கூடுவிட்டுக் கூடு பாயும் கதைகள் படித்திருப்போம் சில படங்களும் வந்திருக்கின்றன.அதை மையப்புள்ளியாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை ரசம் கலந்து கொடுக்க முனைந்திருக்கிறார் இந்த பார்ட்னர். நாயகன் ஆதியும் யோகிபாபுவும் நண்பர்கள் + திருடர்கள். அரைவேக்காடு விஞ்ஞானி பாண்டியராஜனின் கண்டுபிடிப்பு ஒன்றைத்
விமர்சனம்
விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்? இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்? ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும் கூல்சுரேஷ் வாய்பேசமுடியாதவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்பன போன்ற சுவாரசியமான மக்களின் எண்ணவோட்டங்களுக்குக் காட்சி வடிவம் கொடுத்து புது அனுபவம் தரும்
ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை
ஒரு மருத்துவமனை, அங்கே மூன்று வெவ்வேறு பருவ இணையர்கள். அவர்களின் நெகிழ்வான கதைகள். இவைதாம் வான் மூன்று. ஆதித்யாபாஸ்கர் – அம்மு அபிராமி ஓர் இணை. இவர்களுக்குக் காதல்தான் சிக்கல், வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் ஒன்னொரு இணை. இவர்கள் திருமணமானவர்கள். பத்துமாதங்களிலேயே மனைவியைப் பிரிய வேண்டிய சூழல் இவர்களுடைய சிக்கல். மூன்றாவதாக டெல்லிகணேஷ் – லீலா சாம்சன்
சின்ன வயதிலேயே நல்ல வேலை, அதிகச் சம்பளம் பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அம்மாதிரியான யுவதிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் படம் வெப். ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள்.பல்வேறு போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில்
ஒரு பேய்பங்களா, இரண்டு மூன்று குழுக்கள்,ஆபத்தான ஒரு விளையாட்டு அதாவது வென்றால் பரிசு தோற்றால் மரணம் என்கிற விளையாட்டு ஆகியனவற்றை வைத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதைதான் டிடி ரிட்டர்ன்ஸ். இதில் கதையை விட நகைச்சுவைதான் அதிகமிருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த். அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது. புதுச்சேரியிலுள்ள ஒரு தாதா ஃபெப்சிவிஜயனின்
மாமியார் மருமகள் சண்டை உலகப்பிரசித்தம். அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்று எண்ணியதன் விளைவு எல்ஜிஎம். இதை உயர்நடுத்தர வர்க்கப் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன ஹரீஷ்கல்யாணுக்கு நாயகி இவானா மீது காதல். அவரும் இவரை விரும்புகிறார். அதேசமயம், ஹரீஷ்கல்யாணின் அம்மாவை இவானாவுக்கு பிடிக்கவில்லை. அப்பா இல்லாமல் அம்மாவின்
தமக்கென சில தனித்துவங்களைக் கொண்டிருக்கும் வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் அந்த வரிசையில் சேருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற சொல் டைனோசர்ஸ். அதை ஆங்கிலத்தில் எழுதி புதிய பொருள் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன். நாயகன் உதய்கார்த்திக் அவருடைய அண்ணன் ரிஷி. ரிஷியின் நண்பர் மாறா இவர்களில் மாறா ஒரு தாதாவிடம் வேலை செய்கிறார். ஒரு
உணவு விநியோகிக்கும் இளைஞன், அவனுக்கு ஒரு மனச்சிக்கல், அவனுக்கு ஒரு காதல், அவனுக்கு ஒரு ஆபத்து இவற்றை எப்படி எதிர்கொள்கிறான்? என்கிற மையக்கதைக்குள் வரும் பெருநிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொதுவுடைமைக் கண்ணாடியால் பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அநீதி. எதிர்மறை நாயகனாகப் பார்த்துவந்த அர்ஜூன் தாஸ், கதாநாயகனாக நடித்திருக்கிறார்.எதிர்நாயகனுக்குப் பலமாக அமைந்திருந்த
படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது திரைக்கதை. இது பழைய கதைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாத வண்ணம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி கே.குமார். விளம்பர அழகியாக நடித்திருக்கும் நாயகி மீனாட்சி























