா, கவுதம்மேனன், யோகிபாபு, அதிதிபாலன், சாரல் ஆகியோர் அமைந்திருக்கிறார்கள். பொருளியலில் உச்சாணியில் இருக்கும் பாரதிராஜாவும் அதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி, தனியார் கைகளுக்குச் சென்று முழுக்க முழுக்க வியாபாரமானதால் நாட்டில் பல சிக்கல்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். அவற்றிற்கான எதிர்வினைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ரங்கோலி. திரைப்படத்தயாரிப்பாளர்
மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.ஆனால் இந்தப் பெயரில் வந்திருக்கும் படம் சொல்லும் பொருள் வேறு. சிலை கடத்தல் சீசனா? இது. இந்தப்படத்திலும் சிலைதான் மையம். பெரும்பொருள் தரும் ஐம்பொன் சிலையைக் கடத்திப் பணம் பார்க்க நினைக்கிறார் ஒரு காவல் அதிகாரி.அவர் நேரடியாகச் செய்யவியலாது
லக்கிமேன் என்று பெயர் இருக்கும்போதே இது அதிர்ஷ்டம் சம்பந்தமான கதையாக இருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று புலம்பிக்கொண்டேயிருக்கும் யோகிபாபுவுக்கு திடீரென ஒரு அதிர்ஷ்டம். அடி நிலையிலிருந்து மேலே செல்கிறார். பலூனில் காற்றுப் போனது போல திரும்பவும் கீழே வருகிறார். இவற்றுக்கிடையில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதைச்























