ஒரு பெரியவீட்டில் தனியாக வசிக்கிறார் நாயகன் வெங்கட்ரெட்டி. கட்டிடப்பொறியாளரான அவர் உயர்நடுத்தர வாழக்கையில் இருக்கிறார்.அடிக்கடி கொடும்கனவுகள் அவருக்கு வருகிறது. கனவைத் தாண்டி திடீரென அவர் வீட்டுக்குள் மர்மநபர்களின் நடமாட்டம் அதைத் தொடர்ந்து சில கொலைகள் என பரபரப்பு ஏற்படூகிறது. யார் அந்த மர்ம
விமர்சனம்
நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். சாதியப்பாகுபாடு தலைவிரித்தாடும் அக்கல்லூரி சாதி கடந்து விஜய்விஷ்வாவும் அவரது நண்பர்களும் நட்பாக இருக்கின்றனர். புற உலகின் சூழ்ச்சி அவர்களை எப்படி மாற்றுகிறது? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்கிற படம்தான் சாயம். விஜய்விஷ்வா கல்லூரி மாணவர் பாத்திரத்துக்குத் தேவையான அளவு
வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட். நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது. இடையில்,
ஆண்களின்(அண்ணன்) அவசர முடிவால் பெண்களுக்கு (தங்கை) ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்சமல்ல. கெளரவத்துக்காக அவரசத்தில் ஆண் எடுக்கும் சில முடிவுகள் அந்தப்பொழுதில் சரியானதாக இருந்தாலும் அதன் பின் விளைவுகள் காலம் முழுவதும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் இருக்கும். அந்த மாதிரி ஒரு குடும்பக் கதையின் ஆராத ரணம்தான் ‘மருத’. பாரதிராஜாவின் சீடரான ஜி.ஆர்.எஸ். கதைக்காக பெரிதாக
சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தர்புகாசிவா, கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அவர் இப்போது இயக்குநராக உயர்ந்திருக்கிறார். அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல்படம் முதல் நீ முடிவும் நீ.நேரடியாக ஜீ5 இணையத்தில் வெளியாகியிருக்கிறது இப்படம். நாயகி அமிர்தா மாண்டரின்,நாயகனாக கிஷன்தாஸ் மற்றும்
தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும். சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து மருவி மருவி புதுச்சொல் ஆகியிருக்கும். அதன் முழுப்பொருள் புரியாமலேயே நாம் பேசிக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட சொற்களில் ஒன்றுதான் பூச்சாண்டி. பூசாண்டி என்றால் பேய் பூதம் வகையைச் சேர்ந்த ஒருவர்
கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே
2009 இல் நின்றுபோன கருவிப்போருக்குப் பின் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பது முழுமையான கட்டுக்கதை, இன்னும் அவர்கள் நுட்பமான இனவழிப்பு பாரம்பரிய நிலமழிப்பு ஆகியனவற்றுக்கு ஆட்பட்டு சொல்லொணாத் துயரடைந்து வருகிறார்கள் என்பதை ஆழமாகவும் அழகியலுடன் கூடிய கலைப்படைப்பாகவும் சொல்லியிருக்கிற படம் சினம்கொள். ஈழ ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி,புற்று நோயால்
ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் நல்லது, அல்லது நடந்தால்? இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் கார்பன். நாயகன் விதார்த்துக்கு இது இருபத்தைந்தாவது படமாம். சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படமாக அமைந்திருக்கிறது. ஜாலியாகப் பேசும் காட்சியிலும் சீரியசாகவே முகத்தை வைத்திருக்கிறார்.
பெண்களை உயிராகப் பார்க்காமல் உடலாகப் பார்த்து அவற்றைக் காட்சிப்படுத்தி அதற்கு விலை நிர்ணயிக்கும் ஒரு கூட்டம்.அழகான பெண் என்றால் இலட்சக்கணக்கில் விலை. அழகற்ற பெண் என்றால் 999 ரூபாய் விலை என்பதுதான் பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்கிற படத்தலைப்புக்குக் காரணம். முதலில் பெண் விலை என்றிருந்த தலைப்பு பலருடைய எதிர்ப்பு காரணமாக பென் விலை என்று மாறியிருக்கிறது. அக்கொடூர மனம்





















