Home Archive by category விமர்சனம் (Page 38)

விமர்சனம்

விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் – திரைப்பட விமர்சனம்

முன்னாள் காதலியைச் சந்தித்து அவருடன் அளவளாவுவது விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம். முதன்முதலில் சந்திக்கும் கதிரினா கைஃப் உடன் விஜய்சேதுபதி உலாவருவது மெரி கிறிஸ்துமஸ். இதில் காதல் மட்டுமின்றி எதிர்பாரா திருப்பங்களும் அடங்கியிருப்பது சுவையான அனுபவம். விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும்
விமர்சனம்

கும்பாரி – திரைப்பட விமர்சனம்

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.இதைப் பெயராக வைத்திருக்கும்போது கதைக்கருவும் அதுவாகத்தானே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது, அதோடு ஒரு காதல் கதையும் கலந்திருக்கிறது.அண்ணன் தங்கை பாசமும் இணைந்திருக்கிறது. நாயகன் விஜய்விஷ்வாவும் அறிமுக நடிகர் நலீப் ஜியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் விஜய்விஷ்வா காதலில்
விமர்சனம்

ரூட் நம்பர் 17 – திரைப்பட விமர்சனம்

அகில்பிரபாகர், அஞ்சு ஆகியோர் காதல் இணையர். அவர்கள் ஒரு காட்டுப்பகுதிக்குச் செல்லும்போது கடத்தப்படுகிறார்கள். ஒரு பாதாள அறைக்குள் வைத்து அவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.கார்த்திக் முன்னாள் அமைச்சர் ஹரிஷ்பெரேடியின் மகன் என்பதால் காவல்துறை தீவிரமாகத் தேடுகிறது. அந்தக் கடத்தலைச் செய்வது ஜித்தன் ரமேஷ். அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதற்கு விடையாக இருக்கிறது படம். ஜித்தன்
விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – விமர்சனம்

பேய்ப்படங்கள் சிரிக்க வைக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது அப்படி ஒரு படம் வந்துகொண்டேயிருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர் உள்ளிட்ட நண்பர்கள் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் செல்கிறார்கள். அதே திரையரங்கில் படம்
விமர்சனம்

வட்டாரவழக்கு – திரைப்பட விமர்சனம்

உணவு உடை இருப்பிடம் மற்றும் இருக்கும் கவுரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடிக்கொண்டிருக்கும் இப்போதைய தலைமுறைக்கு, பங்காளிச்சண்டை அதன் வைராக்கியம் அதனால் நடக்கும் கொலைகள் ஆகியன புதிதாக இருக்கும். அதைத்தர முயன்றிருக்கிறார் வட்டாரவழக்கு பட இயக்குநர் கண்ணுசாமி இராமச்சந்திரன். இதற்காக 1987 காலகட்டத்தையும் மதுரை மண்ணையும் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
விமர்சனம்

நந்திவர்மன் – திரைப்பட விமர்சனம்

சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் பல்லவமன்னர்காலத்தைக் காட்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னர்களில் ஒருவரான நந்திவர்மன் கட்டிய கோயில் அதற்குள் புதைந்திருக்கும் புதையல், அதைத்தேடி வரும் குழு, அங்கு ஏற்படும் சிக்கல்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் ஆகியனதாம் இந்தப்படம். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன்
விமர்சனம்

மதிமாறன் – திரைப்பட விமர்சனம்

நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.அதற்கு முன்னதாக கதாநாயகன் அவை குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச் சொல்லியிருக்கும் படம் மதிமாறன். நாயகன் வெங்கட்செங்குட்டுவன், உயரம் குறைந்தவர் என்கிற
விமர்சனம்

ஜிகிரிதோஸ்த் – திரைப்பட விமர்சனம்

மூன்று நண்பர்கள் இன்பச்சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் போகும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.உடனே பயணத்தைத் தொடர்வதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர்.அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதைச் சொல்வதுதான் ஜிகிரிதோஸ்த். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்,படத்தின் இயக்குநர் வி.அரண்,வி.ஜே.ஆஷிக் ஆகியோர்தாம் அந்த மூன்று
விமர்சனம்

சபாநாயகன் – திரைப்பட விமர்சனம்

பள்ளி இறுதியாண்டு, கல்லூரியில் இளங்கலை அதன்பின் முதுகலை.இது கல்வி கற்கும் வரிசை. இதைக் காதலிக்கும் வரிசையாக மாற்றி அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கும் படம் சபாநாயகன். படத்தில் நாயகன் அசோக்செல்வனின் பெயர் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா என்று கூப்பிடுகிறார்கள்.அவர்தான் நாயகன் என்பதால் சபாநாயகன். அசோக்செல்வனுக்கு
விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள். ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் கதாபாத்திரம் பருத்திவீரன் சரவணனுக்கு.சும்மாயிருப்பதே