இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர்,அந்தவிளையாட்டில் எண்ணூறு பேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனையாளர் முத்தையாமுரளிதரன்.அவருடைய வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் 800. முத்தையாமுரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் இந்திநடிகர் மதுரமிட்டல், தோற்றத்திலும் அவரை
விமர்சனம்
புகழ்பெற்ற காவலதிகாரி சொந்தக்காரணங்களுக்காக வேலையை விட்டு ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். அவருடைய நண்பர் கொலை செய்யப்படுகிறார். அதனால் மீண்டும் பணிக்குத் திரும்பி அந்தக் கொலை மற்றும் அதுபோல் நடந்த மற்ற கொலைகளைச் செய்தவர் எவர்? என்பதைக் கண்டுபிடிக்கிறார். இதுதான் ரத்தம் படத்தின் கதை. தொடக்கத்தில் காவலதிகாரி என்றா இருக்கிறது. அதைமட்டும் மாற்றி புலனாய்வுப் பத்திரிகையாளர் என்று
விக்ரம்பிரபு – ஷ்ரதாஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதியரை வைத்துக் கொண்டு திருமண பந்தம் என்பது வெட்டிவிடுவதன்று இறுகப்பற்றிக் கொள்வது என்பதைப் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம். மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய நினைக்கிறார்.அதனால் அதிர்ச்சியடையும் அபர்ணதி உளவியல் நிபுணரான
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் நியாயத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று ஓங்கிச் சொல்லும் படமாக வந்திருக்கிறது இந்த க்ரைம் தப்பில்ல. முன்னாள் இராணுவ வீரர் ஆடுகளம் நரேன், நியாயத்துக்காகப் போராடும் ஒரு குழுவை வழிநடத்துகிறார். அந்தக்குழு வெறுமனே போராட்டம் மட்டும் நடத்தும் குழுவன்று.உறுதிப்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கொடுக்கும்
நாம் இருவர் நமக்கு ஒருவர் எனும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உயர்நடுத்தரவகுப்பினர் குடும்பங்களில் பெரிதும் நடக்கும் சிக்கல் ஒன்றைக் கையிலெடுத்து அதன்மூலம் மாந்தநேயம் மட்டுமின்றி உயிர்நேயம் முதன்மை என்கிற ஆழமான கருத்தியலை அழகாகச் சொல்லியிருக்கும் படம் ஷாட்பூட்த்ரி. இயக்குநர் வெங்கட்பிரபுவும் சினேகாவும் தம்பதியர்.இருவரும் மென்பொருள் துறையில்
நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன். கடும்போக்குக் கொண்ட காவலதிகாரி வேடமேற்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே
சில புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாது. இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார். பல இடங்களில் ரஜினியை நினைவுபடுத்துகிறார்.சாதாரண நாயகர்கள் போல்
அப்பா மகள் பாசக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன. இந்தப்படத்தில் அப்பாவுக்குப் பதிலாக சித்தப்பா. நாயகன் சித்தார்த் என்பதால் சித்தா என்று பெயர். ஒரேகல்லில் இரண்டுமாங்காய்கள். உயர்தர வகுப்பினர் வேடத்துக்கு ஏற்ற சித்தார்த், இந்தப்படத்தில் நடுத்தரக்குடும்ப இளைஞர் வேடத்துக்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார்.உயிருக்குயிராக வளர்த்த மகள் காணவில்லை என்று கலங்கித்துடிக்கும்
மதம் தாண்டிய காதல் என்றாலே சிக்கல்தான். அதிலும் ஓரினக்காதல் என்றால் என்னென்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சொல்லியிருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம்நீதானே. கிராமத்து இஸ்லாமியப் பெண் நிரஞ்சனா நெய்தியார், நகரத்தில் வாழும் ஆவணப்பட இயக்குநர் ஸ்ருதிபெரியசாமி ஆகிய இரு பெண்கள் காதலில் வீழ்கிறார்கள்.ஆணும் பெண்ணும் காதலித்தாலே வம்பு எனும்போது பெண்ணும் பெண்ணும் காதலித்தால்? பல்வேறு
ஒரு திகில் திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர் வாழ்க்கையிலேயே திகில் அனுபவங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? டீமன் படத்தின் மையக்கதை இதுதான். இதற்குள் ஓர் உண்மை நிகழ்வு அதையொட்டிய சில கற்பனைகள் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகன் சச்சின், திகில் படமெடுக்கவிருக்கும் நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடொன்றில் குடியேறுகிறார். அங்கு





















