பாரதிராஜா,வசந்த்ரவி,ரவீனாரவி,ரோகிணி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு தர்புகாசிவா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை ஆர் ஏ ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடமிருந்து வாங்கி விக்னேஷ்சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்
சினிமா
நடிகர் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் மலையோரம் வீசும் காத்து. இப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அங்கு படப்பிடிப்பு நடந்த நேரத்தில் யோகிபாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும் ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் நடந்தது. ஒன்றாகப் பணியாற்றும் போது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வழக்கப்படி இது நடந்துள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழ்த்திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்துப் பாராட்டுகளைத்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியுள்ளன.இவற்றிற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால், அடுத்து அவர் தெலுங்குப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படம் முடிந்ததும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. அவற்றிற்கடுத்து,
தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது. இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள்
அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ள படம் அன்பறிவு. இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று
எனிமி படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. லத்தி எனப்பெயரிடப்பட்டிருக்கும் விஷாலின் 32 ஆவது படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். அதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து
அஜீத்குமார் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர் ஷரவண சுப்பையா. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் மீண்டும். ‘மீண்டும்’ படத்தில் நாயகனாக கதிரவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர். மேலும்,இயக்குநர் ஷரவண
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள மாறன் திரைப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்கடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வெளியாகவிருக்கிறது. இப்போது அவர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
அசோக் செல்வன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இதில் நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் கலந்துகொண்டார். இதனால் கமல் சர்ச்சையைச் சந்தித்துள்ளார். இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.





















