ஒரு வீட்டுக்குள் பேய்கள் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்பதைப் பல்வேறு முடிச்சுகளோடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் சொல்லியிருக்கும் படம் சைத்ரா. பேய்கள் உள்ள வீட்டுக்குள் யாஷிகா ஆனந்த், அவிதேஜ் தம்பதியினர் வசிக்கின்றனர்.தன்னைப் பேய்கள் கொன்றுவிடும் என்று யாஷிகா
விமர்சனம்
நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம். அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு.
பிரபல கொள்ளையன், கொள்ளையடித்த பணத்தின் மூலம் திரைத்துறையிலும் இயங்குகிறார்.கோயம்புத்தூர் நகைக்கடையில் நடக்கும் ஒரு பெரியகொள்ளையில் அவர் மீது பழி விழுகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிற்து? என்பதுதான் ஜப்பான் படம். கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார் கார்த்தி.எல்லாவற்றிலும் ஓர் அலட்சிய மனோபாவம் அவருக்கு இலகுவாகக் கைவந்திருக்கிறது.அதோடு,
ஒரு ரவுடியை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர்.அவர் ஏன் அப்படி நினைக்கிறார்? என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் பல்வேறு கிளைக்கதைகளையும் இணைத்துக் கொடுத்திருக்கும் படம் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ். ரவுடியாக நடித்திருக்கிறார் ராகவாலாரன்ஸ்.தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்ட முயன்றுள்ளார். அவர் கதாநாயகன் என்பதால் கடைசிவரை கெட்டவனாகவே இருக்கமுடியாது
பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களுக்கானவை.ஆனால், அவை பெரும்பாலும் பெரும்பாலானோருக்குத் திண்டாட்டங்களை ஏற்படுத்துபவை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதார்த்தம். அந்த எதார்த்தம், ஓர் அழகிய கலைப்படைப்பாக மாறினால்? அதுதான் கிடா. விவசாயி பூஇராம், தீபாவளிப் பண்டிகைக்கு தன் பேரனுக்காகப் புத்தாடை வாங்க ஆசைப்படுகிறார்.வறுமை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே, வீட்டில் இருக்கும் ஆட்டை
ஒரு பள்ளி ஆசிரியை, தனக்கு துப்பாக்கி வேண்டுமெனக் கேட்கிறார். காவல்துறை மறுக்கிறது.அதனால் நீதிமன்றம் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது? அவர் ஏன் துப்பாக்கி கேட்கிறார் ஆகிய கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கும் படம் லைசென்ஸ். ஏஏஏ சின்ன மச்சான் உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் நம் செவிகளுக்குள் நிறைந்த பாடகி ராஜலட்சுமி இந்தப்படத்தில் நாயகியாக நடித்து நம் கண்களுக்குள்
கிரிக்கெட் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, தந்தை மகன் பாசத்தை உறுதுணையாகக் கொண்டு சாதனை செய்ய வயது தடையில்லை எனும் கருத்தைச் சொல்லியிருக்கும் படம் கபில்ரிட்டர்ன்ஸ். கிரிக்கெட் விளையாட்டே பிடிக்காத அப்பா,அவருடைய மகனுக்கு கிரிக்கெட் மீது தீராத மோகம்.முதலில் எதிர்த்து பிறகு ஒப்புக்கொள்கிறார் அப்பா.அதன்பின் மகன் விளையாடப் போன இடத்தில் அவனுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க அவரே
தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் படம் கூழாங்கல். குடிநோய்க்கு ஆளான கருத்தடையான், பொண்டாட்டி என்றால் புருசன் என்ன செய்தாலும்
அப்பா அம்மாவை இழந்து தாத்தாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பள்ளிமாணவியாக நாயகி ரக்ஷனா அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வருகிறார் நாயகன் ஷ்யாம்செல்வன். அதுவரை முதல்மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்த நாயகி, நாயகன் வந்தபின்பு இரண்டாமிடத்துக்குப் போகிறார். இதனால் நாயகன் மீது கோபம் கொண்டு அவரிடமே சவால் விட்டு முதலிடம் பிடிக்கப் போராடுகிறார். அதையொட்டி நடக்கும்
இமாச்சலபிரதேசத்தில் மனைவி த்ரிஷா மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்துடன் வசித்துவருகிறார் விஜய் அவர் பெயர் பார்த்திபன். அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அவர் செய்யும் செயலால் மிகவும் புகழ்பெறுகிறார். அதன்பின் அவரைத் தேடி போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்யும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் வருகிறார்கள். அவர்கள் வந்து பார்த்திபனை நீ லியோதானே என்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படிக்





















