Home Archive by category விமர்சனம் (Page 29)

விமர்சனம்

விமர்சனம்

நண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்

பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அதன்பின் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்யவும் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பி உட்பட பல
விமர்சனம்

போட் – திரைப்பட விமர்சனம்

ஒரு ஊர் இருக்கிறதென்றால் அங்கு கடவுள் மறுப்பாளர்,கடவுளால் வாழும் பிராமணர்,வட இந்தியர்கள், இஸ்லாமியர் உள்ளிட்ட மதத்தவர்கள், தீவிரமாக இயங்கும் தீவிரவாதிகள் என எல்லாவித மனிதர்களும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு ஊரின் சிற்றுருவமாக ஒரு படகை வடிவமைத்து அதைக் கடலுக்குள் அனுப்பி,அதில் பழுதையும் ஏற்படுத்தி அந்தப் படகில் இருப்போர் நிலைமை என்னவாகும்? என்கிற பதைபதைப்பை ஏற்படுத்தும்
விமர்சனம்

பேச்சி – திரைப்பட விமர்சனம்

ஓர் அடர்ந்த வனத்துக்குள் சிலர் பயணப்படுகிறார்கள்.அவர்களுக்கு எதிர்பாராத ஆபத்துகள் வருகின்றன?அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்கிற கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் பேச்சி.இதுபோன்று நிறையப் படங்கள் பார்த்துவிட்டோமே என்று அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களுக்குப் பல ஆச்சரியங்களைக் கொடுக்கும் படமாக வந்திருக்கிறது. காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ்
விமர்சனம்

ஜமா – திரைப்பட விமர்சனம்

கலை வடிவங்களின் முன்னத்தி ஏர்களில் ஒன்றாகத் திகழ்வது தெருக்கூத்து.இரண்டாயிரத்து இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத இக்கலை அழியும் நிலையில் இருக்கிறது என்கிற பொதுவான கருத்து உலவுகிறது.இந்நேரத்தில் தெருக்கூத்துக்கலைஞரின் வாரிசான பாரி இளவழகன், அக்கலைஞர்களுக்குள் நடக்கும் உள்ளரசியலை முன்னிறுத்தி அக்கலை இன்னும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிறுவியிருக்கிறார். ஜமா என்பது
விமர்சனம்

வாஸ்கோடகாமா – திரைப்பட விமர்சனம்

நல்லதுக்குக் காலமில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.நிஜமாகவே அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் வாஸ்கோடகாமா. இந்தப்படத்தில் வாஸ்கோடகாமா என்பது ஒரு சிறை.அதில் நல்லவர்கள் மட்டுமே கைது செய்து அடைக்கப்படுவார்கள்.நல்லவர் என்கிற காரணத்தாலேயே சிறைக்குள் இருக்கிறார் நாயகன் நகுல்.அந்தச் சிறைக்குப் போவதற்காகவே நல்லவராக நடிக்கிறார்
விமர்சனம்

ராயன் – திரைப்பட விமர்சனம்

கெட்டும் பட்டணம் போய்ச் சேர் எனும் முதுமொழிக்கேற்ப இரண்டு தம்பிகள் ஒரு தங்கையுடன் சென்னை வந்து சேர்கிறார் தனுஷ்.அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன்.முதலில் மூட்டை தூக்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து துரித உணவுக்கடை நடத்துகிறார் தனுஷ்.இந்த எளிய குடும்ப வாழ்வுக்குள் தனுஷின் தம்பி சந்தீப்கிஷனால் ஒரு புயல் வீசுகிறது.அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை இரத்தம்
விமர்சனம்

டீன்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரே பகுதியில் வசிக்கும் 12 சிறுவர் சிறுமியர் இணைந்து பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள்.பேச்சோடு நில்லாமல் அடுத்த கட்டமாக கிராமமொன்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயைப் பார்க்கப் போகின்றனர்.வழியில் இன்னொரு சிறுவனும் சேர்ந்து கொள்ள 13 பேர் ஆகிறார்கள். இவர்களுடைய பயணம் சுமுகமாக நடந்துவிட்டால் திரைக்கதை எழுத முடியாதே? அவர்கள் செல்லும் வழியில் பல இடையூறுகள்
விமர்சனம்

இந்தியன் 2 – திரைப்பட விமர்சனம்

இலஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் இலஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றவர் இந்தியன் தாத்தா.இந்தியன் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி இது. இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தில்,சமூக வலைதளங்கள் மூலம் கம்பேக் இந்தியன் என்று பலர் அவரை அழைக்கிறார்கள்.அதனால் அவர் திரும்ப வருகிறார்.வந்து இலஞ்ச ஊழல்களில் திளைக்கும்
விமர்சனம்

7 ஜி – திரைப்பட விமர்சனம்

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 7ஜி என்கிற கதவு எண் கொண்ட வீட்டில் நடக்கும் கதை என்பதாலும் ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் நாயகி சோனியா அகர்வாலே இப்படத்திலும் நாயகி என்பதாலும் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த 7 ஜி வீட்டில் ஸ்முருதி வெங்கட், ரோஷன்பஷீர் தம்பதியினர் குடியேறுகிறார்கள்.அந்த வீட்டில் சில மர்மச் சிக்கல்களை
விமர்சனம்

கல்கி 2898 கிபி – திரைப்பட விமர்சனம்

இது கிபி 2024 ஆம் ஆண்டு.இப்போதிருந்து 874 ஆண்டுகள் கழித்து அதாவது கிபி 2898 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் காம்ப்ளக்ஸ் என்கிற உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உலகத்தை 200 வயது நிரம்பிய ஒற்றை மனிதர் ஆட்சி செய்கிறார்.அவரை அழிக்க ஒரு தெய்வக் குழந்தை பிறக்கப்போகிறது.அந்தக் குழந்தையை அழிக்க அவர் முயல்கிறான்.அந்தக் குழந்தை பிறந்தால்தான் மகாபாரதக்