குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச்
விமர்சனம்
ஐமா என்றால் கடவுள் சக்தி என்று பொருள்.ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு விடையாகப் படம் இருக்கிறது. நாயகன், நாயகி ஆகிய இருவரையும் கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.அவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள்? என்பதற்குப் பதில் சொல்கிறது படம். சில காட்சிகளில் விஜய்யை நினைவுபடுத்துகிறார் நாயகன்
எவ்வளவு கோடி கொடுத்தாலும் முடிந்துபோன ஒரு நோடியைக்கூட திரும்பப்பெற முடியாது எனும்போது, இறந்தகாலத்திற்குத் திரும்பிப்போனால் எவ்வ்ளவு நன்றாக இருக்கும்? என்கிற அதீத ஆசையை கற்பனையாக நிகழ்த்திக்காட்டி மக்களை ஈர்க்கும் உத்திதான் காலப்பயணக்கதைகள். அதில் இன்னும் ஒருபடி மேலே போய், தொலைபேசி மூலம் காலப்பயணம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மார்க்ஆண்டனி. விஷால்,
முக்கோணக்காதல் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு இக்காலத்திற்கேற்ப வந்திருக்கும் படம் பரிவர்த்தனை. நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதியை திருமணம் செய்து வேண்டாவெறுப்பாக வாழ்கிறார். அதேநேரம் சுவாதியின் தோழி ராஜேஸ்வரி, திருமணமே வெண்டாமெனச் சொல்லி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார். கணவனின் வெறுப்புக்கும் தோழியின் துறவுக்கும் தொடர்பிருப்பதை அறியும் நாயகி
விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு. நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அதன்விளைவாக இந்திய அளவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறாரகள். அதிகாரவர்க்கம்
முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு இயங்கிவந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய. கர்ப்பிணிப்பெண்ணோடு வரும் மகிழுந்தை மறித்து அதைச் செல்லவாடாமல் தடுக்கிறார் நாயகன் கதிரேசகுமார். எதிர்நாயகன் செய்கிற வேலையை இவர் செய்கிறாரே? அனைவரையும் கோபப்பட வைக்கிறார். உடல் பலம் இல்லையெனினும் மனதிடத்தோடு போராடும் கதாபாத்திரத்தில்
ஒரு பெண் திருமணம் செய்யாமல் தனித்து வாழவியலாதா? என்கிற கேள்வி எப்போதோ எழுப்பப்பட்டுவிட்டது. இப்போது ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கும் படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் அனுஷ்கா.முதிர்ச்சியான வேடம், அதற்குப் பொருத்தமான பாவங்களை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார்.திருமணம், காதல்
இந்தி முன்னணி நடிகர் ஷாருக்கான் கதாநாயகன் என்றாலும் நாயகியாக நயன்தாரா,எதிர்நாயகனாக விஜய்சேதுபதி,முக்கிய வேடத்தில் பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்களும் ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, இசை அனிருத், படத்தொகுப்பு ரூபன், கலை இயக்கம் முத்துராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இருப்பதால் இதை நேரடித்தமிழ்ப்படம் என்றாலும் தவறில்லை. ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு
சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்றார். அடுத்தநாளே, 16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா’’ (PM Viswakarma’)
திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா. திகட்டத் திகட்டக் காதலுக்கு மிகப்பொருத்தமான இணையராக விஜய்தேவரகொண்டாவும்





















