Home Archive by category விமர்சனம் (Page 34)

விமர்சனம்

விமர்சனம்

ஜே பேபி – திரைப்பட விமர்சனம்

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்,ஒரு அம்மா, மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள்.இரண்டு பெண்களின் கணவர்களை இழந்து நிற்கிறார்கள்.அண்ணன், தம்பிகளுக்குள் திருமண விசயத்தில் தீராப்பகை. இவற்றோடு அந்த அம்மா வழக்கமான அம்மா இல்லை. வித்தியாசமான குணாம்சங்கள் கொண்டவர். அதனால் பல சிக்கல்கள். ஒருநாள்
விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் – திரைப்பட விமர்சனம்

சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் அரிமாபட்டி சக்திவேல்.இதில் அரிமாபட்டி என்பது கதை நடக்கும் கிராமம்.சக்திவேல் கதாநாயகனின் பெயர். படத்தின்
விமர்சனம்

போர் – திரைப்பட விமர்சனம்

ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர். அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ் ஜெயராம்.இருவருக்கும் ஏற்கெனவே பகை.அது இங்கும் தொடருகிறது. இவர்களுக்குள்ளான போர் எதுவரை போகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். அர்ஜூன் தாஸ், வழக்கம்போலவே இறுக்கமான
விமர்சனம்

ஜோஷ்வா இமைபோல் காக்க – திரைப்பட விமர்சனம்

காதலன் கூலிக்கொலைகாரன் என்று தெரிந்ததும் விலகிப் போகிறார் காதலி. அதனால் மனம்மாறிய காதலன், கூலிக்காவலனாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் காதலியையே காக்க வேண்டிய வேலை அவருக்கு வருகிறது.வெறும் வேலை மட்டுமின்றி காதலும் நிரம்பிவழிவதால் இமை போல் காக்கிறார். இதுதான் ஜோஷ்வா இமைபோல்காக்க படத்தின் கதை. நாயகனாக அறிமுகமாகியிருக்கும் வருணுக்கு முதல்படமே முழுமையான படமாக அமைந்திருக்கிறது.
விமர்சனம்

அதோமுகம் – திரைப்பட விமர்சனம்

நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அதேவேளையில் மனிதநேய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.குறிப்பாக மனிதர்களுக்குள்ளான அடிப்படை குணமான நம்பிக்கை பெரிதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதற்குச் சான்றாக வந்திருக்கும் படம் அதோமுகம். நாயகன் எஸ்.பி.சித்தார்த், நாயகி சைதன்யாபிரதாப் ஆகிய இருவரும் காதல் மணம் புரிந்த இணையர். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தரும்
விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா – திரைப்பட விமர்சனம்

நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து நிற்கிறார்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருப்பதுதான் நினைவெல்லாம் நீயடா. நாயகன் பிரஜின் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தி
விமர்சனம்

ரணம் அறம் தவறேல் – திரைப்பட விமர்சனம்

அசாதரணமாக நடக்கும் கொலைகள் அவை குறித்த காவல்துறை விசாரணை அதற்குத் துணையாக அமையும் நாயகன் வைபவ்வின் சிறப்புத்திறன் ஆகியனவற்றைக் கொண்டு படபடப்பாகப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கும் படம் ரணம் அறம் தவறேல். நகரின் பல பகுதிகளில் எரிந்த நிலையில் பல உடல்பாகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அவர்கள் உருவத்தை வரையும் திறமை கொண்ட நாயகன் வைபவ்வை துணைக்கு வைத்துக் கொண்டு அவ்வழக்கை
விமர்சனம்

பைரி – திரைப்பட விமர்சனம்

பைரி என்பது ஒருவகை கழுகின் பெயர். இந்த பைரி வானில் பறக்கும் புறாக்களை வேட்டையாடுபவை.இதை இந்தப்படத்துக்குப் பெயராக வைக்கக் காரணம், படத்தின் கதைக்கரு புறாப்பந்தயத்தை மையப்படுத்தியது என்பதால். தமிழ்நாட்டில் பல இடங்களில் புறாப்பந்தயங்கள் நடந்தாலும் நாகர்கோயிலில் நடக்கும் பந்தயங்கள் சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லப்படுகிறது. அதையே மையமாகக் கொண்டு அந்த வட்டாரவழக்கு மொழியிலேயே
விமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் – திரைப்பட விமர்சனம்

மதுபானக் கடைகள் நிறைந்திருக்கும் நாட்டில் அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும். தமிழ்த் திரையுலகிலும் அவ்வப்போது மதுப்பழக்கத்துக்கு எதிரான திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் கிளாஸ்மேட்ஸ். நாயகன் அங்கயற்கண்ணன், அவருடைய மாமா சரவணசக்தி ஆகிய இருவரும் மொடாக்குடியர்கள். வீடு, தொழில் ஆகியன பற்றி எந்தக் கவலையுமின்றி குடிப்பது மட்டுமே
விமர்சனம்

சைரன் – திரைப்பட விமர்சனம்

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் நாயகன் ஜெயம்ரவி, 14 நாட்கள் விடுப்பில் வெளியே வருகிறார்.விடுப்புநாட்களில் ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு வருகிறார். ஜெயம்ரவி விடுப்பில் வந்த நாட்களில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்வது ஜெயம்ரவிதான் என்று காவலதிகாரி கீர்த்திசுரேஷ் சந்தேகப்படுகிறார். நான் செய்யவில்லை என்கிறார்