குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன். சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன்
விமர்சனம்
சிறுவயதில் அப்பாவை அநியாயமாக இழந்து இருளில் தவிக்கும் சுனைனாவுக்கு வெளிச்சமாக ஒரு கணவர் வருகிறார். அவரும் திடீரென கொல்லப்படுகிறார். அதனால் நிலைகுலையும் சுனைனா, கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டப்படியான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் அம்முயற்சிகள் வீணாவதால் அவரே களமிறங்குகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். கதையை முழுமையாகத் தாங்கும் கதாபாத்திரம்
ஒரு கதாநாயகன் குடும்பம், தொழில் ஆகியன நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென அவருடைய சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? ஏன்? என்பனவற்றை அவர் கண்டுபிடிக்கிறார் என்றால் மிகச் சாதாரணமாகப் போய்விடும் என்பதால்,இதே கதையைக் கொண்ட இந்தப்படத்தின் நாயகனுக்குப் பார்வை குறைபாடு உண்டு. நல்ல வெளிச்சத்தில் மட்டுமே நன்றாகக் கண் தெரியும்
சென்னையின் முன்னாள் ரவுடி சுந்தர்.சி திருந்தி, நண்பர் தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி. மத்திய சென்னை விஷால்ராஜனுக்கும் தென்சென்னை பிரபாகருக்கும் இடையிலான
அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள் ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது.
ராகவாலாரன்ஸ் டாப்சி உட்பட பலர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் காஞ்சனா 2. அந்தப்படத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் உயர்வுக்காக ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்க ஒரு வீட்டுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவார்கள். பொய்யாகப் பேய்க்கதையை எடுக்க நினைத்து அங்கு போனால் நிஜமாகவே அங்கு பேய் இருக்கும். அதனால் பல சிக்கல்கள். அந்தப் பேய்க்கு ஒரு முன் கதை இருக்கும். நாயாடி படமும்
யூட்யூப் சேனல் நடத்தும் நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர் ஒரு தீவில் தனியாக இருக்கும் வீட்டுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர். அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் 1500 ஆண்டு காலப் பழமையான ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை திகிலுடன் சொல்லியிருக்கும் படம் அஸ்வின். முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன நாயகன்
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் லவ்டுடே. அந்தப்படத்தின் நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார்.அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி
ஊர்வசி, பாலுவர்கீஸ், கலையரசன், குரு.சோமசுந்தரம் ஆகியோரை வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதை மூலம் நல்ல கருத்தைச் சொல்லும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ். நாயகன் பாலு வர்கீஸுக்கு மாலைக்கண் குறைபாடு. அதனால், அவரது திருமணம் நிற்கிறது. வேலையும் பறிபோகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க முயல்கிறார். அப்போது, அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை
பெரிய பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை அவருடைய காதலி போலவே இருக்கிறது. அந்த பொம்மையையே காதலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த பொம்மையை இவர் இல்லாத நேரத்தில் ஒரு கடைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். பொம்மை காணாதது கண்டு பொங்கியெழும் எஸ்.ஜே.சூர்யா, ஒரு கொலையைச்





















