படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான
விமர்சனம்
மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கும் படம் ஃபைட்கிளப். நாயகனாக
1970 களிலிருந்து செயல்பட்டுவந்த சந்தனக்கடத்தல்காரர் என்று அறியப்பட்ட வீரப்பன்,1980 களில் பெரிதாகப் பேசப்பட்டார். அப்போதிருந்து 2014 ஆம் ஆண்டு கொல்லப்படும் வரை முதன்மைச் செய்திகளில் இருந்தார். அதன்பின் அவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் என நிறைய வந்துவிட்டன.கடைசியாக வந்தாலும் அவ்வளவையும் தாண்டி நிற்கிறது நக்கீரன்கோபால் தயாரித்துள்ள
இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் வேலையில் ஆர்வமாக இருக்கும் நாயகனுக்கு விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழல்.அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம், அவருக்கு மருத்துவம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பது பவணந்தியாரின் நன்னூல் பாடல்.12 ஆம் நூற்றாண்டில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.அதேநேரம் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாத்து முன்னோர் வாழ்வியலை தலைமுறைகள் அறியவேண்டும் என்போரும் உண்டு. இரண்டாம்வகையினர் மனநிலையைப் பிரதிபலிக்கும் படம் கட்டில். படத்தின் தலைப்பில் இருக்கும் கட்டிலைப் பாதுகாக்க கதாநாயகன் போராடுகிறார்
ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாலாஜிமுருகதாஸ் நாயகனாக நடித்திருக்கும் படம் வா வரலாம் வா.பல வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு விடுதலையாகிறார் பாலாஜி முருகதாஸ்.அவருடனே இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. வெளியில் வந்த பின்பு உழைத்து வாழ நினைக்கிறார்கள்.சிறைக்குப் போய்வந்தவர்களுக்கு வேலை தர மறுக்கிறது சமுதாயம்.அதனால் குறுக்குவழியில் செல்லும் ஒருவரிடம் வேலைக்குச் சேருகிறார்கள்.
ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நயன்தாராவுக்கு பெரிய சமையல்கலைஞராக வேண்டும் என்பதுதான் ஆசை.பெண்கள் சமையல்கட்டை விட்டு வெளியே வரப் போராடும் கதைகள் பார்த்திருக்கிறோம்.இங்கோ சமையல் கலைஞராவதற்கே போராடவேண்டியிருக்கிறது. அது ஏன்? என்பதற்கான விடையாக விரிந்திருக்கிறது படம். அன்பான அமைதியான நயன்தாரா.பெரும்பாலும் மெல்லிய புன்னகையுடன் வலம்வருகிறார்.அசைவ உணவுகளை விரும்பி
ஈகோ என்பது சுயநலம். தன்னைப் பற்றியே சிந்திப்பது. தன்னைப்போல் யாருமில்லை என்ற தலைக்கனம். தான் சொல்வதே சரி என்ற அகங்காரம் ஆகிய குணங்களின் ஒட்டு மொத்த வெளிப்பாடுதான் ஈகோ. இதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் படம் பார்க்கிங். ஒர் அடுக்குமாடிக் குடியிருப்பு.அங்கு வசிக்கும் அரசு அதிகாரியின் குடும்பம், அங்கு புதிதாகக் குடியேறும் இளம் இணையர்.இணையரில் கணவர்
ஒரு மலைகிராமம், எளியமக்கள், அவர்களுடைய மிக அடிப்படைத் தேவையான மருத்துவ வசதி ஆகியன பொதுப்பார்வையில் மிகச் சின்ன விசயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வலி என்பதையும் இந்தச் சின்ன விசயத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய பெரிய அரசியலையும் அழகாக வெளிப்படுத்தும் படம் நாடு. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைகிராமம்தான்























