Home Archive by category விமர்சனம் (Page 38)

விமர்சனம்

Uncategorized விமர்சனம்

வா வரலாம் வா – திரைப்பட விமர்சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாலாஜிமுருகதாஸ் நாயகனாக நடித்திருக்கும் படம் வா வரலாம் வா.பல வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு விடுதலையாகிறார் பாலாஜி முருகதாஸ்.அவருடனே இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. வெளியில் வந்த பின்பு உழைத்து வாழ நினைக்கிறார்கள்.சிறைக்குப் போய்வந்தவர்களுக்கு வேலை தர
விமர்சனம்

அன்னபூரணி – திரைப்பட விமர்சனம்

ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நயன்தாராவுக்கு பெரிய சமையல்கலைஞராக வேண்டும் என்பதுதான் ஆசை.பெண்கள் சமையல்கட்டை விட்டு வெளியே வரப் போராடும் கதைகள் பார்த்திருக்கிறோம்.இங்கோ சமையல் கலைஞராவதற்கே போராடவேண்டியிருக்கிறது. அது ஏன்? என்பதற்கான விடையாக விரிந்திருக்கிறது படம். அன்பான அமைதியான நயன்தாரா.பெரும்பாலும் மெல்லிய புன்னகையுடன் வலம்வருகிறார்.அசைவ உணவுகளை விரும்பி
விமர்சனம்

பார்க்கிங் – திரைப்பட விமர்சனம்

ஈகோ என்பது சுயநலம். தன்னைப் பற்றியே சிந்திப்பது. தன்னைப்போல் யாருமில்லை என்ற தலைக்கனம். தான் சொல்வதே சரி என்ற அகங்காரம் ஆகிய குணங்களின் ஒட்டு மொத்த வெளிப்பாடுதான் ஈகோ. இதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் படம் பார்க்கிங். ஒர் அடுக்குமாடிக் குடியிருப்பு.அங்கு வசிக்கும் அரசு அதிகாரியின் குடும்பம், அங்கு புதிதாகக் குடியேறும் இளம் இணையர்.இணையரில் கணவர்
விமர்சனம்

நாடு – திரைப்பட விமர்சனம்

ஒரு மலைகிராமம், எளியமக்கள், அவர்களுடைய மிக அடிப்படைத் தேவையான மருத்துவ வசதி ஆகியன பொதுப்பார்வையில் மிகச் சின்ன விசயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வலி என்பதையும் இந்தச் சின்ன விசயத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய பெரிய அரசியலையும் அழகாக வெளிப்படுத்தும் படம் நாடு. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைகிராமம்தான்
விமர்சனம்

80ஸ் பில்டப் – திரைப்பட விமர்சனம்

பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி. அந்தக்காலத்துக்கேற்ப புதையல், வைரம், ஜமீன்தார் ஆகியனவும் இடம்பெற்றிருக்கின்றன.
விமர்சனம்

குய்கோ – திரைப்பட விமர்சனம்

அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் அம்மா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட கிராமமொன்றில் மரணிக்கிறார்.யோகிபாபு வந்துசேர ஓரிருநாட்கள் ஆகும். அதுவரை அந்த அம்மாவின் உடலை வைத்திருக்கவேண்டும். அதற்காக ஃப்ரீசர்பாக்ஸ் எனப்படும் உறைவிக்கும்பெட்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்.அடுத்தநாள் சென்னையில் நடக்கும் ஐபிஎல் எனப்படும் மட்டைப்பந்துப்போட்டியைக் காணப் போகவேண்டிய விதார்த்,
விமர்சனம்

லாக்கர் – திரைப்பட விமர்சனம்

திருட்டு வேலைகள் செய்யும் கதாநாயகன், காதலில் விழுந்ததும்,காதலிக்குப் பிடிக்கவில்லை என்பதால் திருட்டுத் தொழிலை விட்டுவிடுகிறார். ஆனால், அதே காதலிக்காக மீண்டும் அவ்வேலையில் ஈடுபடுகிறார். அது ஏன்? எதற்காக? என்பதையெல்லாம் சொல்லும் படம்தான் லாக்கர். நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகத்துக்கு இது முதல்படம். ஆனால் அது தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள்
விமர்சனம்

சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்

இலண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது.
விமர்சனம்

ஜோ – திரைப்பட விமர்சனம்

காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத் தெரியும் ஆனால் பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் வண்ணம் படமாக்கியிருக்கிறார். நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை காதலிக்கிறார்.அவரும் சம்மதிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு.
விமர்சனம்

செவ்வாய்க்கிழமை – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் செவ்வாய்க்கிழமை. நாயகியாக நடித்திருக்கிறார் பாயல்ராஜ்புத். மையக்கதையும்