ஒவ்வொருவருக்கும் பல பிறவிகள் உண்டு என்கிற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட கதை. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவா எனும் அரசனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இப்போதும் நடக்கிறது. அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் படம். 1070 ஆம் ஆண்டில் பெருமாச்சி எனும் நிலப்பரப்பின் தலைவராக
விமர்சனம்
ஒரு போலி பிச்சைக்காரர் தன் பேராசையால் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அதிலிருந்து அவர் மீண்டாரா? அங்கு என்னவெல்லாம் நடந்தன? என்பனவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயன்றிருக்கும் படம் ப்ளடி பெக்கர். ஓர் ஆடம்பர மாளிகையில் நடைபெறும் அன்னதானத்துக்காக ஆதரவற்றோர் சிலர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அவர்களில் ஒருவராகச் செல்லும் பிச்சைக்காரர்,அங்கேயே தங்கி விடுகிறார்.அங்கு ஒரு
ஜெயம் ரவியிடம் இருக்கும் வாதிடும் திறமை பார்த்து அவரைச் சட்டம் படிக்க வைக்கிறார் அவருடைய அப்பா அச்யுத்குமார்.ஆனால்,ஜெயம் ரவியின் செயல்களால் அவரே வீட்டைவிட்டுத் துரத்துகிறார்.இதனால் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்துவரும் ஜெயம்ரவியின் அக்கா பூமிகா,அவரைச் சரி செய்வதாகக் கூறி ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.ஜெயம் ரவி அங்கு போனதும் அக்கா குடும்பத்துக்குள்ளும் சிக்கல்கள். அவை
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்ற இளைஞர், இராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44 ஆவது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 2014 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். முகுந்த் வரதராஜனின் இந்த நிஜ வாழ்க்கை
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்தர வர்க்கமாக மாற குறுக்குவழிகளைக் கையாளுகிறான்.அதில் அவன் வென்றானா?இல்லையா? என்ப்தைச் சொல்லியிருக்கும் படம் லக்கிபாஸ்கர்.இந்தக்கதை 1989 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.அவ்வளவு காலம் பின்னோக்கிப் போய் இந்தக்கதையைச் சொல்லக் காரணம் நவீன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் நிதிமோசடிகள் எப்படியெல்லாம் நடைபெற்றன
இந்து மதத்தில் ரிக், சாம, யஜுர் மற்றும் அதர்வ ஆகிய நான்கு வேதங்கள் இருக்கின்றன.இந்நிலையில் இன்னொரு வேதம் அதாவது ஐந்தாவதாக ஒரு வேதம் இருக்கிறது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எப்படிப் பட்டவை? என்கிற கற்பனையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ஐந்தாம் வேதம். ஒரு பழமையான ஆலயத்தில் இரகசிய இடத்தில் அந்த வேதம் இருக்கிறது.அது வெளிவரக் காத்திருக்கிறார் அக்கோயில்
அன்றாட வாழ்வின் சலிப்பான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் நாட்கள் பண்டிகை நாட்கள்.அவை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைந்துவிடுவதில்லை.பணக்காரர்களுக்குக் கொண்டாட்டமாகவும் ஏழைகளுக்குத் திண்டாட்டமாகவும் மாறிவிடுகின்றன என்பதை நெஞ்சம் நெகிழும் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம்தான் தீபாவளி போனஸ். கணவன் மனைவி ஒரு குழந்தை என அளவாக வாழும் தம்பதியர் விக்ராந்த் ரித்விகா
ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன். சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.அதனால் அமைதி வேண்டி காசிக்குச் செல்கிறார்.அங்கு அவரால்
மறைந்த அப்துல்கலாம் பதினாறு வயதான கலாமாக திரும்ப வருகிறார்.எதற்காக அவர் வந்தார்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அறிவியல் தத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட் டிரைவர். விண்வெளி விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவில் இருக்கும் பிரபா, இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுகிறார்.அவருடைய ஏழ்மை நிலையால் அவரால் உயர்கல்வி படிக்க முடியாமல் போகிறது.அதனால்
கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர்.அது அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை.பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள்.தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையில் முடிவுக்கு வருகிறது.அது எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கும் விமல்,துறு துறு இளைஞராகத்























