சினிமா செய்திகள்

எஸ் கே 20 படப்பிடிப்பு இன்று தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “எஸ்கே20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது.

2022 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘எஸ்கே20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.

காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது. இந்தப்படப்பிடிப்பில் நடிகர் சத்யராஜ் முதலாக முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

தற்போதைக்கு ‘எஸ்கே20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமான ‘ஜதி ரத்னதாலு’ படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்)
நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது இதுவே முதல்முறை.

இது படத்திற்கு இரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related Posts