பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் படம் ஹரா. மனைவி அனுமோல் மருத்துவம் படிக்கும் மகள் அனித்ரா நாயர் ஆகியோரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன்.திடீரென மகள் தற்கொலை செய்து கொள்கிறார்.அதனால் ராம் என்கிற தனது பெயரை தாவூத் இப்ராகிம் என்று
விமர்சனம்
மனித சக்திகளைத் தாண்டி பன்மடங்கு அதீத சக்தி கொண்ட கதாபாத்திரங்கள் ஆங்கிலப்படங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.அதுபோல் அதீத சக்தி கொண்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவரைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதையைக் கொண்ட படம் வெப்பன். வெப்பன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் ஆயுதம் என்று பொருள்.இந்தப்படத்தின் ஆயுதம் அதீத சக்தி கொண்ட சத்யராஜ். அவருக்கு அதீத சக்தி வந்தது எப்படி? என்று
சமுதாயத்தைப் பிரதியெடுத்தல் அல்லது பிரதிபலித்தல் தாம் கலைகள் என்பார்கள்.மருத்துவக் கனவோடு இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தையும் அவர்தம் பெற்றோரையும் பிரதிபலித்திருக்கும் கலைப்படைப்பு தான் அஞ்சாமை. உலகிலேயே தலை சிறந்த மருத்துவர்களைக் கொண்ட இந்நாட்டில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித்தேர்வு அவசியம் என்கிற சட்டத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் இலட்சணங்களையும் நெற்றிப்பொட்டில்
எந்த உயிரையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது என்கிற வள்ளலார் வழியைத் தீவிரமாகக் கடைபிடித்து வரும் கதாநாயகன் விஜய்கனிஷ்காவுக்கு இரண்டு கொலை செய்தாக வேண்டும் என்கிற நெருக்கடி ஏற்படுகிறது.இவருக்கு ஏன் இந்த நெருக்கடி? நெருக்கடி கொடுப்பது யார்? அதன் பின் நடப்பவை என்ன? என்கிற கேள்விகளுக்கான விடைதான் ஹிட்லிஸ்ட். விஜய்கனிஷ்கா அறிமுக
அக்காலி என்பது பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பேசப்படும் வழக்குமொழி.இதற்கு இறப்பில்லாத மனிதன் என்று பொருள்.இந்தப் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் படம் எப்படி இருக்கும் என்று நினைப்பீர்களோ அப்படியே அமைந்திருக்கிறது படம். சுடுகாடு,சாத்தான்,நரபலி என்று ஏகப்பட்ட அம்சங்களை மையமாக வைத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்க முனைந்திருக்கிறார்கள். போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க
உணர்ச்சிகளைப் பட்டியலிட்டால் முதலில் அன்பு,பாசம் ஆகியனவும் அடுத்து கோபமும்தான் இடம்பெறும்.இந்த வரிசையை மையப்படுத்தி எழுதப்படும் கதைகள் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.இதை உணர்ந்து உருவாகியிருக்கும் படம்தான் கருடன். சசிகுமாரும் உன்னிமுகுந்தனும் நண்பர்கள். உன்னிமுகுந்தனின் தீவிர விசுவாசி சூரி.ஒரு கட்டத்தில் உன்னிமுகுந்தன் பக்கமா? சசிகுமார்
தலைப்பில் இருக்கும் பி டி சார் என்கிற ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் உடற்பயிற்சி ஆசிரியர். இந்தப் படத்தில் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.எனவே படத்துக்கு இந்தப் பெயர். அவர் பணியாற்றும் கல்விக் குழுமத்தில் இருக்கும் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொள்கிறார்.அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம்? என்பதை உணர்ந்து அது கொலை என்று வழக்குப் போகிறார்
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ராமராஜன், ஒரு விபத்தில் சிக்கியதால் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.14 ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சாமானியன். அஜீத்தின் துணிவு படம் போல எடுத்ததும் ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்குள்ளோரைச் சிறை பிடிக்கிறார் ராமராஜன்.வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறார் என்று நினைக்கும்போது அப்படிச் செய்யாமல் மதுரையிலிருந்து மூன்று
சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார். ஓர் அரசியல்கட்சித் தொண்டர் ஜார்ஜ்மரியான், குடும்பம் உறவு நட்பு ஆகியனவற்றைவிடக் கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிற
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு. கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு ஜமீன் குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்யறாரு.அதனால் கடன் தீருமென்று























