Home Archive by category விமர்சனம் (Page 28)

விமர்சனம்

விமர்சனம்

கொட்டுக்காளி – திரைப்பட விமர்சனம்

கதாபாத்திரங்கள் அறிமுகம்,அதன்பின் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை,அதற்குள் காதல்,மோதல்,கலகலப்பு எனப்பல்வகை உணர்வுகள்,இறுதியாக ஓர் அதிரடியான முடிவு அல்லது சோகமான முடிவு சில நேரங்களில் சுகமான முடிவு என்று திரைப்படங்களுக்கு வழக்கமாக இருக்கும் இலக்கணத்தைப் புறந்தள்ளி,சமகால வாழ்வை
விமர்சனம்

போகுமிடம் வெகுதூரமில்லை – விமர்சனம்

பயணத்தை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வரும்.அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது பயணத்தில் காதல் மலரும் நண்பர்களின் பயணம் அல்லது பயணத்தில் நண்பர்களாவது என்று அப்பயணங்கள் இருக்கும்.இந்தப்படமும் ஒரு பயணப்படம்தான்.ஆனால் முற்றிலும் மாறுபட்டு இது ஒரு உடலத்தின் பயணம். அமரர் ஊர்தி ஓட்டுநரான நாயகன் விமல்,தன்னுடைய ஊர்தியில் ஓர் உயிரற்ற உடலை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து
விமர்சனம்

சாலா – திரைப்பட விமர்சனம்

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நாயகன் நாயகிக்கிடையே காதல் வந்தால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கும்,மதுக் குடிப்பகம் வைக்கப் பாடுபடும் நாயகன், மதுவுக்கு எதிராகப் போராடும் நாயகி என்று மதுவை மையப்படுத்திய மையக்கதையின் இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விக்கும் விடையாக வந்திருக்கிறது சாலா படம். நாயகனாக நடித்திருக்கும் தீரன், ஆஜானுபாகுவான உடலுடனும் அப்பாவித்தனமான
விமர்சனம்

டிமாண்டி காலனி 2 – திரைப்பட விமர்சனம்

2015 ஆம் அண்டு வெளியான டிமாண்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமாண்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களில் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்படம் முதல்பாகத்தின் மிகச் சரியான தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. முதல்பாகத்தில் இறந்துவிட்ட அருள்நிதி,இந்த பாகத்தில் உயிரோடு வருகிறார்.அவர்
விமர்சனம்

ரகு தாத்தா – திரைப்பட விமர்சனம்

இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய பெண்,பதவி உயர்வு பெறுவதற்காக இந்தி கற்றுக்கொள்கிறார்.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அது என்ன? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரகுதாத்தா. மொத்தப் படமும் நம்மை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் கீர்த்திசுரேஷ்.திருமணமே வேண்டாமென நினைக்கும் கீர்த்திசுரேஷ் ஒரு அரதப் பழசான காரணத்துக்காக திருமணம்
விமர்சனம்

தங்கலான் – திரைப்பட விமர்சனம்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம்மினத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.அப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? நினைத்தது நடந்ததா? என்பதைச் சொல்லும் படம் தங்கலான். நடிகர் விக்ரம் கடின உழைப்பாளி.தான் ஏற்றிருக்கும் வேடத்துக்காக எந்த எல்லைக்கும்
விமர்சனம்

அந்தகன் – திரைப்பட விமர்சனம்

பியானோ இசைக்கலைஞர் பிரசாந்த்,பிரியா ஆனந்த்தின் மதுக்கூடத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறார்.அங்கு பிரபல நடிகர் கார்த்திக் அறிமுகம் கிடைக்கிறது.அதனால்,அவர் வீட்டுக்கு பியானோ இசைக்கச் செல்கிறார்.அங்கு போனால் அவர் கண் முன்னால் ஒரு கொலை நடக்கிறது.அதன்பின் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் அந்தகன். சில ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றுகிறார்
விமர்சனம்

வீராயி மக்கள் – திரைப்பட விமர்சனம்

குடும்ப உறவுகள் குறித்த படங்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும்.அந்த வரிசையில் வந்திருக்கிறது வீராயிமக்கள். படத்தின் தலைப்பே ஒரு கதையைச் சொல்கிறது. அக்கதையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள். வேல்.இராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கள் ஆகியோர் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அன்பும் பாசமுமாய் வளரும் அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் மோதல்.அதன்பின் எலியும் பூனையுமாய்த்
Uncategorized விமர்சனம்

மின்மினி – திரைப்பட விமர்சனம்

ஒருவரின் கனவை வேறிருவர் நனவாக்கும் மாறுபட்ட சிந்தனை கொண்ட படம்.காட்சியனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மின்மினி. பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்.அவர்களிருவருக்கும் தனித்தனியே இலட்சியங்கள் இருக்கின்றன.இருவருக்குள்ளும் எப்போதும் மோதல்.இந்தச் சூழலில் ஒரு கொடும் விபத்து.அதில் ஒருவர் உயிரைக் காப்பாற்ற இன்னொருவர் உயிர் துறக்கிறார்.அதன்பின்
விமர்சனம்

மழை பிடிக்காத மனிதன் – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலைமுயற்சியில் உயிர்தப்பும் விஜய் ஆண்டனியை உயிரிழந்துவிட்டார் என்று உலகத்தை நம்ப வைத்து வேறொரு ஊரில் வேறொரு பெயரில் இருக்க வைக்கிறார் சரத்குமார்.போன இடத்தில் புதிய சிக்கல்கள் உருவாகின்றன.அவற்றை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் மழை பிடிக்காத மனிதன் படம்.படத்தின் திருப்புமுனைக் காட்சியை ஒரு மழை நேரத்தில் வைத்து