தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கிறார் முருகா அசோக்.காதல்காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே
விமர்சனம்
ஒரு கிராமம் அங்கு மதவேறுபாடுகளை மறந்து பாசமாகப் பழகும் மக்கள். தங்கள் சுயநலத்துக்காக அம்மக்களைப் பிரித்தாள நினைக்கும் அரசியல்கூட்டம்.அதனால் ஏற்படும் சிக்கல்கள். அவற்றின் முடிவு? ஆகியனதாம் லால்சலாம் படம். விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகிய இருவருக்கும் சம அளவிலான வாய்ப்பு. இருவருமே தங்கள் இருப்பை வெளிப்படுத்திவிடவேண்டும் என்கிற முனைப்புடன் நடித்திருக்கிறார்கள். விளையாட்டுக்கு
எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ். நாயகன் மணிகண்டனுக்கு சொந்தமாக ஒரு குளம்பிக்கடை (காபி கடை அல்லது கஃபே) வைக்க ஆசை. அதற்கும் முன்னதாகவே நாயகியுடன் காதல். காதலி
கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரத்துக்காக அதை மீட்க வேண்டுமென சந்தானமும் போராடுகிறார்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். மக்கள் நம்மிட்ம் இதைத்தான்
திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில். நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.மணவாழ்வின்போது விதார்த்தின் ஒரு செயலால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார் பூர்ணா. அந்நேரம் அவர் வாழ்வில் வருகிறார் நடிகர் திரிகுன்.அதனால் விதார்த் பூர்ணா
முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும் படம் சிக்லெட்ஸ். நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில்
பள்ளிக்காலத்தில் காதல் எனும் பொருந்தாக் கதை என்றாலும் அதைப் பொருத்தமாகச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது மறக்குமா நெஞ்சம். பள்ளிப்படிப்பை முடித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் எல்லோரும் பதட்டமாக நாயகன் ரக்சனுக்கு மட்டும் சந்தோசம். அது ஏன்? அதன்பின் என்னவானது? என்பதுதான் படம். சின்னச் சின்ன வேடம், நாயகனின் நண்பன்
அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படம். கதைப்படி சில
அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை மையப்படுத்திய கதை. அதை அப்படியே விட்டிருந்தால் முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும் அதற்குள் இருக்கும் சிக்கல்கள் என்று போயிருக்கும். ஆனால், இரண்டு மட்டைப்பந்தாட்டக்
முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா?





















