தலைப்பில் இருக்கும் பி டி சார் என்கிற ஆங்கிலப் பெயரின் தமிழாக்கம் உடற்பயிற்சி ஆசிரியர். இந்தப் படத்தில் நாயகன் ஹிப்ஹாப் ஆதி ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.எனவே படத்துக்கு இந்தப் பெயர். அவர் பணியாற்றும் கல்விக் குழுமத்தில் இருக்கும் கல்லூரி மாணவி தற்கொலை
விமர்சனம்
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ராமராஜன், ஒரு விபத்தில் சிக்கியதால் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.14 ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சாமானியன். அஜீத்தின் துணிவு படம் போல எடுத்ததும் ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்குள்ளோரைச் சிறை பிடிக்கிறார் ராமராஜன்.வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறார் என்று நினைக்கும்போது அப்படிச் செய்யாமல் மதுரையிலிருந்து மூன்று
சேத்துமான் படம் மூலம் பெரும் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கியிருக்கும் படம் எலக்சன்.அந்தப் படத்தில் ஒரு கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு உலக அளவிலான விசயங்களைப் பேசியவர், இந்தப்படத்தில் ஓர் உள்ளாட்சித் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல்பாடம் நடத்தியிருக்கிறார். ஓர் அரசியல்கட்சித் தொண்டர் ஜார்ஜ்மரியான், குடும்பம் உறவு நட்பு ஆகியனவற்றைவிடக் கட்சிதான் முக்கியம் என்று நினைக்கிற
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு. கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு ஜமீன் குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்யறாரு.அதனால் கடன் தீருமென்று
கடந்த பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசியலில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி வட இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொட்ராக வந்திருக்கிறது தலைமைச் செயலகம். கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ரம்யா நம்பீசன்,ஆதித்யா மேனன்,கனி குஸ்ருதி,நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா,ஷாரா ப்ளாக்,சித்தார்த் விபின்,ஒய்.ஜி.மகேந்திரன், சந்தான பாரதி,கவிதா
மண்ணைப்பொன்னாக்கும் இரகசியக் கலையை அறிந்தவனை ரசவாதி என்பர்.அறிவியலோடு நெருங்கிய தொடர்புடைய ரசவாதத்தை திரைக்கதையில் ஏற்றி இயக்குநர் சாந்தகுமார் கொடுத்திருக்கும் படம்தான் ரசவாதி. படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ், ஒரு சித்தமருத்துவர்.மணவாழ்வில் நடந்த கசப்புகளை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்குச் செல்காறார். அங்கு, மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு,
சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்தும்படியான காட்சிகளைச் சரியாகத் தொகுத்துக் கொடுத்தாலே மக்கள் கலகலப்பாகப் பார்த்து இரசிக்கும் படத்தைக் கொடுத்துவிடலாம் என்று காட்டியிருக்கிறது உயிர் தமிழுக்கு. கேபிள் டிவி தொழிலில் இருக்கும் நாயகன் அமீர், அரசியல்தலைவர் ஆனந்தராஜின் மகளான நாயகி சாந்தினி ஶ்ரீதரன் மீது காதல் கொள்கிறார். அதற்காக அரசியலில் நுழைகிறார். ஒருகட்டத்தில் ஆனந்தராஜ்
கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார். மகனும் அதை ஏற்று அதற்காக உழைக்கிறார். இடையில் எதிர்பாராத பெரும் சிக்கல் ஒன்று வருகிறது.நடிகராகவே முடியாது என்கிற அச்சிக்கலைக் கடந்து இலட்சியத்தை அடைந்தாரா? என்பதைச் சொல்கிறது ஸ்டார். பள்ளி மாணவர், கல்லூரி
அரண்மனை, பேய், நகைச்சுவை ஆகிய அம்சங்களை மையமாகக் படங்களின் வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்களுடனும் புதிய தீயசக்தியின் அறிமுகத்துடனும் வந்திருக்கிறது அரண்மனை 4. பழைய அரண்மனையொன்றை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் சந்தோஷ் பிரதாப்.அவருடைய மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டுமின்றி ஜமீன்தார் டெல்லி கணேஷ், அவரது பேத்தி ராஷி கண்ணா ஆகியோரும் அந்த அரண்மனையில்
குரங்கு பெடல் என்கிற பெயர் அதன் அர்த்தம் ஆகியன இக்கால கட்டத்தினருக்கு முற்றிலும் அந்நியம்.1970 மற்றும் 1980 களில் பிறந்தவர்கள் அனைவருமே இதைக்கடந்துதான் வந்திருப்பார்கள்.அக்கால கட்டத்தினருக்கு மலரும் நினைவுகளையும் இரண்டாயிரத் தலைமுறையினருக்கு ஒரு இனிய வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் படம் குரங்கு பெடல். தொலைக்காட்சிகள் கூட இல்லாத காலத்தில் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது





















