உறவுகளின் மேன்மைகள் பேசிப்பேசித் தீர்பவை அன்று வளர்ந்து வளர்ந்து நெக்குருக வைப்பவை. அவற்றைக் கையாள்வதில் தேர்ந்தவர் தங்கர்பச்சான். இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி நெகிழ வைக்கிறார். அவருக்குத் தோதாக பாரதிராஜா, கவுதம்மேனன், யோகிபாபு, அதிதிபாலன், சாரல் ஆகியோர் அமைந்திருக்கிறார்கள்.
விமர்சனம்
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி, தனியார் கைகளுக்குச் சென்று முழுக்க முழுக்க வியாபாரமானதால் நாட்டில் பல சிக்கல்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். அவற்றிற்கான எதிர்வினைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ரங்கோலி. திரைப்படத்தயாரிப்பாளர்
மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.ஆனால் இந்தப் பெயரில் வந்திருக்கும் படம் சொல்லும் பொருள் வேறு. சிலை கடத்தல் சீசனா? இது. இந்தப்படத்திலும் சிலைதான் மையம். பெரும்பொருள் தரும் ஐம்பொன் சிலையைக் கடத்திப் பணம் பார்க்க நினைக்கிறார் ஒரு காவல் அதிகாரி.அவர் நேரடியாகச் செய்யவியலாது
லக்கிமேன் என்று பெயர் இருக்கும்போதே இது அதிர்ஷ்டம் சம்பந்தமான கதையாக இருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று புலம்பிக்கொண்டேயிருக்கும் யோகிபாபுவுக்கு திடீரென ஒரு அதிர்ஷ்டம். அடி நிலையிலிருந்து மேலே செல்கிறார். பலூனில் காற்றுப் போனது போல திரும்பவும் கீழே வருகிறார். இவற்றுக்கிடையில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதைச்
கூடுவிட்டுக் கூடு பாயும் கதைகள் படித்திருப்போம் சில படங்களும் வந்திருக்கின்றன.அதை மையப்புள்ளியாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை ரசம் கலந்து கொடுக்க முனைந்திருக்கிறார் இந்த பார்ட்னர். நாயகன் ஆதியும் யோகிபாபுவும் நண்பர்கள் + திருடர்கள். அரைவேக்காடு விஞ்ஞானி பாண்டியராஜனின் கண்டுபிடிப்பு ஒன்றைத் திருடுகிறார்கள். அதன் விளைவு யோகிபாபு ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவர் திரும்ப
விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்? இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்? ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும் கூல்சுரேஷ் வாய்பேசமுடியாதவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்பன போன்ற சுவாரசியமான மக்களின் எண்ணவோட்டங்களுக்குக் காட்சி வடிவம் கொடுத்து புது அனுபவம் தரும்
ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை
ஒரு மருத்துவமனை, அங்கே மூன்று வெவ்வேறு பருவ இணையர்கள். அவர்களின் நெகிழ்வான கதைகள். இவைதாம் வான் மூன்று. ஆதித்யாபாஸ்கர் – அம்மு அபிராமி ஓர் இணை. இவர்களுக்குக் காதல்தான் சிக்கல், வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் ஒன்னொரு இணை. இவர்கள் திருமணமானவர்கள். பத்துமாதங்களிலேயே மனைவியைப் பிரிய வேண்டிய சூழல் இவர்களுடைய சிக்கல். மூன்றாவதாக டெல்லிகணேஷ் – லீலா சாம்சன்
சின்ன வயதிலேயே நல்ல வேலை, அதிகச் சம்பளம் பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அம்மாதிரியான யுவதிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் படம் வெப். ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள்.பல்வேறு போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில்
ஒரு பேய்பங்களா, இரண்டு மூன்று குழுக்கள்,ஆபத்தான ஒரு விளையாட்டு அதாவது வென்றால் பரிசு தோற்றால் மரணம் என்கிற விளையாட்டு ஆகியனவற்றை வைத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதைதான் டிடி ரிட்டர்ன்ஸ். இதில் கதையை விட நகைச்சுவைதான் அதிகமிருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த். அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது. புதுச்சேரியிலுள்ள ஒரு தாதா ஃபெப்சிவிஜயனின்





















