நாம் இருவர் நமக்கு ஒருவர் எனும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உயர்நடுத்தரவகுப்பினர் குடும்பங்களில் பெரிதும் நடக்கும் சிக்கல் ஒன்றைக் கையிலெடுத்து அதன்மூலம் மாந்தநேயம் மட்டுமின்றி உயிர்நேயம் முதன்மை என்கிற ஆழமான கருத்தியலை அழகாகச் சொல்லியிருக்கும் படம் ஷாட்பூட்த்ரி. இயக்குநர்
விமர்சனம்
நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன். கடும்போக்குக் கொண்ட காவலதிகாரி வேடமேற்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே
சில புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாது. இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார். பல இடங்களில் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.சாதாரண நாயகர்கள் போல்
அப்பா மகள் பாசக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் அப்பாவுக்குப் பதிலாக சித்தப்பா. நாயகன் சித்தார்த் என்பதால் சித்தா என்று பெயர். ஒரேகல்லில் இரண்டுமாங்காய்கள். உயர்தர வகுப்பினர் வேடத்துக்கு ஏற்ற சித்தார்த், இந்தப்படத்தில் நடுத்தரக்குடும்ப இளைஞர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.உயிருக்குயிராக வளர்த்த மகள் காணவில்லை என்று கலங்கித்துடிக்கும்
மதம் தாண்டிய காதல் என்றாலே சிக்கல்தான். அதிலும் ஓரினக்காதல் என்றால் என்னென்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சொல்லியிருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம்நீதானே. கிராமத்து இஸ்லாமியப் பெண் நிரஞ்சனா நெய்தியார், நகரத்தில் வாழும் ஆவணப்பட இயக்குநர் ஸ்ருதிபெரியசாமி ஆகிய இரு பெண்கள் காதலில் வீழ்கிறார்கள்.ஆணும் பெண்ணும் காதலித்தாலே வம்பு எனும்போது பெண்ணும் பெண்ணும் காதலித்தால்? பல்வேறு
ஒரு திகில் திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர் வாழ்க்கையிலேயே திகில் அனுபவங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? டீமன் படத்தின் மையக்கதை இதுதான். இதற்குள் ஓர் உண்மை நிகழ்வு அதையொட்டிய சில கற்பனைகள் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகன் சச்சின், திகில் படமெடுக்கவிருக்கும் நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடொன்றில் குடியேறுகிறார். அங்கு
குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஆர் யூ ஓகே பேபி? சமுத்திரக்கனி அபிராமி ஆகிய இருவரும்,
ஐமா என்றால் கடவுள் சக்தி என்று பொருள்.ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்விக்கு விடையாகப் படம் இருக்கிறது. நாயகன், நாயகி ஆகிய இருவரையும் கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.அவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள்? என்பதற்குப் பதில் சொல்கிறது படம். சில காட்சிகளில் விஜய்யை நினைவுபடுத்துகிறார் நாயகன்
எவ்வளவு கோடி கொடுத்தாலும் முடிந்துபோன ஒரு நோடியைக்கூட திரும்பப்பெற முடியாது எனும்போது, இறந்தகாலத்திற்குத் திரும்பிப்போனால் எவ்வ்ளவு நன்றாக இருக்கும்? என்கிற அதீத ஆசையை கற்பனையாக நிகழ்த்திக்காட்டி மக்களை ஈர்க்கும் உத்திதான் காலப்பயணக்கதைகள். அதில் இன்னும் ஒருபடி மேலே போய், தொலைபேசி மூலம் காலப்பயணம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மார்க்ஆண்டனி. விஷால்,
முக்கோணக்காதல் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு இக்காலத்திற்கேற்ப வந்திருக்கும் படம் பரிவர்த்தனை. நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதியை திருமணம் செய்து வேண்டாவெறுப்பாக வாழ்கிறார். அதேநேரம் சுவாதியின் தோழி ராஜேஸ்வரி, திருமணமே வெண்டாமெனச் சொல்லி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார். கணவனின் வெறுப்புக்கும் தோழியின் துறவுக்கும் தொடர்பிருப்பதை அறியும் நாயகி























