Home Archive by category விமர்சனம் (Page 37)

விமர்சனம்

விமர்சனம்

மதிமாறன் – திரைப்பட விமர்சனம்

நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.அதற்கு முன்னதாக கதாநாயகன் அவை குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச்
விமர்சனம்

ஜிகிரிதோஸ்த் – திரைப்பட விமர்சனம்

மூன்று நண்பர்கள் இன்பச்சுற்றுலா செல்கிறார்கள். அவர்கள் போகும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.உடனே பயணத்தைத் தொடர்வதை விட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர்.அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? என்பதைச் சொல்வதுதான் ஜிகிரிதோஸ்த். பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன்,படத்தின் இயக்குநர் வி.அரண்,வி.ஜே.ஆஷிக் ஆகியோர்தாம் அந்த மூன்று
விமர்சனம்

சபாநாயகன் – திரைப்பட விமர்சனம்

பள்ளி இறுதியாண்டு, கல்லூரியில் இளங்கலை அதன்பின் முதுகலை.இது கல்வி கற்கும் வரிசை. இதைக் காதலிக்கும் வரிசையாக மாற்றி அதற்குள் நடக்கும் சுகமான மற்றும் சோகமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கும் படம் சபாநாயகன். படத்தில் நாயகன் அசோக்செல்வனின் பெயர் ச.பா.அரவிந்த். அதனால் அவரை சபா என்று கூப்பிடுகிறார்கள்.அவர்தான் நாயகன் என்பதால் சபாநாயகன். அசோக்செல்வனுக்கு
விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை எதார்த்தமும் எள்ளலுமாகச் சொல்லியிருக்கும் படம் ஆயிரம்பொற்காசுகள். ஊருக்கு ஒருத்தராவது இப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் கதாபாத்திரம் பருத்திவீரன் சரவணனுக்கு.சும்மாயிருப்பதே
விமர்சனம்

டங்கி – இந்திப்பட விமர்சனம்

படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான பாதையில் பயணம், அதற்கான காரணம், அதன் விளைவுகள் ஆகியனவற்றை நகைச்சுவை இழையோடச்
விமர்சனம்

ஃபைட் கிளப் – திரைப்பட விமர்சனம்

மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கும் படம் ஃபைட்கிளப். நாயகனாக
விமர்சனம்

கூச முனுசாமி வீரப்பன் – ஆவணப்படத் தொடர் விமர்சனம்

1970 களிலிருந்து செயல்பட்டுவந்த சந்தனக்கடத்தல்காரர் என்று அறியப்பட்ட வீரப்பன்,1980 களில் பெரிதாகப் பேசப்பட்டார். அப்போதிருந்து 2014 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை முதன்மைச் செய்திகளில் இருந்தார். அதன்பின் அவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என நிறைய வந்துவிட்டன.கடைசியாக வந்தாலும் அவ்வளவையும் தாண்டி நிற்கிறது நக்கீரன்கோபால் தயாரித்துள்ள
விமர்சனம்

காஞ்சூரிங் கண்ணப்பன் – திரைப்பட விமர்சனம்

இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் வேலையில் ஆர்வமாக இருக்கும் நாயகனுக்கு விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழல்.அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம், அவருக்கு மருத்துவம்
விமர்சனம்

கட்டில் – திரைப்பட விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடல்.12 ஆம் நூற்றாண்டில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.அதேநேரம் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்து முன்னோர் வாழ்வியலை தலைமுறைகள் அறியவேண்டும் என்போரும் உண்டு. இரண்டாம்வகையினர் மனநிலையைப் பிரதிபலிக்கும் படம் கட்டில். படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார்
விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை