2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் பெல்லிசூப்புலு. பெரியவெற்றி பெற்ற அந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் அக்டோபர் 22 ஆம் நாள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே. அப்பட வெளியீட்டுக்குப் பின் அதன் இயக்குநர் கார்த்திக் சுந்தருடன் ஓர்
செய்திகள்
அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அஜீத் நடிக்கும் படத்தை எச்.வினோத்தே இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டுவருகிறது. அதற்கான முன்
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாள். அதையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று வற்புறுத்துவதாகக்
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நவம்பர் 4 தீபாவளி நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 18 அன்று, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட அறிக்கையில்…. திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது “மாநாடு”. முழுவீச்சில் தயார்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக எல்லாம்
நடிகர் விக்ரம் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகான் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. கோப்ரா படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள். இவற்றிற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய பேச்சுவார்த்தைகள்
புது இயக்குநர் சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை புது இயக்குநர் அசோக் இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும்
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தையொட்டி ரஜினி நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் ஆர்யா ஆகியோர் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. எனிமி படத்தின் வியாபாரம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு தவிர மற்ற விநியோகப்பகுதிகளுக்கான விநியோகஸ்தர்கள் இறுதி
கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்ப்டத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது குரல்பதிவு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.படத்துக்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகனின் மகன் அஜிதன் குரல்பதிவைக்
மெட்டிஒலி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. இவர் பல மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் மறைவு சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் மறைவுக்குப் பலரும் இரங்கல்




















