அன்றாட வாழ்வின் சலிப்பான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டு இருக்கும் நாட்கள் பண்டிகை நாட்கள்.அவை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக அமைந்துவிடுவதில்லை.பணக்காரர்களுக்குக் கொண்டாட்டமாகவும் ஏழைகளுக்குத் திண்டாட்டமாகவும் மாறிவிடுகின்றன என்பதை நெஞ்சம் நெகிழும் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம்தான்
விமர்சனம்
ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன். சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.அதனால் அமைதி வேண்டி காசிக்குச் செல்கிறார்.அங்கு அவரால்
மறைந்த அப்துல்கலாம் பதினாறு வயதான கலாமாக திரும்ப வருகிறார்.எதற்காக அவர் வந்தார்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அறிவியல் தத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட் டிரைவர். விண்வெளி விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவில் இருக்கும் பிரபா, இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுகிறார்.அவருடைய ஏழ்மை நிலையால் அவரால் உயர்கல்வி படிக்க முடியாமல் போகிறது.அதனால்
கிராமமொன்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர்.அது அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை.பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள்.தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையில் முடிவுக்கு வருகிறது.அது எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கும் விமல்,துறு துறு இளைஞராகத்
காதலுக்காகப் போற்றப்படும் காத்தவராயன் ஆரியமாலா கதையின் தற்கால வடிவமாக வந்திருக்கும் படம் ஆரியமாலா. கிராமமொன்றில் வசிக்கும் நாயகி மனிஷாஜித் கனவில் கண்ட நாயகனை நிஜத்திலும் பார்க்கிறார்.காதல் கொள்கிறார்.காத்தவராயன் கூத்து கட்டும் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்குக்கும் நாயகி மீது காதல் வருகிறது.நாயகியிடம் காதலைச் சொல்கிறார்.அவரும் ஏற்றுக் கொள்வார்.சுபமுடிவாக இருக்கும் என்று
பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று சொல்லி நிறைய திகில் படங்கள் வருகின்றன.அந்தப் படங்களைப் போலவே படம் முழுக்க திகில், பரபரப்பு, இதய படபடப்பு ஆகியன இருக்கின்றன அதற்குக் காரணம் பேயோ பிசாசோ இல்லை என்று சொல்லி வந்திருக்கும் படம் பிளாக். நாயகன் ஜீவாவும் நாயகி பிரியா பவானி சங்கரும் திருமணமான இணையர்.சில நாட்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக புதிதாக உருவாகியிருக்கும் ஒரு குடியிருப்புப்
ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்? இறுதியில் என்ன நடந்தது? என்கிற வினாக்களுக்கான விடையாக வந்திருக்கிறது வேட்டையன்.
தொண்ணூறுகளில் நடக்கும் முக்கோணக்காதல் கதை. அதற்குக் காரணம் தகவல் தொடர்பு வசதிகள் இப்போது இல்லாததால் நடக்கும் நிகழ்வுகளில் தாம் திரைக்கதையின் பலம் அடங்கியிருக்கிறது என்பதுதான். நாயகர்களாக டிட்டோ மற்றும் மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் நிறம், தோற்றம் ஆகியனவற்றிற்கும் திரைக்கதையில் இடம் இருக்கிறது. டிட்டோவின் கதாபாத்திரமும் நடிப்பும் நேர்மறையின் உச்சமாக அமைந்து
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ஆளாகும் நாயகி கவிப்ரியா மனோகரனும் நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள்.இருவரும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்பதால் ஒரு மலைக்காட்டுக்குள் தனிமையில் இருக்கும் வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறார் நாயகி. அங்கு போனதும் நாயகிக்குப் பல எதிர்பாராத சிக்கல்கள்.அவை
விஜய்,சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான சொல் ல்தகா சைஆ.இதை அப்படியே திருப்பிப் போட்டால் காதல் ஆசை. இந்தப்பெயரைப் படத்துக்கு வைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான சதா நாடார். நாயகன் சதா நாடார்,நாயகி மோனிகா சலினா ஆகியோர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் இணையர்.திடீரென நாயகனுக்கு வரும் கனவுகள்





















